வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஏப்ரல் 2008
- ஏப்ரல் 27: மணலாறு இராணுவ முகாம்களின் மீது வான்புலிகள் விமானத் தாக்குதலை மேற்கொண்டனர். ஒரு படைவீரர் காயமடைந்தார். (புளூம்பேர்க்)
- ஏப்ரல் 25:
- கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் பேருந்து ஒன்றினுள் குண்டு வெடித்ததில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 52 பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- மடு அன்னையின் திருச்சொரூபம் அண்மையில் அங்கிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து தேவாலயத்துக்கு இலங்கைப் படையினர் படைச் சீருடை தரித்து, ஆயுதங்களுடன் சென்றனர். (புதினம்)
- ஏப்ரல் 23: கிளாலி முதல் முகமாலை வரை 7 கிமீ முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு படையினர் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் தமது தரப்பில் 18 பேர் இறந்ததாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். 38 பேர் தமது தரப்பில் இறந்ததாக இராணுவத்தினர் தெரிவித்தனர். (புதினம்), (ஏபிசி)
- ஏப்ரல் 20: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் வண. கருணாரத்தினம் அடிகள் வன்னியில் அம்பல்குளம் என்ற இடத்தில் கிளைமோர்த் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். (டெய்லிமிரர்), (புதினம்)
- ஏப்ரல் 17: முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் குடியிருப்பு மீது இலங்கை வான் படையின் எஃப்-7 ரக வானூர்திகள் நான்கு நடத்திய குண்டுத்தாக்குதலில் 15 வயது பள்ளி மாணவி கொல்லப்பட்டு வேறொருவர் படுகாயமடைந்தார். (புதினம்)
- ஏப்ரல் 6: கம்பகா மாவட்டம், வெலிவெரியாவில் இடம்பெற்ற சிங்களப் புதுவருட கொண்டாட்ட நிகழ்வில் குண்டு வெடித்ததில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 10-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 50-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (புதினம்)
- ஏப்ரல் 4: மன்னார், மடு மாதா திருவுருவச் சிலை அங்கிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். (தி ஐலண்ட்)
- ஏப்ரல் 3: மன்னார், மடு தேவாலயத்தின் மீது இலங்கைப் படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களால், அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர். (புதினம்)
- ஏப்ரல் 1:
- திருகோணமலை, மூதூரில் 2006 ஆம் ஆண்டில் 17 தமிழ் நிவாரணப் பணியாளர்களின் படுகொலைகளை பாதுகாப்புப்படையினரே நிகழ்த்தினர் என உள்ளூர் மனித உரிமைகள் குழு ஒன்று அரசைக் குற்றம் சாட்டியுள்ளது. (பிபிசி)
- பொலநறுவ மாவட்டம் மின்னேரியாவில் இலங்கைப் படையினரின் பயிற்சித்தளத்தில் மின்னல் தாக்கி 3 படையினர் கொல்லப்பட்டு 63 படையினர் காயமடைந்தனர். (புதினம்)
- இரத்தினபுரி, குருவிட்ட என்ற இடத்தில் நிகழ்ந்த சிறை உடைப்பு முயற்சியில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனார். (புதினம்)
- மன்னார் இத்திக்கண்டல் பகுதியில் இலங்கைப் படையினர் 15-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 25-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)