ரம்பன்
ரம்பன் என்பவர் இந்து தொன்மவியலில் வருகின்ற அரக்கன்.[1] [2]இவரது சகோதரன் கரம்பனை இந்திரன் முதலை வடிவெடுத்து கொன்றார், அதனால் இந்திரனை அழிக்க கூடிய மகன் வேண்டுமென தவமிருந்து அக்னி தேவனிடம் வரம் பெற்றார்.
யச்சினிகள் வாழுகின்ற உலகத்திற்கு சென்று அங்கு எருமை வடிவலிருந்த யச்சினியை திருமணம் செய்தார்.[3] அரக்கர் உலகத்தில் எருமை மனைவிக்கு மரியாதை கிடைக்கவில்லை. அதனால் யச்சினி உலகிற்கே சென்றனர். அங்கு இவர்களுக்கு மகிஷாசுரன் என்ற அரக்கன் பிறந்தான்.
யச்சினி எறுமைகள் சண்டையிட்டுக் கொண்டதில் ரம்மனின் மனைவி மற்றொரு எறுமையால் கொல்லப்பட்டார். காப்பாற்ற அரக்கன் ரம்பன் சென்று மற்றொரு எருமை தாக்க மாண்டான்.