ருவான்வெலிசாய

ஆள்கூறுகள்: 8°21′0″N 80°23′47″E / 8.35000°N 80.39639°E / 8.35000; 80.39639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ruwanweli Maha Seya
රුවන්වැලිසෑය
ருவான்வெலிசாய தூபி
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்8°21′0″N 80°23′47″E / 8.35000°N 80.39639°E / 8.35000; 80.39639
சமயம்தேரவாத பௌத்தம் பௌத்தம்

நாற்பது வருடகாலம் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப் போரில் வென்று, இலங்கை முழுவதற்கும் அரசனானான் துட்டகைமுனு. இவனால் அமைக்கப்பட்டதே ருவான்வெலிசாய எனப்படும் பெரிய தாது கோபுரம் ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமானதாக விளங்குகிறது. அக்காலக் கட்டுமானப் பொறியியலில் இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடம் ஆகும். இது, மகாதூப, சுவர்ணமாலி சைத்திய, ரத்னமாலி தாகபா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.[1]

பண்டைய அனுராதபுரத்தின், சொலொஸ்மஸ்தானங்கள் எனப்படும் 16 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும், அட்டமஸ்தானங்கள் எனப்படும் 8 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும் இது ஒன்றாக விளங்குகிறது. 300 அடி உயரமும், 950 அடி சுற்றளவும் கொண்ட இக் கட்டுமானம், உலகின் மிக உயரமான கட்டுமானச் சின்னங்களுள் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ruwanwelisaya". Archived from the original on 2017-09-24. பார்க்கப்பட்ட நாள் 2018-01-14.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ruwanwelisaya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ருவான்வெலிசாய&oldid=3629742" இலிருந்து மீள்விக்கப்பட்டது