விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 14, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு. இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. படத்தில் ஒரு பொய்க்கால் குதிரையும் அதனருகில் மயிலாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மாதிரியுருவும் உள்ளன.

படம்: நற்கீரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்