வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், நாகர்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வடசேரி, நாகர்கோவில்
உரிமம்நாகர்கோவில் நகராட்சி
நடைமேடை4
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான புறநகர் பேருந்து நிலையமாகும். இப்பேருந்து நிலையம் நாகர்கோவில் நகராட்சியின் கட்டுபாட்டில் உள்ளது.

சேவைகள்[தொகு]

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப் படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகள் இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

முக்கிய வழிதடங்கள்[தொகு]

திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், திருவனந்தபுரம், சென்னை, ஊட்டி, வேளாங்கண்ணி, வேலூர், பெங்களூர், புதுச்சேரி, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், இராமேஸ்வரம், திருச்சி, தஞ்சாவூர்

வசதிகள்[தொகு]

  1. இணைய முன்பதிவு மையம் தமிழ்நாடு அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய முன்பதிவு மையம், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் அமைக்கப்பட்டு பயணிகளுக்கு முன்பதிவு செய்து கொடுக்கப்படுகிறது.[1]
  2. கட்டண கழிப்பறை
  3. இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பு மையம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-16. பார்க்கப்பட்ட நாள் 2017-01-06.