லீலா சேத்
மாண்புமிகு லீலா சேத் | |
|---|---|
2011-இல் | |
| 8வது தலைமை நீதிபதி இமாச்சலப்பிரதேச நீதிமன்றம் | |
| பதவியில் 5 ஆகத்து 1991 – 20 அக்டோபர் 1992 | |
| முன்னையவர் | பி. சி. பி. மேனன் |
| பின்னவர் | சசி காந்த் சேத் |
| Judge, தில்லி உயர் நீதிமன்றம் | |
| பதவியில் 25 சூலை 1978 – 4 ஆகத்து 1991 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 அக்டோபர் 1930 இலக்னோ, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
| இறப்பு | 5 மே 2017 (அகவை 86) நொய்டா, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| துணைவர் | பிரேம் நாத் சேத் |
| பிள்ளைகள் | 3; விக்ரம் சேத் |
| பணி | நீதிபதி |
லீலா சேத் (Leila Seth)(20 அக்தோபர் 1930--5 மே 2017) என்பவர் தில்லி உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதியாகப் பதவி வகித்தவர் ஆவார். இவர் இமாச்சல பிரதேச உயர்நீதி மன்றத்தின் முதல் முதன்மை நீதிபதியாகவும் இருந்தவர்.[1]
வாழ்வும் பணிகளும்
[தொகு]உத்தரப்பிரதேச மாநிலம் இலக்னோவில் பிறந்த லீலா சேத் திருமணம் ஆனதும் தம் கணவருடன் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு சட்டம் பயின்று லண்டன் சட்டத் தேர்வில் வெற்றி பெற்று முதலில் வந்தார்.
இந்தியாவில் அசோக் குமார் சென் என்னும் வழக்கறிஞரிடம் இளையராகப் பணி செய்தார். வரிகள் சம்பந்தமான வழக்குகள், திருமண முறிவுகள் தொடர்பான குற்றவியல் வழக்குகள் போன்றவற்றை நடத்தினார். பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் வாரிசு உரிமைகள் சட்டத் திருத்தம் உண்டாகப் பங்களிப்புச் செய்தார். பொது உரிமையியல் சட்டம் என்னும் கருத்தாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தார். பெண்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து தம் கருத்துகளைச் சொல்லி வந்தார். 15 ஆவது சட்டக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
லீலா சேத்துக்கு மூன்று பிள்ளைகள். அவர்களில் ஒரு மகனான விக்ரம் சேத் என்பவர் ஆங்கிலப் புதின ஆசிரியர் ஆவார். லீலா சேத் தன் வரலாறு நூல் உள்பட மூன்று நூல்கள் எழுதியுள்ளார்.
இறப்பு
[தொகு]நீதிபதி லீலா சேத், 86 வயதில் நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் 5 மே 2017 அன்று இரவு இருதய-சுவாசத் தாக்குதலால் இறந்தார். இவருக்கு கணவர், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது விருப்பப்படி, மாற்றுச் சிகிச்சை அல்லது மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தனது கண்கள் மற்றும் பிற உறுப்புகளை தானம் செய்ததால், இறுதிச் சடங்கு எதுவும் நடைபெறவில்லை.[2][3]