உள்ளடக்கத்துக்குச் செல்

வானவில் (2000 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானவில் (2000 திரைப்படம்)
திரைப்பட பதாகை
இயக்கம்மனோஜ்குமார்
தயாரிப்புமனோஜ்குமார்
கதைV. Prabhakar
N. Raghu (dialogues)
இசைதேவா
நடிப்புஅர்ஜுன்
அபிராமி
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுகார்த்திக் ராஜா
படத்தொகுப்புபி. மோகன் ராஜ்
கலையகம்குரு பிலிம்சு
வெளியீடு26 அக்டோபர் 2000 (2000-10-26)
ஓட்டம்162 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வானவில்[1] 2000ஆம் ஆண்டு மனோஜ்குமார் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும். அபிராமி இப்படத்தில் அறிமுகமானார். இப்படம் அக்டோபர் 26, 2000 அன்று வெளிவந்து[2] நான்கு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பெற்றது.

கதைச் சுருக்கம்

[தொகு]

மதுரையைச் சேர்ந்த உழவரின் மகன் சூரியா, கோடீஸ்வர தொழிலதிபரின் ஒரே மகன் ஜெ. பிரகாஷ், ஊட்டியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட வாரிசு பிரியா ஆகிய மூவரும் அறிமுகமில்லாதவர்களாக சென்னை மத்திய நிலையத்தில் டெல்லிக்குச் செல்லும் ரயிலில் ஏறுகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் அருகிலேயே இருக்கைகளைப் பெற்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். தற்செயலாக, மூவரும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வில் உயர் தரவரிசையுடன் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதும், குடிமைப் பணிப் பயிற்சியின் நான்காம் கட்டத்திற்காக டெல்லி செல்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. அவர்கள் நண்பர்களாகின்றனர்.

பயிற்சி காலத்தில், சூரியா பிரியாவை நேசிக்கிறார். அதே நேரத்தில் பிரகாஷ் அவள் மீது காமம் கொள்கிறார். சூரியாவின் தந்தையும் பிரியாவின் குடும்பத்தாரும்ஆக்ராவில் அவர்களைச் சந்திக்க வரும்போது, பிரகாஷ் பிரியாவின் தாயிடம் பிரியாவை மணம் புரிய விரும்புவதாகக் கூறுகிறார். அதே நேரத்தில், சூரியாவின் தந்தை சூரியாவிடம் பிரியாவை மணக்கும்படி கேட்கிறார். பயிற்சியின் இறுதி நாட்களில், பிரியாவும் சூரியாவைக் காதலிக்கிறாள். நான்காம் கட்ட முடிவுகளில், பிரியா பணிநிலை-I இஆப அதிகாரியாகத் தேர்வு செய்யப்படுகிறாள். அதே நேரத்தில் பிரகாஷ் தேர்ச்சிப் புள்ளியை இழந்து பணிநிலை-II இகாப அதிகாரியாகிறார், ஏனெனில் அவர் இறுதித் தேர்வில் இரண்டு நிமிடங்கள் பிரியாவைப் பற்றி சிந்தித்தார். அதே நேரத்தில், சூரியாவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதல் தகவல் அறிக்கை காரணமாக ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவரது முடிவுகளைத் தடுத்து வைக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சூரியா ஒரு கிராம உழவாளியாக இருந்தார். அறுவடைக் காலத்தில், உள்ளூர் வட்டாட்சியர் உழவர்களின் கோரிக்கையை நிராகரித்து, அவர்களின் கரும்பு பயிரை அரசு கிடங்குகளுக்கு குறைந்த விலையில் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லத் தொடங்குகிறார். சூரியா இதை எதிர்த்துப் போராடுகிறார். வட்டாட்சியர் தனது தந்தையை அடித்ததால் அவரையும் அடிக்கிறார். சூரியா கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்படுகிறார். கிராம மக்கள் காவல் நிலையத்தில் தொடர்ந்து போராடுகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் லட்சுமி இஆப மறுநாள் நிலையத்திற்கு வருகிறார். அவர் நிலைமையை ஆய்வு செய்து, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக அரசாணை வெளியிட வைக்கிறார். சூரியா முதுகலைப் பட்டதாரி என்பதை அறிந்து, அவரை விடுவிக்குமாறு காவல்துறையிடம் கேட்கிறார். ஆனால் அவர்கள் மறுக்கின்றனர். ஏனெனில் அவரது பெயரில் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது அதனால் சூரியாவை நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும். இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர், மாவட்ட நீதிபதியாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து சூரியாவை விடுதலை செய்கிறார். ஒரு இஆப அதிகாரியின் இந்த அதிகாரம் சூரியா ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வு எழுதத் தூண்டுகிறது.

சூரியாவின் விளக்கத்திற்குப் பிறகு, தேர்வாணையம் அவரை விடுவிக்க ஒப்புக்கொள்கிறது, ஆனால் விசாரணை நிலுவையில் அவரது முடிவை நிறுத்தி வைக்கிறது. சூரியாவும் பிரியாவும் சென்னையில் துணை உள்துறைச் செயலாளராக இருக்கும் லட்சுமி இஆபவை சந்தித்து உதவி கேட்கின்றனர். அதன் பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்திக் கொண்டு, ஒரு மாத விடுமுறையைத் தொடங்குகின்றனர். இஆப அதிகாரியாக வரும் வரை திரும்ப மாட்டேன் என்று தனது கிராமத்தில் உறுதிமொழி எடுத்திருந்ததால் சூரியா அங்கு செல்ல மறுக்கிறார். எனவே அவர் ஊட்டியில் உள்ள பிரியாவின் குடும்பத்தைச் சந்திக்கிறார். பிரியாவின் தாயும் சகோதரியும் சூரியாவை பிரியாவின் வருங்கால மாப்பிள்ளையாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, பிரியா சென்னையில் உதவி ஆட்சியராகப் பணியாற்றச் செல்கிறாள்.

எல்லாம் நன்றாக நடக்கும் நேரத்தில், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பணக்கார செய்தித்தாள் உரிமையாளரின் மகன் அருண், பிரியாவின் சகோதரி பவித்ராவை பள்ளிக்குச் செல்லும் வழியில் தொந்தரவு செய்ய முயன்றதும், பவித்ரா அவரைச் சிறையில் அடைத்ததும் தெரிய வருகிறது. பழிவாங்கும் நோக்கில், அருண் முடிவு வெளியாகும் நாளில் எல்லா செய்தித்தாள்களிலும் பவித்ராவின் தேர்வு எண்ணை வெளியிடாமல் தடுக்கிறார். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சரியான நேரத்தில் பிரியாவுக்கு முடிவுகளைப் பற்றிய செய்தி கிடைக்கவில்லை. பிரியாவின் தாய் பவித்ரா விளையாட்டுத்தனமாக இருந்ததால் தேர்ச்சி பெறவில்லை என்று நினைக்கிறாள். வருத்தமடைந்த பவித்ரா தற்கொலை செய்து கொள்கிறாள். அவரது இறுதிச் சடங்கின்போது, பவித்ரா மாநிலத்தில் முதல் தரவரிசை பெற்றதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அருணும் அவரது நண்பரும் இறுதிச் சடங்கிற்கு வருகின்றனர். அருணின் நண்பர் அருணின் தவறுகளை பகிரங்கமாகத் தெரிவிக்கிறார். கோபத்தில் சூரியா அருணை மரத்தில் தள்ளுகிறார். அருணுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இறந்துவிடுகிறார். சூரியா கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சென்னை சிறைக்கு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுகிறார். அதே நேரத்தில், பிரகாஷ் இகாப அதிகாரியாகச் சேர்ந்து சென்னை சிறையில் பணியைத் தொடங்குகிறார். பிரகாஷ் தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற 24 மணி நேரம் பணியாற்றிவிட்டு பின்னர் ராஜினாமா செய்து கோடீஸ்வரனாக தனது வாழ்க்கையை அனுபவிக்கத் திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. அதே நேரத்தில், சூரியா பிரகாஷின் சிறைக்குக் கொண்டு வரப்படுகிறார். பிரகாஷ் ஆரம்பத்தில் சூரியாவின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். ஆனால் அதைத் தனது நன்மைக்குப் பயன்படுத்த முடிவு செய்கிறார். அவர் தனது ராஜினாமா திட்டத்தை ரத்து செய்து, கைதிகள் மூலம் சூரியாவின் உயிருக்கு பல முறை முயற்சிகள் செய்கிறார். பிரியாவை தன்னை மணக்கும்படி சமாதானப்படுத்தும்படி சூரியாவிடம் கேட்கிறார். சூரியா ஒப்புக்கொள்கிறார். பிரகாஷ் அவரைப் பரோலில் வெளியே அழைத்துச் சென்று பிரியாவைச் சந்திக்க வைக்கிறார். அங்கு, பிரகாஷ்தான் தனது முதல் தகவல் அறிக்கை விஷயத்தை யூபிஎஸ்சிக்குத் தெரிவித்தவர் என்பதும், தான் பிரியாவை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பதும் சூரியா வெளிப்படுத்துகிறார். இது பிரகாஷை மேலும் கோபமடையச் செய்கிறது.

சில நாட்களுக்குப் பிறகு, சூரியாவின் தந்தை இறந்துவிட்டதாக பிரகாஷுக்கு தந்தி வருகிறது, ஆனால் இறுதிச் சடங்கிற்குச் செல்ல சூரியாவை அனுமதிக்க மறுக்கிறார். ஒரு காவலர் அலெக்ஸ் சூரியாவுக்கு உதவுகிறார். அவர் ஒரு சுரங்கப்பாதை வழியாக தப்பிக்கிறார். அலெக்ஸ் பிரகாஷின் ஊதியத்தில் இருப்பவர் என்பது தெரிய வருகிறது. சூரியா தப்பித்து சில நிமிடங்களில், அலெக்ஸ் பிரகாஷால் கொல்லப்படுகிறார். மேலும் அவர் அந்தக் கொலைக்கு சூரியாவைக் குற்றவாளியாக்குகிறார். சூரியா அலெக்ஸின் கொலைக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தலைப்புச் செய்திகளை வெளியிடுவதற்கு அருணின் தந்தையுடன் சதி செய்கிறார். சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு போலி நபர் சூரியாவை வரவேற்கிறார். சூரியா தவறை உணர்கிறார். சூரியா விடியற்காலையில் சிறைக்குத் திரும்பி வந்து, பிரகாஷை மிகக் கடுமையாக அடித்து, தன்னை மீண்டும் தனது அறையில் அடைத்துக் கொள்கிறார். வந்த அதிகாரிகள் பிரகாஷின் குற்றங்களை உணர்ந்து அவரைக் கைது செய்கின்றனர்.

சூரியாவுக்கு ஆதரவாக ஏற்படும் பொதுமக்களின் கூக்குரல் காரணமாக உயர்நீதிமன்றம் தற்செயலான கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து தீர்ப்பளிக்கிறது. இதன் மூலம் சூரியா மாநில அரசில் இஆப அதிகாரியாகச் சேர்ந்து தனது தந்தையைப் பெருமைப்படுத்துகிறார். அவர் பிரியாவையும் மணக்கிறார்.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Catherene, Mary (20 May 2025). "No room for one's pride". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). Archived from the original on 23 June 2025. Retrieved 14 September 2025.
  2. "வானவில் / Vaanavil (2000)". Screen 4 Screen. Archived from the original on 27 November 2023. Retrieved 22 September 2024.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவில்_(2000_திரைப்படம்)&oldid=4431325" இலிருந்து மீள்விக்கப்பட்டது