லிந்தமுல்லை பத்தினிக் கோயில்

ஆள்கூறுகள்: 06°58′47.6″N 81°04′10.7″E / 6.979889°N 81.069639°E / 6.979889; 81.069639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிந்தமுல்லை பத்தினிக் கோயில்
Lindamulla Pattini Devalaya
ළිඳමුල්ල පත්තිනි දේවාලය
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இலங்கை, பதுளை
புவியியல் ஆள்கூறுகள்06°58′47.6″N 81°04′10.7″E / 6.979889°N 81.069639°E / 6.979889; 81.069639
சமயம்பௌத்தம்
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்பதுளை
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது8 சூலை 2005[1]

லிந்தமுல்லை பத்தினிக் கோயில் (Lindamulla Pattini Devalaya, சிங்களம்: ළිඳමුල්ල පත්තිනි දේවාලය) என்பது இலங்கையின் பதுளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு பழங்கால கோயில் ஆகும். இது தெமோதரை - ஓடைப் பள்ளத்தாக்கு - பதுளை பிரதான சாலையில், முத்தியங்கனா ராஜ மகா விகாரையிலிருந்து சுமார் 1.5 km (0.93 mi) தொலைவில் உள்ளது. இக்கோயிலானது பிள்ளைப்பேறு மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் தெய்வம் என்று நம்பப்படும் சிங்கள தெய்வமான பத்தினிக்கு (கண்ணகி கட்டபட்டுள்ளது.[2] இக்கோயிலானது தொல்லியல் சிறப்புமிக்க பாதுகாக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாக அரசாங்கத்தால் முறையாக 8 சூலை 2005 அன்று அரசாங்க வர்த்தமானி எண் 1401 இன் வழியாக அறிவிக்கபட்டுள்ளது. [3]

கோயில்[தொகு]

இந்த கோவிலில் வளாகத்தில் மாலிகவா (கருவறை), சமையலறை, போதி மரத்துடன் புத்தர் சன்னதி ஆகியவை உள்ளன. இருப்பினும் கருவறைக்கு முன்னால் சிங்காசன மண்டிராயா (அரியாசன அறை) இல்லை. சன்னதியின் வெளிப்புறச் சுவரானது பல்வேறு பழங்கால ஓவியங்களால் அழகூட்டபட்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]


குறிப்புகள்[தொகு]

  1. "Protected Monument List 2012-12-12" (PDF). தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை. 12 December 2012. Archived from the original (PDF) on 2018-11-23. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
  2. "லிந்தமுல்லை பத்தினிக் கோயில் (பதுளை)". இலங்கை பிரதீபா. 30 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Gazette". இலங்கை அரச வர்த்தமானி 1401. 8 July 2005.