வலைவாசல் பேச்சு:பரதநாட்டியம்
Appearance
மிக நல்ல முயற்சி. பாராட்டுகள்! பரத நாட்டியத்துக்குப் பாவம், ராகம், தாளம் போன் சொற்கள் காரணம் என்பதெல்லாம் மேடைப் பேச்சுக்காக சுவைக்காகக் கூறப்படுவது, உண்மையில்லை. அப்படியான கருத்துகள் கூறாமல் இருப்பது நல்லது, அல்லது யார் எங்கே முதலில் கூறினார்கள் என்றோ, பொதுவாகக்கூறப்படும் உண்மையில்லாத விளக்கம் என்றோ கூறிப் பதிவது தகும். பரதக் கலைக்குப் பரத முனிவர் எழுதிய நாட்டிய சாத்திரத்தால் பெயர் ஏற்பட்டது என்பது உண்மை, ஆனால் இக்கலையை அவர் உருவாக்கவில்லை, முதலிலும் விளக்கியவரும் அல்லர். அவருடைய படைப்புக்கு முதலிடம் தர வேண்டும் என்பதில் மறுப்பில்லை. --செல்வா (பேச்சு) 18:44, 24 சூன் 2013 (UTC)