வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் டிசம்பர் 2008
- டிசம்பர் 30:
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியக் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தது. (பிபிசி)
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வங்காளதேச நாடாளுமன்றத் தேர்தல்களில் மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. (ரெடிஃப்)
- டிசம்பர் 29: அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மூழ்கியிருக்கலாமென அஞ்சப்படுகிறது. 100 பேர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டனர். (பிபிசி)
- டிசம்பர் 28: இஸ்ரேல் காசாக் கரையில் தொடர்ந்து குண்டுகளை வீசியது. முன்னூறுக்கும் அதிகமானோர் மொத்தமாகக் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- டிசம்பர் 27:
- காசா பகுதியில் இஸ்ரேல் குண்டுகளை வீசியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 225 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். (பிபிசி)
- காசாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரவேலின் தென்பகுதியில் வீழ்ந்து வெடித்ததில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டு ஆறு பேர் சிறு காயங்களுக்குள்ளாயினர். (வைநெட்)
- டிசம்பர் 26: பாகிஸ்தான் 5 முதல் 20 ஆயிரம் கூடுதலான படைவீரர்களை இந்திய எல்லைப்பகுதிக்கு அனுப்பியது. (வாஷிங்டன் போஸ்ட்)
- டிசம்பர் 23: கினியின் அதிபர் லன்சானா கொண்டே இறந்ததை அடுத்து அங்கு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. (பிபிசி)
- டிசம்பர் 22: மெக்சிக்கோவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 9 இராணுவத்தினரின் உடல்களை காவற்துறையினர் கண்டெடுத்தனர். (சீஎனென்)
- டிசம்பர் 21:
- அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சிரின் எபாடியின் மனித உரிமைகள் அலுவலகத்தை ஈரானியக் காவற்துறையினர் மூடினர். (ராய்ட்டர்ஸ்)
- அமெரிக்காவில் டென்வர் நகர விமான நிலையத்தில் விமனம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 38 பேர் காயமடைந்தனர். (பூளூம்பேர்க்)
- டிசம்பர் 20: சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக் கடலில் போடப்பட்டுள்ள கடலுக்கடியிலான கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இணைய சேவை கடும் பாதிப்பைச் சந்திதது. (ராய்ட்டர்ஸ்)
- டிசம்பர் 18: ருவாண்டாவில் 1994 இல் இடம்பெற்ற இனப்படுகொலையில் ஒரு லட்சம் மக்களைக் கொலை செய்தமையில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அந்நாட்டு முன்னாள் பாதுகாப்பு அதிகாரி தியோனெஸ்ட் பகோசோராவுக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. (ராய்ட்டர்ஸ்)
- டிசம்பர் 16: இலங்கையின் தென்பகுதியில் வாதுவை என்ற இடத்தில் மூன்று பேருந்துகள் மோதிக்கொண்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். ப23 பேர் காயமடைந்தனர். (டெய்லிமிரர்)
- டிசம்பர் 15: தாய்லாந்தின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் அபிசித் வெயிச்சச்சிவா தெரிவு செய்யப்பட்டார். (பிபிசி)
- டிசம்பர் 14: பிலிப்பீன்ஸில் பயணிகள் படகொன்று மூழ்கியதில் அதில் பயணம் செய்த 28 பேர் பலியானதுடன் 22 பேர் காணாமல் போயினர். (ஏஎஃப்பி)
- டிசம்பர் 10:
- கால்வாய் தீவுகளில் ஒன்றான சார்க்கில் முதற் தடவையாக மக்களாட்சி முறையிலமைந்த தேர்தல்கள் இடம்பெற்றன. (பிபிசி)
- எச்டி 189733 பி என்ற கோளில் நீராவி, காபனீரொட்சைட்டு இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. (நேச்சர்)
- டிசம்பர் 9:
- இலினொய் செனட்டர் பதவியை விற்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலினொய் மாநில ஆளுநர் ரொட் பிளாகோயேவிச் கைது செய்யப்பட்டார். (மார்க்கெட் வோட்ச்)
- காங்கோ மக்களாட்சிக் குடியரசு அரசுக்கும் போராளிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் ஐநாவின் மத்தியத்தில் கென்யாவில் ஆரம்பமாயின. (சீஎனென்)
- டிசம்பர் 6: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் காவல்துறையினருக்கும் ஆயுததாரிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். (வாஷிங்டன் போஸ்ட்)
- டிசம்பர் 5:
- எதிர்வரும் இந்திய மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. (யாஹூ!)
- முன்னாள் அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர் ஓ. ஜே. சிம்சன் கடத்தல், மற்றும் கொள்ளை தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். (ஏஎஃப்பி)
- பாகிஸ்தான், பெஷாவரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- டிசம்பர் 4: 1978 இல் படுகொலை செய்யப்பட்ட ஆப்கானிஸ்தானின் முதலாவது அதிபர் முகமது தாவூத் கானின் உடல் கண்டெடுக்கபட்டது. (பிபிசி)
- டிசம்பர் 2:
- சிம்பாப்வேயில் வாந்திபேதி நோய் காரணமாக ஆகஸ்ட் 2008 முதல் 425 பேர் இறந்தனர். (டெலிகிராப்)
- தாய்லாந்தின் ஆளும் மக்கள் சக்தி கட்சியையும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேலும் இரு கட்சிகளையும் அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தடை செய்துள்ளது. இதனையடுத்து பிரதமர் சொம்ச்சாய் வொங்சவாட் தனது பதவியைத் துறந்தார். (பிபிசி)
- டிசம்பர் 1: ஐக்கிய அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா தனது வெளியுறவு அமைச்சராக ஹிலரி கிளிண்டனைத் தேர்ந்தெடுத்தார். (ராய்ட்டர்ஸ்)