வல்லார் கிழான் பண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வல்லார் என்பது சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய ஊர்களில் என்று. இதன் ஆட்சி உரிமையைப் பெற்றிருந்த மன்னன் வல்லார் கிழான்.

பாடிய புலவர்
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் என்னும் புலவர் வல்லார் கிழான் பண்ணனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[1]
வல்லார் நலம்
பாடலில் இந்த ஊரின் பெயர் "கடிமிளை வலாஅர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரைச் சுற்றிலும் காவல்காடுகள் இருந்தன. வல்லார்நாடு குன்றுகளை மிகுதியாக உடையது.
வல்லார் குன்றத்து மகளிர்
இங்கு வாழ்ந்த எயிற்றி ஒருத்தியின் அன்பு மகள் தன் வீட்டு விளா மரத்தின் கீழ் இருந்த வெட்ட வெளியில் குட்டியானை ஒன்றோடு விளையாடிக்கொண்டிருந்தாளாம்.
பண்ணன் போராற்றல்
இவனது அம்பில் எப்போதும் புலவுக்கறை படிந்திருக்குமாம்.
பண்ணன் கொடை
இவனை நாடி வரும் பாணர்கள் குடும்பம் தம் காலமெல்லாம் வறுமை இல்லாமல் வாழும் வகையில் பண்ணன் பரிசில்களை நல்குவானாம்.
  • மேலும் பார்க்க
சிறுகுடி கிழான் பண்ணன்

அடிக்குறிப்பு[தொகு]

  1. பாடல் புறநானூறு 181.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லார்_கிழான்_பண்ணன்&oldid=2718224" இலிருந்து மீள்விக்கப்பட்டது