ரோவர்சு கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2nd Bttln Middlesex Regiment winning the Rovers Cup in 1926

ரோவர்சு கோப்பை (Rovers Cup) என்பது இந்தியாவில் நடத்தப்படும் கால்பந்துப் போட்டியாகும். இப்போட்டி 1891-இல் பிரிட்டிசு கால்பந்து ஆர்வலர்களால் பாம்பேயில், தற்போது மும்பை, தொடங்கப்பட்டது. இது டியூரான்டு கோப்பைக்கு அடுத்தபடியாக மிகப் பழமையான இந்தியக் கால்பந்துப் போட்டியாகவிருந்தது. ஆனால், தற்போது இக்கோப்பைக்கான போட்டிகள் நடத்தப்படுவதில்லை. கடைசியாக 2000-01 பருவத்தில் நடத்தப்பட்டது, அதில் மோகுன் பகன் அணியினர் சர்ச்சில் பிரதர்சு விளையாட்டுக் கழக அணியை 2-0 என்ற இலக்கு கணக்கில் வீழ்த்தி வாகைசூடினர். மேற்கிந்திய கால்பந்து சங்கம் (Western India Football Association-WIFA) இக்கோப்பையை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது.[1]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோவர்சு_கோப்பை&oldid=1383874" இலிருந்து மீள்விக்கப்பட்டது