ராக்காயி அம்மன் கோயில்

ராக்காயி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை (வடக்கு) வட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழகர் மலை காப்புக் காட்டில் அமைந்த அம்மன் கோயிலாகும். இக்கோயில் மதுரை நகரத்திலிருந்து வடக்கே 24 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]
அழகர்மலை மீதமைந்த பழமுதிர் முருகன் கோயிலுக்கு சிறிது தொலைவில் உள்ள அழகர் மலையில் ராக்காயி அம்மன் சன்னதி உள்ளது. இராக்காயி அம்மன் சன்னதி முன் உள்ள தொட்டியில் விழும் தீர்த்தத்தின் பெயர் நூபுர கங்கை தீர்த்தம் ஆகும். இதனை சிலம்பாறு என்பவர்.[2]
ராக்காயி அம்மன் சன்னதி முன் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்திலிருந்து நீர் எடுத்து அழகருக்கு அன்றாடம் அபிசேகம் செய்வர். இக்கோயிலின் தல ஜோதி விருட்சம் ஆகும். இக்கோயில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும்.[3][4]
போக்குவரத்து
[தொகு]மதுரை மாநகரிலிருந்து பேருந்து மூலம் அழகர் கோவில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக நடந்தும், சிற்றுந்துகள், வாடகை வண்டிகள் மூலம், பழமுதிர்சோலை முருகன் கோயில் வழியாக ராக்காயி அம்மன் கோயிலை அடையலாம்.
இதனையும் காண்க
[தொகு]- மதுரை கள்ளழகர் கோயில்
- நூபுர கங்கை தீர்த்தம்
- பழமுதிர்சோலை முருகன் கோயில்
- மதுரை கள்ளழகர் கோயில் வழக்கு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராக்காயி அம்மன் வரலாறு என்ன? தீர்த்தம் தரும் அற்புத பலன்கள் - மதுரை அழகர் மலை அற்புதம்
- ↑ agarathi.com. "சிலம்பாறு | அகராதி | Tamil Dictionary". agarathi.com. Retrieved 2025-05-08.
- ↑ மலர், மாலை (2018-05-07). "அருள்மிகு ராக்காயி அம்மன் கோவில் - மதுரை | Rakkayi amman temple madurai". www.maalaimalar.com. Retrieved 2025-05-08.
- ↑ ரோகங்களைப் போக்கும் ராக்காயி அம்மன்