வலைவாசல்:சைவம்/தகவல்கள்/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைநரம்பில் யாழ் அமைத்து பாடும் இராவணன்
கைநரம்பில் யாழ் அமைத்து பாடும் இராவணன்
  • ஐந்து முகம் கொண்ட சிவபெருமானின் ஆறாவது முகம் அதோமுகம் என்று அழைக்கப்படுகிறது. குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.
  • சிவபெருமானின் அருவ வடிவம் லிங்க மூர்த்தியாகும். இம்மூர்த்தியின் வடிவம் சக்தி, பிரம்மா, விஷ்ணு, ருத்திர வடிவங்களை தனக்குள் உள்ளடக்கியதாகும்.
  • இசைக்கலையில் வல்லவரான இராவணன் கைநரம்புகளிலேயே யாழ் அமைத்து இசைத்து சிவபெருமானை மயங்க செய்தவர்.
  • சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேசுவர விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம் என ஒன்பது விரதங்கள் சிவனுக்கு உகந்ததாக நம்பப்படுகிறது.
  • ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.
  • தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் இருநூற்று இருபத்து நான்காகும்.