வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசைக் கலைஞர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு இசைப்பேரறிஞர் எனும் விருதினை சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் வழங்கிச் சிறப்பிக்கிறது. தமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு தமிழ் இசைச் சங்கத்தால் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவின் தொடக்க நாளன்று, அந்த ஆண்டிற்கென தெரிவுசெய்யப்பட்ட இசைக் கலைஞருக்கு "இசைப்பேரறிஞர்" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் அளிக்கப்பெறுகிறது.