வரேந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத்தில் அமைந்துள்ள வரேந்திரா பகுதி
வரேந்திராவில் கிடைத்த கிபி 640–730 தேதியிட்ட கைவர்த அரசனின் நாணயம்.

வரேந்திரா ( Varendra ), பரிந்த் என்றும் அறியப்படும் இது வடக்கு வங்காளத்தின் ஒரு பகுதியாகும். இப்போது பெரும்பாலும் வங்காளதேசத்திலும் ஒரு சிறிய பகுதி இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ளது.[1][2]

இது தற்போது வங்காளதேசத்தின் ரங்க்பூர் கோட்டம் மற்றும் ராஜசாகி கோட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியான புந்த்ரவர்தனா அல்லது புந்த்ரா இராச்சியத்தின் ஒரு பகுதியை உருவாக்கியது. வங்காளதேசத்தின் போக்ரா, ராஜசாகி, பாப்னா மற்றும் தினாஜ்பூர் மற்றும் இந்தியாவின் மேற்கு தினாஜ்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. கன்னிங்காமின் கூற்றுப்படி, வரேந்திராவின் எல்லை மேற்கில் கங்கை ஆறு மற்றும் மகாநந்தா, கிழக்கில் கரடோயா, தெற்கில் பத்மா நதி மற்றும் வடக்கே கூச் பெகர் சமஸ்தானம் மற்றும் தெராய் இடையேயான நிலம் என இருந்தது.

இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள்[தொகு]

ரமேஷ் சந்திர மஜும்தாரின் கூற்றுப்படி, வரேந்திர-மண்டலம் என்ற சொல் ராமசரிதத்தில் வருகிறது. இது கங்கை மற்றும் கரடோயா ஆறுகளுக்கு இடையில் இருந்தது என அவர் எழுதுகிறார். "புந்த்ரவர்தனத்துடன் இது சேர்க்கப்பட்டிருந்தது என சிலிம்பூர், தர்பாண்டிகி மற்றும் மதைநகர் கல்வெட்டுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தபாகாட்-இ-நாசிரி கங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள லக்னாவதியின் பிரதேசத்தின் ஒரு பிரிவாக பரிந்த் குறிப்பிடுகிறது"[1]

வரலாறு[தொகு]

மௌரியப் பேரரசு காலத்தில் வங்காளத்தில் பிராமணர்கள் இருந்ததை வரலாற்று சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. சந்திரகுப்த மௌரியரின் ஆசானாகக் கருதப்படும் சைன ஆச்சார்யர் பத்திரபாகு, புந்த்ரவர்தனத்தின் ( அல்லது புந்த்ரா, கங்கைக்கு வடக்கே வங்காளத்தில் உள்ள பிரம்மபுத்திராவுக்கு மேற்கே, பின்னர் வரேந்திரா என்று அழைக்கப்பட்டது) பிராமண குடும்பத்தில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சான்றுகள் புந்த்ரா அல்லது வரேந்திரா மற்றும் பாகீரதிக்கு மேற்கே உள்ள பகுதிகள் (பண்டைய காலத்தில் ராதை என்று அழைக்கப்படுகின்றன) பண்டைய காலங்களிலிருந்து பிராமணர்களின் இடங்களாக இருந்தன;

எச். சி. ராய்சௌதுரியின் கூற்றுப்படி , குப்த வம்சம் வரேந்திரி பகுதியில் இருந்து உருவானது.  காலிம்பூர் செப்புத்தகடு கல்வெட்டின் படி, முதல் பால பேரரசர் கோபால வப்யதா என்ற வீரரின் மகன் ஆவார். வரேந்திரா (வடக்கு வங்காளம்) பாலர்களின் தந்தை நாடு ( ஜனகபு ) என்பதை ராமசரிதம் சான்றளிக்கிறது.

வரேந்திரா பகுதியில் இருந்து தோன்றிய பண்டைய பேரரசுகளும் ஆட்சியாளர்களும்[தொகு]

வரேந்திரா பகுதியில் இருந்து தோன்றிய இன்றைய பிரதமர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சர்கள்[தொகு]

  • முகமது அலி போக்ரா
  • ஜியாவுர் ரஹ்மான்
  • உசைன் முஹம்மது எர்ஷாத்
  • காலிதா சியா

குறிப்பிடத்தக்க வரேந்திர பிராமணர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 R. C. Majumdar (1971). History of Ancient Bengal. Calcutta: G. Bhardwaj & Co.. பக். 13. இணையக் கணினி நூலக மையம்:961157849. 
  2. வார்ப்புரு:Cite Banglapedia
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரேந்திரா&oldid=3724025" இலிருந்து மீள்விக்கப்பட்டது