வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சனவரி 2014
- சனவரி 31:
- பிலிப்பீன்சு இராணுவத்தினருக்கும் பாங்சமாரோ இசுலாமிய விடுதலை இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் 52 போராளிகள் உட்பட 53 பேர் கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டனர். ஏஎஃப்பி)
- அமெரிக்க அரசுத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கையை வந்தடைந்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அமெரிக்கத் தூதரகத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். (தமிழ்வின்)
- சனவரி 30:
- இந்தியாவிற்குள் ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேசத்தின் ஜமாத்-இ-இசுலாமி தலைவர் மொதியுர் ரகுமான் நிசாமிக்கு தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. (பிபிசி)
- மன்னார் மனிதப் புதைகுழி: மேலும் இரண்டு மண்டையோடுகள் மீட்கப்பட்டதை அடுத்து மொத்த எலும்புக்கூடுகள் 55 ஆக உயர்ந்துள்ளது.
- பக்தாத் நகரில் இடம்பெற்ற ஆறு தற்கொலைத் தாக்குதல்களில் 24 பணயக் கைதிகள் கொல்லப்பட்டனர். [(ராய்ட்டர்சு)
- பிலிப்பீன்சு சிறையில் இருந்து 182 கைதிகள் தப்பித்தனர். இவர்களில் 148 பேர் கைது செய்யப்பட்டனர். (பொக்சு)
- சனவரி 29:
- மன்னார் மனிதப் புதைகுழி: மேலும் ஐந்து மண்டையோடுகள் மீட்கப்பட்டதை அடுத்து மொத்த எலும்புக்கூடுகள் 53 ஆக உயர்ந்துள்ளது.
- பிலிப்பீன்சில் மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிக்கும் அரசுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற வன்முறைகலில் 40 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இந்தியாவின் மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று எண்ணெய்த் தாங்கியுடன் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர். (என்டிரிவி)
- எட்வேர்ட் சுனோவ்டன் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். (புளூம்பர்க்)
- சாதாரண கலங்களை குருத்தணுவாக மாற்றும் முயற்சியில் அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். (நியூயோர்க் டைம்சு)
- சனவரி 28:
- நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு உக்ரைன் பிரதமர் மிக்கொலா அசாரொவ் தனது பதவி விலகல் கடிதத்தை அரசுத்தலைவரிடம் கையளித்தார். (சிபிசி)
- சீனாவின் கிழக்கே படவைக் காய்ச்சலால் 19 பேர் இறந்ததை அடுத்து அங்கு கோழி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. (நியூஸ்.கொம்)
- சனவரி 27:
- மன்னார் மனிதப் புதைகுழி: மேலும் மூன்று மண்டையோடுகள் மீட்கப்பட்டதை அடுத்து மொத்த எலும்புக்கூடுகள் 47 ஆக உயர்ந்துள்ளது.
- நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகளில் குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகள் சென்னையில் துவங்கியது
- நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் ரெக்சினைப் படுகொலை செய்தாரென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பலத்த காவலின் மத்தியில் மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டார். (தமிழ்மிரர்)
- சனவரி 26
- அந்தமான் தீவுக் கரையில் சுற்றுலாப் படகு மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்தனர், 11 பேரைக் காணவில்லை. (பிபிசி)
- 2014 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று ஆண்கள் இறுதிப் போட்டியில் ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா 6-3, 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில் நடாலை வென்றார். (பிபிசி)
- கிரேக்கத்தின் கெபலோனியா தீவை நிலநடுக்கம் தாக்கியது
- சனவரி 25:
- மன்னார் மனிதப் புதைகுழி: மேலும் ஒரு மண்டையோடு மீட்கப்பட்டதை அடுத்து மொத்த எலும்புக்கூடுகள் 43 ஆக உயர்துள்ளது. (தமிழ்வின்)
- 2007 ஆம் ஆண்டில் கப்பல் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் அறுவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- அல்லாஹ் பெயரால் எழுந்த சிக்கலை அடுத்து மலேசிய அரசு அங்கு இனப்படுகொலை நடத்துவதாக மலேசியக் கிறித்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள். (மலே மெயில்)
- சனவரி 24:
- நாடு திரும்ப விரும்பிய இலங்கைப் பணிப்பெண்கள் மூவருக்கு சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- சனவரி 23:
- எஸ்என் 2014ஜே என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பு மெசியர் 82 என்ற விண்மீன் பேரடையில் கண்டுபிடிக்கப்பட்டது, (AAVSO)
- சனவரி 22:
- தென்னாப்பிரிக்காவில் மிக அரிதான நீல வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி)
- புவி சூடாதல் தொடர்வதாக நாசா, மற்றும் தேசிய கடல், வளிமண்டல நிருவாக மையம் அறிவித்துள்ளன. (ஏபிசி)
- சனவரி 21:
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் 700 பேர் தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர். (லங்காசிறீ).
- உக்ரைன் தலைநகர் கீவில் இரண்டாம் நளாகக் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை இடம்பெற்றது. (பிபிசி)
- தீவிரவாதிகள் 26 பேர் ஈராக்கில் தூக்கிலிடப்பட்டனர். (ஏபி)
- இந்தியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்து விட்டதாகக் கூறி, 15 பேரின் மரணதண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்துள்ளது. (பிபிசி)
- சனவரி 20:
- நியூசிலாந்தின் வடக்குத் தீவில் தலைநகர் வெலிங்டனுக்கு அருகே 6.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (நியூசிலாந்து எரால்டு)
- உருசியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரசுத்தலைவர் பூட்டினுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் (லங்காசிறீ).
- பிரான்சின் தென் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர் (லங்காசிறீ).
- சனவரி 19:
- பாக்கித்தானில் பான்னு நகரில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நோர்வேயின் வரலாற்றுப் புகழ்மிக்க லார்டல்சியோரி என்ற கிராமத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 10 வீடுகள் சேதமடைந்தன. (பிபிசி)
- ஐக்கிய அரபு அமீரகத்தில் 18-30 வரையான ஆண்களுக்குக் கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என பிரதமர் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்தார். (அராபியன் பிசினெசு)
- ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து ஈரானில் உள்ள அணு உலைகளைப் பார்வையிட பன்னாட்டு அணுவாற்றல் கழக நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தெகரான் வந்து சேர்ந்தனர். (தினமணி)
- ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார். (பிபிசி)
- செவ்வாய்க் கோளில் தானியங்கள் பயிரிட முடியும் என அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். {லங்காசிறீ)
- நாளாந்தம் 20 கோடி குறுந்தகவல்களை ஐக்கிய அமெரிக்கா உளவு பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லங்காசிறீ)
- பிபிசி ஊடகவியலாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கொம்லா டுமொர் காலமானார் (பிபிசி).
- சனவரி 18:
- மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் நான்கு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. (பிபிசி)
- உருசியாவின் தாகெஸ்தான் மாநிலத்தில் மக்காச்கலா நகருக்கு அருகில் பாதுகாப்புப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் 7 இசுலாமியப் போராளிகள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- தெற்கு சூடானின் போர் நகரை இராணுவத்தினர் போராளிகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றினர். (பிபிசி)
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் மத வன்செயல்கள் இடம்பெற்றுள்ளன. (பிபிசி)
- சனவரி 17:
- மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. (தமிழ்வின்)
- தாய்லாந்து, பேங்காக் நகரில் அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் குண்டுகள் வெடித்ததில் பலர் படுகாயமடைந்தனர். (ஏபி)
- காபூலில் உணவகம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் 14 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட சப்பானியர்களில் கடைசியாக சரணடைந்தவர்களில் ஒருவர் ஹிரூ ஒனோடா (1974 இல் பிலிப்பீன்சில் சரணடைந்தார்) 91வது வயதில் காலமானார். (சீஎனென்)
- இங்கிலாந்தின் வின்ஸ்டர் நகரில் 1999 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட இடுப்பு வளைய எலும்புத் துண்டு பேரரசர் ஆல்பிரட் அல்லது அவருடைய மகன் மூத்த எட்வர்டுடையது என கணிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- மும்பை நகரில் முஸ்லிம் மதத்தலைவர் முகம்மது புரானுதீன் வீட்டில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். (எஸ்பிஎஸ்)
- சனவரி 16:
- வட மாகாண சபை முதலமைச்சர் க. வி. விக்னேசுவரனின் புதிய உள்ளூராட்சி அமைச்சு பணியகம் யாழ்ப்பாணம், இல. 26, சோமசுந்தரம் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. (தமிழ்வின்)
- ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் பிரிவினர் ஈராக்கியர்களின் உடல்களை எரிக்கும் படங்கள் வெளியிடப்பட்டன. (சீஎனென்)
- ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வெப்பநிலை 43.பாகை செல்சியசை எட்டியதை அடுத்து ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. (ராய்ட்டர்சு)
- சனவரி 15:
- இந்தியக் கோயில் ஒன்றில் திருடப்பட்ட 11ம்-12ம் நூற்றாண்டு சிற்பங்களை ஐக்கிய அமெரிக்கா [இந்தியா]]விடம் திரும்ப ஒப்படைக்கவிருக்கிறது. (பிபிசி)
- ஒருபால் திருமணம் புரிவோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டம் நைஜீரியாவில் நிறைவேற்றப்பட்டது. (விஓஏ)
- தேசிய பாதுகாப்பு முகவர் நிலயன் கணினிகளை நோட்டமிட வானொலி அலைகளைப் பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (நியூயோர்க் டைம்சு)
- சனவரி 14:
- மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை அருகி வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
- சனவரி 13:
- புவேர்ட்டோ ரிக்கோ கரையோரப் பகுதியில் 6.5 நிலநடுக்கம் பதிவானது. (ராய்ட்டர்சு)
- போர்த்துகல் காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2013 ஃபீஃபா தங்கப் பந்தை வென்றார். (தி டெலிகிராப்)
- சீனா வூ-14 எனப்படும் மீயுயர்வேக ஏவுகணையை சோதித்தது. இதன் அதியுயர் வேகம் மாக் 8 முதல் 12 ஆகும். (நியூஸ்மாக்ஸ்)
- இலங்கை, நீர்கொழும்பு பகுதியில் ஆமைகளை இறைச்சிக்காக கொலைசெய்து விற்கப்படும் இடம் ஒன்றை காவல்துறையினர் பரிசோதனையில் முடக்கினர்.
- சனவரி 12:
- இலங்கையில் கிக்கடுவை, ஹோமகமை ஆகிய இடங்களில் மூன்று கிறித்தவத் தேவாலயங்கள் பௌத்த மதகுருக்கள், மற்றும் கும்பலினால் சேதமாக்கப்பட்டன. (பிபிசி)
- கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்வு கலிபோர்னியாவில் நடந்தது. (எல்லே டைம்சு)
- இலங்கையின் மேற்கு, தெற்கு மாகாணசபைகள் கலைக்கப்பட்டன. (டெய்லிநியூசு)
- இலங்கை, வடமாகாண முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேசினார். (தமிழ்மிரர்)
- சனவரி 11:
- திபெத்தின் பழம்பெரும் டுக்கெசோங் நகரின் ஒரு பகுதி தீயினால் அழிந்தது. நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்தன. (ஏபிசி)
- குறு ஒளிர்வண்டம் ஒன்றில் பால் வழியின் நடுவில் கருந்துளை ஒன்று விண்மீன் ஒன்றை விழுங்கியது முதற் தடவையாகப் படம் பிடிக்கப்பட்டது. (ஆஸ்ட்ரோனொமி)
- யாழ்ப்பாண மாவட்டத்துக்கான பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா பணியில் அமர்ந்தார். (தமிழ்வின்)
- இரணைதீவுக் கடலில் 1998 இல் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட, லயன்எயார் பறப்பு 602 இலிருந்து மீட்கப்பட்ட 72 தடயப் பொருட்கள் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்பாக அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டன. (தமிழ்வின்)
- சனவரி 10:
- 1974 சனவரி 10 இல் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 9 பொதுமக்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. (தமிழ்வின்)
- விசா மோசடி தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோபர்கடே அமெரிக்க நீதிமன்றத்தினால் குற்றச்சாட்டு பதியப்பட்டு நாட்டை விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டார். (யூஎசஸ்ஏ டுடே)
- சனவரி 9:
- சப்பானில் மிட்சுபிசி வேதித் தொழிற்சாலையில் வெடிப்பு ஒன்றில் ஐவர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர். (ஆர்.ரி)
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவின் ஹமா மாகாணத்தில் வாகனக் குண்டு ஒன்று வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)
- உருசியாவின் ஸ்தாவ்ரபோல் நகரில் 4 வாகனங்களில் சூட்டுக் காயங்களுடன் 5 இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. (சிஎன்என்)
- இந்தோனேசியாவில் சினாபுங் எரிமலை மீண்டும் வெடிக்க ஆரம்பித்தது. (வயர்ட்)
- கியூபா தலைநகர் அவானாவில் இருந்து 112 மைல் கிழக்கே புளோரிடா நீரிணையில் 5.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (மியாமி எரால்டு)
- சனவரி 8:
- தெற்கு ஏமனில் அமெரிக்கா ஆளில்லா வானூர்தி நடத்திய தாக்குதலில் அல் காயிதா போராளிகள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- இந்தியாவில் மும்பையில் இருந்து புறப்பட்ட தொடருந்து ஒன்று தீப்பற்றியதிஉல் ஒன்பது பயணிகள் உயிரிழந்தனர். (பிபிசி)
- ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவின் லிட்டில் ஐ லேப்ஸ் என்ற நிறுவனத்தை வாங்கியது. (எக்கனொமிக் டைம்ஸ்)
- கத்தாரில் இடம்பெறவிருக்கும் 2022 கால்பந்துப் போட்டிகள் கோடைகாலத்தில் அல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்த இறுதி முடிவு 2014 உலகக் கோப்பைக்குப் பின்னர் எடுக்கப்படும். (பிபிசி)
- சனவரி 7:
- யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் என்ற 9 பேர் அடங்கிய ஆயுதக் குழுவொன்றை காவல்துறையினர் கைது செய்தனர். (தினகரன்)
- சனவரி 6:
- போர்க்குற்றங்களுக்கான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவன் ராப் ஆறு நாட்கள் அரச முறைப் பயணமாக இலங்கை வந்தார். (கல்ஃப் டைம்சு)
- இலங்கை, மன்னாரில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 7 (மொத்தம் 32) மனித உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. (உதயன்)
- நைஜீரியாவின் மத்திய பகுதியில் சோனொங் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- ஐக்கிய அமெரிக்காவின் பல பகுதிகளில் வெப்பநிலை −51 °செ (−60 °ப) ஆகப் பதிவானது. (லொஸ் எஞ்சலீசு டைம்சு)
- சனவரி 5:
- ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசசு கோப்பையைத் தனதாக்கிக் கொண்டது. (ஏபிசி)
- இந்தியாவின் ஜிசாட்-14 எனும் தொலைத் தொடர்பு செயற்கைக்கோளை ஜி. எஸ். எல். வி டி5 ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. (தி இந்து)
- இலங்கையில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து முல்லைத்தீவு, பருத்தித்துறைக் கரையோரப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். (தமிழ்மிரர்)
- வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் இத்தேர்தலில் பங்குபற்றாமல் ஒன்றியொதுக்கல் செய்தனர். (பிபிசி)
- சனவரி 4:
- தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்ததை அடுத்து தனது பயணத்தை இடைநிறுத்தி இந்தியா சென்றார். (தமிழ்வின்)
- இந்தியாவின் கோவா மாநிலத்தில் 5-மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- சனவரி 3:
- ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியைப் பெரும் பனிச் சூறாவளி தாக்கியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 13 பேர் கொல்லப்பட்டனர். (என்பிசி)
- இலங்கை, மன்னார், மாந்தைப் பகுதியில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 4 (மொத்தம் 15) மனித உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. (தமிழ்வின்)
- சர்ச்சைக்குரிய திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது. (தினகரன்)
- சனவரி 2
- லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் இடம்பெற்ற கார்க் குண்டுவெடிப்பில் ஐவர் கொல்லப்பட்டு, 20 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- மேற்கு இந்தியாவில் மால்செச் மலைதொடரில் ஆழ்பள்ளத்தாக்கு ஒன்றில் பேருந்து ஒன்று வீழ்ந்ததில் 30 பேர் கொல்லப்பட்டனர். (எம்எஸ்என்)
- ரீயூனியன் தீவை சூறாவளி பெஜிசா தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. (யூரோநியூஸ்)
- அண்டார்க்டிக்காவின் கடல் பனிக்கட்டியில் சிக்கிய அக்காதெமிக் சொக்கால்ஸ்கி என்ற உருசிய சுற்றுலா, ஆய்வுக் கப்பல் பயணிகள் 52 பேர் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டனர். (பிபிசி)
- 2014ஏஏ என்ற 5-மீட்டர் விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியது. புவி வளிமண்டலத்திலேயே இது எரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. (ரியாநோவஸ்தி)
- சனவரி 1:
- இந்தோனேசியாவில் காவல்துறையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- சோமாலித் தலைநகர் மொகடிசுவில் உணவு விடுதிக்கு முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் 11 பேர் கொல்லப்பட்டனர். (Standard Media), (ராய்ட்டர்சு)
- செக் குடியரசில் பாலத்தீனத் தூதுவர் ஜமால் அல் ஜமால் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். (ராய்ட்டர்சு)
- யூரோ வலயத்தின் 18வது உறுப்பு நாடாக லாத்வியா இணைந்தது