வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/18

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்டர்-கவாஸ்கர் கிண்ணம் (Border-Gavaskar Trophy) என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இது ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டம் மூலம் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்று வருகிறது. ஒருவேளை தொடர் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தால், முன்பு கிண்ணத்தை வைத்திருக்கும் அணி அதைத் தக்கவைத்துக் கொள்ளும்.

இந்த தொடருக்கு ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்களை இணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர்கள் ஆவர். தங்கள் அணிகளின் முன்னாள் அணித் தலைவர்களான இருவரும் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் பெற்று உலக சாதனை படைத்தவர்களாக இருந்துள்ளனர்.