வசாய் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசாய் தாலுகா (Vasai taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் வசாய்-விராரில் உள்ளது. இத்தாலுகாவில் வசாய்-விரார் மாநகராட்சி, 1 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும மற்றும் 50 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 544.38 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3,18,180 குடும்பங்களும் கொண்ட வசாய் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 13,43,402 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 7,09,771 மற்றும் பெண்கள் 6,33,631 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 893 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1,62,841 - 12.12% ஆகும். சராசரி எழுத்தறிவு 77.88% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 3.98% மற்றும் 7.32% ஆகவுள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2468 பேர் வீதம் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 78.05%, இசுலாமியர்கள் 8.45%, பௌத்தர்கள் 2.53%, சமணர்கள் 1.75%, கிறித்துவர்கள் 8.25% மற்றும் பிறர் 0.25% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசாய்_தாலுகா&oldid=3782769" இலிருந்து மீள்விக்கப்பட்டது