ராஜன் வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசன் கொலை செய்யப்பட்டவர்

ராஜன் வழக்கு (Rajan case), இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனக் காலகட்டத்தில், தவறுதலாகப் பெயர்க்குழப்பத்தில் மாற்றி அழைத்துச் செல்லப்பட்ட ராஜன் எனும் கேரளாவின் கோழிக்கோட்டு பகுதி மாணவரின் கொலையைப் பற்றிய வழக்கு. [1]

நெருக்கடி நிலைப் பிரகடனத்திற்கு பின்னர் தனது மகன் உயிரோடு உள்ளாரா, இல்லை என்னவானார், எங்குக் கொண்டு செல்லப்பட்டார் என விசாரித்து ராஜனின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.

இவரது கசப்பான அனுபவங்களையும், அரசியல் மற்றும் காவல்துறையினரிடம் அணுகியபோது இவர் பெற நேர்ந்த பதில்களையும் மகனைக் குறித்த தகவல்களைத் தேடிய ஒரு தந்தையாக இவர் எழுதிய புத்தகமாக வெளியிடப்பட்டது. [2]

திரைவடிவம்[தொகு]

ராஜன் வழக்கையும் ராஜனையும் தழுவி எடுக்கப்பட்ட ’பிறவி’ (Piravi) எனும் 1989 ஆம் ஆண்டின் மலையாளத் திரைப்படம் தொலைந்த மகனைத் தேடும் தந்தையின் காயங்களை வெளிப்படுத்தியது.இத்திரைப்படம் உலகளவில் மொத்தத்தில் 31 விருதுகள் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜன்_வழக்கு&oldid=2474244" இலிருந்து மீள்விக்கப்பட்டது