வநாயுதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வநயுதேசம் பர்பரதேசத்திற்கு தெற்கிலும்,சிந்துதேசத்திற்கும்வடக்கிலும், சிந்துநதியின் மேற்குக் கரையில் சதுரமான சமமான பூமியாய் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்தின் பூமி மட்டமானது, மேற்கு திசையில் இருக்கும் மலையின் அடிவாரத்தில் சற்று உயர்ந்தும், கிழக்குமுகமாய் கொஞ்சம் தாழ்ந்தும், இந்தத் தேசத்தின் எல்லையாக ஓடும் சிந்துநதியின் அருகில் சரிவாகவும், மண்பாக பூமியைவிட மணல்பாகமுள்ள பூமியே அதிகமாக இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்திற்கு வடக்கில் சகம், கக்ஷம், என்னும் இரு பெரியமலையும், இந்த இரு மலைகளும் மேற்கில் நீண்டு மகாமலை அடிவாரத்தோடு இணைந்து உள்ளது. இத்தேசத்தின் காடுகளில் பச்சைக்கிளி, பஞ்சவர்ணக்கிளி, குயில், மயில், சிறுகுருவி, ஊர்க்குருவி ஆகியவையும், உயர்சாதிக்குதிரையும் அதிகம் உண்டு.

நதிகள்[தொகு]

இந்த வநயுதேசத்திற்கு சகம், கக்ஷம், என்னும் இரு பெரியமலையிலிருந்து உற்பத்தியாகும் கன்யகா என்ற நதி இந்த தேசத்தை செழிக்க வைத்து தேற்குமுகமாய் ஓடி, கிழக்குமுகமாய் திரும்பி சிந்துநதியுடன் இணைகிறது.

விளைபொருள்[தொகு]

இந்த தேசத்தில் தேக்கு, பலா, பிரம்பு, திந்துகம், பூர்சரம் முதலியன அதிகமாய் விளைகிறது.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 179 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=வநாயுதேசம்&oldid=2076843" இலிருந்து மீள்விக்கப்பட்டது