ரா. கி. ரங்கராஜன்
ரா. கி. ரங்கராஜன் (அக்டோபர், 5, 1927 - ஆகஸ்ட் 18, 2012) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
ரங்கராஜன் 5-10-1927-இல் கும்பகோணத்தில் ரெட்டியார்குள வடகரையில் 21ஆம் எண் வீட்டில் பிறந்தார். [1] இவர் தந்தை மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சமசுகிருதப் பண்டிதர். இவர் அண்ணன் ரா.கி.பார்த்தசாரதியும் (ஆர்.கே.பார்த்தசாரதி) சமசுகிருதப்பண்டிதரே. ரங்கராஜன் தன் 16-ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-இல் பேராசிரியர் சீனிவாசராகவனின் பரிந்துரையால் ‘சக்தி’ மாத இதழில் உதவியாசிரியராக தனது எழுத்துலக வாழ்க்கையைத் தொடங்கினார். [1] பின்னர் ‘காலச்சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-இல் குமுதம் நிறுவனம் சிறிது காலம் நடத்திய ‘ஜிங்லி’ என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
இவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, முள்றி, அவிட்டம்,வினோத் ஆகியவை அவற்றுள் சில. 'நான் கிருஷ்ணதேவராயன்' இவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினம். ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சலஸ் (ஜெனிஃபர்); ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல் (டுவிஸ்ட் கதைகள்) டேனியேல் ஸ்டீலின் காதல் மேல் ஆணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள். கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுட கதைகளும் டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக் கதைகள், வினோத் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட செய்திக் கட்டுரைகள் (லைட்ஸ் ஆன் வினோத்) என பலவித படைப்புகளை எழுதியுள்ளார்.
இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும் , 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன. இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. பல படைப்புகள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் அண்ணா நகர் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைத்தொடர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை “நாலு மூலை” என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. ”அவன்” என்ற பெயரில் தன் வரலாற்றையும் எழுதியுள்ளார். இளம் எழுத்தாளர்களுக்குக் கதை எழுதும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் எப்படிக் கதை எழுதுவது? என்ற வகுப்பினையும் தான் ஒருவராகவே நடத்தி வந்தார்.[1]
ரா.கி.ர வின் படைப்புகள்[தொகு]
- உள்ளேன் அம்மா
- ஊஞ்சல்
- ஒரு தாய், ஒரு மகள்
- தர்மங்கள் சிரிக்கின்றன
- தாரகை 1 (மொழிபெயர்ப்பு)
- தாரகை 2 (மொழிபெயர்ப்பு)
- நான் கிருஷ்ண தேவராயன் - 1
- நான் கிருஷ்ண தேவராயன் - 2
- படகு வீடு
- பட்டாம்பூச்சி (மொழிபெயர்ப்பு)
- மூவிரண்டு ஏழு
- வயது பதினேழு
- புரொபசர் மித்ரா
- சின்னக் கமலா
- மறுபடியும் தேவகி
- பல்லக்கு
- அடிமையின் காதல்
- இது சத்தியம்
- முதல் மொட்டு
- மேடம்
- காதல் மேல் ஆணை ( டேனியல் ஸ்டீல்0
- லாரா ( சிட்னி ஷெல்டன்)
- ஜெனிபர்
- அழைப்பிதழ்
- ராசி
- கோஸ்ட்
- க்ரைம்
- கையில்லாத பொம்மை
- உள்ளேன் அம்மா
- அபாய நோயாளி
- ஒளிவதற்கு இடமில்லை (1,2)
- ஹவுஸ்ஃபுல்
- புரட்சித் துறவி
- ஒரு தற்கொலை நடக்கப் போகிறது
- நான் ஏன்?
- தூரன் என்ற களஞ்சியம்
- எங்கிருந்து வருகுவதோ?
- ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி
- நீங்களும் முதல்வராகலாம்
- அங்குமிங்குமெங்கும்
- அவன்
- நாலு மூலை
- காதல் கதைகள்
- திக்-திக் கதைகள்
- ட்விஸ்ட் கதைகள்
- கன்னா பின்னா கதைகள்
- விஜி
- இன்னொருத்தி
- நாலு திசையிலும் சந்தோஷம்
- ஒரே ஒரு வழி
- எப்படிக் கதை எழுதுவது
- அடிகளார் ஓர் உறவுப் பாலம்
- பந்தயம் ஒரு விரல்
- ஹேமா ஹேமா ஹேமா
- அழைப்பிதழ்
- ஒரு தாய் ஒரு மகள்
- ஹவுஸ்புல்
- மேடம் (ஜெஃப்ரி ஆர்ச்சர் நாவலின் மொழி பெயர்ப்பு) 1995 - குனியர் விகடனில் தொடர்.
- எங்கே? எங்கே? எங்கே? (டேனியல் ஸ்டீல் நாவலின் மொழிபெயர்ப்பு) 1995 சூனியர் விகடனில் தொடர்.
- மரணம். . . கடவுள் சாய்ஸ்! (ஆர்தர் ஹெய்லி. மொழிபெயர்ப்பு) 1999 இல் சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
மேற்கோள்கள்[தொகு]
- எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் காலமானார் - (தமிழில்)
- Peppy and prolific - (ஆங்கில மொழியில்)
- Autobiography - (ஆங்கில மொழியில்)
ரா.கி.ர வைப் பற்றிப் பெரியோர்[தொகு]
“ | "ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம்.ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி. கிடைத்தது போதும் என்கிற திருப்தி. சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம்,வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி. நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவை இவருடைய சிறப்புகள்" - சுஜாதா | ” |