லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 மகாசிவராத்திரியின் போது லிங்கராஜர் கோயிலின் தோற்றம்
லிங்கராஜர் கோயில், புவனேசுவரம், ஒடிசா

லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர் (Lingaraja Temple) இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றான இக் கோயில் இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்டது. இது இந்துக்களின் புனித யாத்திரைத் தலமும் ஆகும். லிங்கராஜர் என்பது லிங்கங்களின் அரசர் என்ற பொருள் தருகிறது. லிங்கம் சிவனை வழிபடுவதற்கான ஒரு வடிவம் ஆகும். இது சிவனின், உருவம் உள்ளதும் இல்லாததுமான அருவுருவம் எனப்படுகின்ற திருமேனியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.

வரலாறு[தொகு]

இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இதன் தற்போதைய அமைப்பில், பொ.ஊ. 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால், இக் கோவிலின் பகுதிகள் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சில சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. லிங்கராஜர் கோயில் கட்டப்பட்ட காலத்தில் விஷ்ணுவின் ஒரு வடிவமான ஜகந்நாதர் வழிபாடும் வளர்ச்சியடைந்து வந்தது. லிங்கராஜர் கோயிலில் விஷ்ணு சிவன் ஆகிய இரு கடவுளரதும் வழிபாடுகள் ஒன்றாக அமைந்திருப்பது இதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதிகிறார்கள்.

இக்கோயில், பொ.ஊ. 11 ஆம் நூற்றாண்டில் சந்திர குல மன்னரான ஜஜதி கேசரி என்பவரால் கட்டப்பட்டது என மரபுவழியாக நம்பப்படுகின்றது. எனினும் இதற்கான நம்பத்தகுந்த வரலாற்றுச் சான்றுகள் இல்லை. பொ.ஊ. 11 ஆம் நூற்றாண்டில் ஜஜதி கேசரி தனது தலை நகரத்தை ஜெய்ப்பூரில் இருந்து ஏகம்ரா சேத்திரம் என பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு மாற்றினான். கோவிலில் காணப்படும் குறிப்புகள் பொ.ஊ. 1114-1115இல் ஆண்ட அனந்தவர்மன் சோடகங்கா என்பவனுடைய காலத்தில் இந்தக் கோவில் கட்டுவதற்காக நிலம் மான்யமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோயிலின் மற்ற பகுதிகளான ஜக்மோகனா (வழிபாட்டுக் கூடம்), போக மண்டபம் (காணிக்கை மண்டபம்), நாட்டிய மண்டபம் ஆகியவை அதன் பிறகு கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.[1]

கோயி்ல் அமைப்பு[தொகு]

இதுதான் இந்த ஊரில் அமைந்துள்ள மிகப் பெரிய கோயில் ஆகும். இக் கோயில் விமானமானது 55 மீட்டர்கள் உயரத்துடன் மிகப் பெரியதாகத் திகழ்கிறது. 25000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோயிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150 க்கு மேற்பட்ட சிறிய கோயில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.[2]

கோயிலின் முதன்மை வாயில் கிழக்கிலும் மற்ற வாயில்கள் வடக்கு, தெற்கில் உள்ளன. கோயிலில் உள்ள 54 மீட்டர் உயரமுள்ள துயூலாவும் (பிரதான கோபுரம்) 29 மீட்டர் உயரமுள்ள ஜக்மோகனாவின் மேலுள்ள பிரமிட் கோபுரமும் (பீதா துயூலா) முழுவதும் சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளன.

லிங்கராஜர் கோயிலானது கருவறை, வேள்வி மண்டபம், கோக மண்டபம், நாட்டிய சாலை ஆகிய நான்கு பகுதிகளாக பிரிக்கும் விதத்தில் உள்ளது. கருவறையின் ஒரு பக்கக் கதவில் சூலமும் மற்றதில் சக்கரமும் உள்ளன. கருவறையிலுள்ள பிரம்மாண்ட சிவலிங்கமானது சுயம்புலிங்கம் எனப்படுகிறது. இது ஹரிஹர ரூபம் என்கின்றனர். அதாவது திருமாலும் இந்த லிங்கத்தில் உறைந்திருப்பதாக நம்பிக்கை. அதனால் இங்கு அர்ச்சனைக்காக விற்கும் பூக்குடலையில் வில்வ தளங்களும் துளசி இலைகளும் சேர்ந்தே காணப்படுகின்றன. ஆலயம் கட்டி முடிக்கப்படும்போது கலிங்க நாட்டில் ஜகன்னாதர் பக்தியும் பரவத் தொடங்கியது. இந்த லிங்கத்திலேயே திருமாலும் எழுந்தருளி இருக்கிறார் என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டனர்.

கோயில் வளாகத்தில் பார்வதி, கார்த்திகேயர், கணேசர் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனியாக கோவில்கள் உள்ளன. கோயிலின் வெளிப் பிரகாரத்தில் சாவித்ரி மாதாவுக்கும் ஜமராஜாவுக்கு (எமதர்மன்தான்) சன்னிதிகள் உள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு சன்னிதிக்கும் மிக உயரமான விமானங்கள் உள்ளன என்றாலும், தாரிணி தேவிக்கு மட்டும் தனி விமானம் கிடையாது. அவர் மரத்தின் கீழேதான் காட்சியளிக்கிறார்.

ஒட்டுமொத்த கோயிலையும் காண வசதியாக, கோயிலின் எல்லைப்புறச் சுவருக்கு அருகே ஓர் உயர்ந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதால், பிற சமயங்களைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட இந்த மேடையின் மீது நின்று கோயிலைக் கண்டு களிக்கிறனர்.[3]

விழாக்கள் மற்றும் வழிபாடு[தொகு]

இந்து புராணத்தின் படி, லிங்கராஜா கோயிலிலிருந்து தோன்றிய ஒரு நிலத்தடி நதி, பிந்துசாகர் குளத்தை நிரப்புகிறது (கடல் துளி என்று பொருள்). மேலும் இந்த நீர், உடல் மற்றும் ஆன்மீக நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. குளத்தில் இருந்து வரும் நீர் புனிதமாகக் கருதப்படுகிறது மற்றும் பண்டிகை சந்தர்ப்பங்களில் யாத்ரீகர்கள் புனித நீராடுகிறார்கள். கோயிலின் மைய தெய்வமான லிங்கராஜா சிவன் மற்றும் விஷ்ணு என வழிபடுகிறார். விஷ்ணு மற்றும் சிவன் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமான ஹரிஹரா என தெய்வத்தை வணங்கும் இந்த கோவிலில் இந்து மதம், சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு பிரிவுகளுக்கும் இடையிலான நல்லிணக்கம் காணப்படுகிறது. திருவிழா தெய்வத்தின் உருவத்துடன், கோவிலின் ருகுண ரத யாத்திரை லிங்கராஜாவின் வருடாந்திர ரத யாத்திரையாகும்.

festival cart of the temple with image of the festival deity
லிங்கராஜர் கோயிலின் வருடாந்திர தேர் திருவிழா - ருகுண ரத யாத்திரை

பால்குண மாதத்தில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரும் முக்கிய திருவிழா சிவராத்திரி ஆகும். இந்த புனித நாளில் லிங்கராஜாவுக்கு முழு நாள் உண்ணாவிரதம் தவிர, வில்வ இலைகள் வழங்கப்படுகின்றன. பக்தர்கள் இரவு முழுவதும் தெய்வத்தின் பெயரைச் சொல்லும்போது, இரவில் முக்கிய கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. கோயிலின் சுழலில் மகா தீபம் (ஒரு பெரிய விளக்கு) ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் பொதுவாக தங்கள் நோன்பை முடித்துக் கொள்கிறார்கள். இந்த திருவிழா லிங்கராஜா ஒரு அரக்கனைக் கொன்றதை நினைவுகூர்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சிரவண மாதத்தில் ஆயிரக்கணக்கான போல் போம் யாத்ரீகர்கள் மகாநதி நதியில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று கோவிலுக்குச் செல்கிறார்கள். [4] கோயில் ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் கோவில் நிலங்களை வைத்திருப்பவர்கள் லிங்கராஜாவுக்கு விசுவாசத்தையும், காணிக்கையையும் வழங்கும் ஒரு நாளாக, பாண்ட்ரா மாதத்தில் அரச காலங்களிலிருந்து சுனியன் நாள் அனுசரிக்கப்படுகிறது. கந்தன் யாத்திரை (சந்தன விழா) என்பது கோவிலில் கொண்டாடப்படும் 22 நாள் திருவிழா ஆகும், இது கோயிலின் ஊழியர்கள் பிந்துசாகர் குளத்தில் சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஒரு பெட்டியில் தங்களை வெளியேற்றும் போது., கோயில்களின் தெய்வங்களும் ஊழியர்களும் சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறார்கள். கோயிலுடன் தொடர்புடைய மக்களால் நடனங்கள், வகுப்புவாத விருந்துகள் மற்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி தயாரிப்புகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் லிங்கராஜரின் தேர் திருவிழா (ரத-யாத்திரை) அசோகாஷ்டமியில் கொண்டாடப்படுகிறது. தெய்வம் ரதேஸ்வர் தியூலா கோயிலுக்கு தேரில் கொண்டு செல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் லிங்கராஜா மற்றும் அவரது சகோதரி ருக்மணியின் சிலைகளைக் கொண்ட பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட ரதங்களைப் பின்தொடர்ந்து இழுக்கிறார்கள். [5]

லிங்கராஜா கோயில், வழிபாட்டு முறைகளில் தீவிரமாக உள்ளது, புவனேஸ்வரின் மற்ற பழங்கால கோவில்களைப் போலல்லாமல், அவை வழிபாட்டு மையங்களாக இல்லை. இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள பார்க்கும் தளத்திலிருந்து இதைப் பார்க்கலாம். கோயிலின் பிரதான நுழைவாயிலின் வலதுபுறத்தில் அமைந்துள்ள ஒரு பாதை வழியாக பார்க்கும் தளத்தையும் கோயிலின் பின்புறத்தையும் அடையலாம். [6] கோயிலின் புனிதத்தன்மை, நாய்களை அனுமதிக்காதது, குளிக்காமல் வரும் பார்வையாளர்கள், முந்தைய 12 நாட்களில் பிறப்பு அல்லது மரணத்தை சந்தித்த குடும்பங்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் இருக்கும் பெண்கள் ஆகியோரை கோயிலுக்குள் அனுமதிக்காமல் செய்வதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. [7] ஏதேனும் வெளிநாட்டு மீறல் ஏற்பட்டால், கோயிலில் ஒரு சுத்திகரிப்பு சடங்கு மற்றும் பிரசாதம் (உணவு பிரசாதம்) கிணற்றில் கொட்டப்படுகிறது. [8][9]

படத் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிருந்தா கணேசன் (5 சூன் 2014). "ஏகாமர க்ஷேத்ரம் திருபுவனேஸ்வர்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2018.
  2. Lingaraj Temple
  3. ஜி.எஸ்.எஸ் (20 சூலை 2018). "வில்வமும் துளசியும் இணைந்த பூக்குடலை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2018.
  4. "Thousands congregate at Lingaraj temple". The Hindu. 28 July 2008 இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081014104351/http://www.hindu.com/2008/07/28/stories/2008072856470300.htm. பார்த்த நாள்: 13 January 2012. 
  5. "Hindus participate in Lingaraja's chariot procession in Bhubaneshwar". Hindustan Times, Delhi(subscription required). 27 March 2007 இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140610060106/http://www.highbeam.com/doc/1P3-1244699681.html. பார்த்த நாள்: 15 September 2012. 
  6. "Bhubaneswar tourist attractions". Bhubaneswar Municipal Corporation. Archived from the original on 10 ஆகத்து 2011. பார்க்கப்பட்ட நாள் 12 செப்தெம்பர் 2006.
  7. Kleinman, Arthur; Byron Good (1985). Culture and Depression: Studies in the Anthropology and Cross-Cultural Psychiatry of Affect and Disorder. London: University of California Press. பக். 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-05493-8. https://books.google.com/?id=qSXap1Us-CAC&pg=PA205&dq=lingaraj+temple#v=onepage&q=lingaraj%20temple&f=false. 
  8. "Russian enters Lingaraj temple". The Times of India. 24 January 2012 இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203041653/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-24/bhubaneswar/30658776_1_hindu-nri-boy-ryszard-ankur-ahuja-russian-tourist. பார்த்த நாள்: 13 January 2012. 
  9. "Russian held for entering Lingaraj temple". The Daily Pioneer. 25 January 2012. http://www.dailypioneer.com/state-editions/bhubaneswar/37695-russian-held-for-entering-lingaraj-temple.html. பார்த்த நாள்: 13 January 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]