விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 28
Appearance
நவம்பர் 28: விடுதலை நாள் - பனாமா (1821), அல்பேனியா (1912), மூரித்தானியா (1960)
- 1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் அத்திலாந்திக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார்.
- 1942 – அமெரிக்காவின் பாஸ்டன் நகர இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 492 பேர் இறந்தார்கள்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியையும், யப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், உருசியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் தெகுரானில் சந்தித்துப் பேசினார்கள் (படம்).
- 1848 – மாத்தளைக் கலகத்தின் தலைவரும், கண்டி இராச்சியத்திற்கு உரிமை கோரியவருமான கொங்காலேகொட பண்டாவிற்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவர் பின்னர் மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
- 1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
- 1989 – பனிப்போர்: செக்கோசிலோவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
வி. கே. வெள்ளையன் (பி. 1918) · பொ. ம. இராசமணி (இ. 2009)
அண்மைய நாட்கள்: நவம்பர் 27 – நவம்பர் 29 – நவம்பர் 30