வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2008
- ஏப்ரல் 28:
- பத்து செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-சி9 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. (பிபிசி)
- சீனாவின் ஷான்டொங் மாகாணத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் குறைந்தது 66 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஏப்ரல் 26: மொரோக்கோவின் கசபிளாங்கா நகரில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பற்றியதில் 55 பேர் கொல்லப்பட்டனர். (ரோய்ட்டர்ஸ்)
- ஏப்ரல் 23: இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து முறையான அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இந்திய நடுவண் அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமெனக்கோரும் தீர்மானமொன்றை தமிழக சட்டசபை நிறைவேற்றியது. (தினக்குரல்)
- ஏப்ரல் 19: ரஷ்யாவின் சோயூஸ் டிஎம்ஏ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் கசக்ஸ்தானில் திட்டமிட்டதிலும் விட 475 கிமீ தூரத்தில் உள்ள ஆர்க்காலிக் என்ற இடத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. (யாஹூ செய்திகள்)
- ஏப்ரல் 16:
- மலேசிய அரசாங்கம் அந்நாட்டின் புகழ் பெற்ற தமிழ் நாளிதழான மக்கள் ஓசையை தடை செய்தது. (தமிழ்முரசு)
- குஜராத்தில் பேருந்து ஒன்று நர்மதா ஆற்றின் கால்வாயில் வீழ்ந்ததில் 40 பேர், பெரும்பாலும் சிறுவர்கள், இறந்தனர். (பிபிசி)
- ஏப்ரல் 15: கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 83 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)
- ஏப்ரல் 14:
- 43 ஆண்டுகளின் பின்னர் வங்காள தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. (பிபிசி)
- நேபாளத்தில் 9 ஆண்டுக்கு பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நேபாள மாவோயிஸ்டுகள் இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டுள்ள 118 இடங்களில் 63 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றனர். (பிபிசி)
- ஏப்ரல் 12: தெற்கு ஈரானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டு நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஏப்ரல் 11: கியூபாவில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைத் தமதாக்கும் வீட்டுப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்வர் என அந்நாட்டதிபர் ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்தார். (யுஎஸ்ஏ டுடே)
- ஏப்ரல் 10: 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: பெய்ஜிங் நகரில் இடம்பெறவிருக்கும் ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகளைப் பகிஷ்கரிக்கும் முடிவுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடாளுமன்றம் வாக்களித்தது. (டொச்செ வெலா)
- ஏப்ரல் 9: நேபாளத்தில் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற கலவரத்தில் காவற்துறையினர் சுட்டதில் ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஏப்ரல் 8:
- ரஷ்யாவின் சோயூஸ் டீஎம்ஏ விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. முதன் முதலில் ஒரு கொரிய விண்வெளி வீரர் விண்ணுக்கு செல்வது இதுவே முதற் தடவையாகும். (பிபிசி)
- ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சில் சார்க் தீவில் நிலமானிய அமைப்பை மாற்றி மக்களாட்சி முறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. (பிபிசி)
- ஏப்ரல் 7: சீனாவும் நியூசிலாந்தும் சுயாதீன வர்த்தக உடன்பாட்டில் கைச்சாத்திட்டன. வளர்ச்சி அடைந்த நாடொன்றுடன் முதற் தடவையாக சீனா சுயாதீன வர்த்தக உடன்பாட்டை எட்டியுள்ளது. (நியூசிலாந்து ஹெரால்ட்)
- ஏப்ரல் 5: ஒகேனக்கல் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் கர்நாடகத் தேர்தலுக்குப் பின் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாகவும் முதல்வர் மு. கருணாநிதி அறிவித்தார். (புதினம்)
- ஏப்ரல் 4:
- ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் தமிழ்த் திரையுலகினர் உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். (வீரகேசரி)
- இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவரும் கட்சியின் பிரசார செயலாளருமான விமல் வீரவன்சவை அக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்துவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்தது. (வீரகேசரி)
- ஏப்ரல் 3:
- ஐரோப்பிய விண்வெளி மையத்தினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஜூல்ஸ் வேர்ண் என்ற ஆளில்லா சரக்கு விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. (ஈஎஸ்ஏ)
- சுரினாமில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் அனைத்து 19 பயணிகளும் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஏப்ரல் 2: ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக கர்நாடகாவில் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல தமிழர்களின் நிலைகள் தாக்கப்பட்டன. தமிழ்நாட்டின் பேருந்துகள் எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. (தமிழ்முரசு)]
- ஏப்ரல் 1: சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவைப் பாதிக்கும் எச்செயலிலும் ஈடுபட வேண்டாம் என இந்தியா தலாய் லாமாவுக்கு அறிவுறுத்தியது. (பிபிசி)