விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 26
Jump to navigation
Jump to search
- 1825 – முதலாம் நிக்கலாசு மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான உருசியத் தாராண்மைவாதிகள் சென் பீட்டர்ஸ்பேர்க் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.
- 1882 – யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது
- 1896 – இலங்கை, சிலாபம் நகரில் சோனகர்களுக்கும், கத்தோலிக்க சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் வெடித்தது.
- 1898 – மேரி கியூரி, பியேர் கியூரி ஆகியோர் ரேடியத்தைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
- 1991 – சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.
- 2003 – தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் 26,000 பேர் உயிரிழந்தனர்.
- 2004 – வடக்கு சுமாத்திராவை 9.1 அளவு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தாக்கியதில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள், மலேசியா, மியான்மர், வங்காளதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 300,000 பேர் வரை இறந்தனர் (படத்தில் தாய்லாந்தில் ஆழிப்பேரலை).
முருகு சுந்தரம் (பி. 1929) · எஸ். யேசுரத்தினம் (பி. 1931) · சாவித்திரி (இ. 1981)
அண்மைய நாட்கள்: திசம்பர் 25 – திசம்பர் 27 – திசம்பர் 28