வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/31

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011ஆம் ஆண்டு சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் காட்சி

இருபது20 என்பது துடுப்பாட்டப் போட்டி வகைகளில் ஒன்றாகும். இது இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கவுண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளின் போது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 போட்டியில் இரண்டு அணிகள் தலா ஒரு ஆட்டப் பகுதிகயைக் கொண்டிருப்பதோடு ஒரு அணிக்கு உச்ச வரம்பாக 20 நிறைவுகள் மட்டையாட வழங்கப்படுகின்றது.

இருபது20 துடுப்பாட்டப் போட்டியின் ஒவ்வொரு ஆட்டப் பகுதியும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு 3 மணி 30 நிமிடத்தில் மொத்த ஆட்டமும் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.