வடுக பைரவ மூர்த்தி
Appearance
வடுக பைரவ மூர்த்தி என்பவர் சைய சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்துநான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவரை வடுக மூர்த்தி எனவும் அழைப்பர். திருவுருவக் காரணம்[தொகு]துந்துபி என்போரின் மகனாகிய முண்டாசுரன், சிவனையெண்ணி கடுந்தவம் புரிந்து வரங்கள் பெற்றார். இதனால் கர்வம் கொண்டு அனைவரையும் வதைத்தார். படைப்பின் கடவுளான பிரம்மதேவரிடம் போரிட சென்றபொழுது, பிரம்மர் சிவபெருமானிடம் தன்னை காத்தருள வேண்டினார். எனவே சிவபெருமான் முண்டாசுரனை அழிக்க வடுக மூர்த்தியை உருவாக்கினார். வடுக மூர்த்தியும் முண்டாசுரை அழித்து சிவபெருமானை அடைந்தார். [1]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
|