விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 7, 2010
- ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் கிருஷ்ணா வைகுந்தவாசன் (படம்).
- புவிநிலைச் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும் செயற்கைக் கோள் புவிவானில் ஒரே இடத்தில் இருந்து புவியின் குறிப்பிட்ட ஓர் இடத்தை எந்நேரமும் படமிட முடியும்.
- நாம் காணும் எல்லாப் பொருட்களின் பிம்பமும் நமது விழித்திரையில் தலை கீழாகத் தான் விழும். மூளை தான் இவற்றை நேராக மாற்றுகிறது.
- புற்று நோய்க்கு கண்கண்ட மருந்தான மீத்தோடிரெக்சேட்டைக் கண்டறிந்தவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த எல்லப்பிரகத சுப்பாராவ் ஆவார்.
- சிவகீதை என்பது இராமனுக்கு சிவபெருமான் உபதேசித்தருளியதாய்க் கூறப்படும் பாடல்களைக் கொண்டுள்ள நூலாகும்.
- எகிப்தின் சாலை அமைப்புகள், வீடு அமைப்பைப் போலவே காயல்பட்டினம் நகரில் வீடுகள், சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. பெண்கள் நடந்து செல்வதற்கென்றே தனியாக வீதிகளும் உள்ளன.
- இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் இயற்றப்பட்ட பாடல் தான் வங்காளதேசத்தின் நாட்டுப்பண்ணாக உள்ளது.