விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 20
Appearance

- 1658 – இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.
- 1945 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: 24 நாட்சி போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு நியூரம்பெர்க்கில் ஆரம்பமானது.
- 1962 – சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது.
- 1977 – ஆறு ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
- 1994 – அங்கோலா அரசுக்கும் யுனிட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா (படம்) கசக்ஸ்தானில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- 1999 – இலங்கையில் மன்னார், மடுத் தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 31 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
எம். கே. ராதா (பி. 1910) · ஜி. ராமநாதன் (இ. 1963)
அண்மைய நாட்கள்: நவம்பர் 19 – நவம்பர் 21 – நவம்பர் 22