வணதியன் பட்டணம் சுப்பிரமணிய சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள வணதியன் பட்டணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மூலவரான சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை என இரண்டு துணைவியர்களுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திர நாளன்று விழா மிகவும் சிறப்புடன் நடைபெறுகிறது. இவ்விழாவின் போது காவடி எடுத்தல் சிறப்பு நிகழ்வாக இடம் பெறுகிறது.