ரமையா வஸ்தாவையா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமையா வஸ்தவையா
இயக்கம்பிரபு தேவா
தயாரிப்புகுமார் தௌரானி
கதைசிராசு அகமது
இசைசச்சி-ஜிகர்
நடிப்பு
ஒளிப்பதிவுகிரண் தியோஹனா
கலையகம்டிப்ஸ் இந்தஸ்டிரீஸ் லிமிடெட்
வெளியீடுசூலை 19, 2013 (2013-07-19)[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு30 கோடி (US$3.9 மில்லியன்)[2]

ரமையா வஸ்த வையா என்பது 2013 ஆம் ஆண்டு, ஜூலை 19 ஆம் நாள் வெளியான இந்தித் திரைப்படம். இதை பிரபு தேவா இயக்கியுள்ளார்.[3]

இது பிரபு தேவா ஏற்கனவே தெலுங்கில் இயக்கிய நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா என்ற திரைப்படத்தின் மறுபதிப்பு ஆகும். இந்த தெலுங்கு படம் 1980களில் வெளியான மைனே பியார் கியா என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.[4]

திரைக்கதை[தொகு]

தன் செல்வம் மிக்க தாய், தந்தையருடன் ஆஸ்திரேலியாவில் வசிப்பவன் இராம். இந்தியாவின் பஞ்சாபில் உள்ள சிறிய குக்கிராமத்தில் தன் அண்ணன் ரகுவிலன் அரவணைப்பில் வளரும் பெண் சோனா. இந்தியாவில் நிகழும் உறவினர் திருமணத்திற்கு வரும் இராம், சோனாவைக் காண்கிறான். இருவரும் காதல் வயப்படுகின்றனர். இவர்களின் காதல் சோனாவின் அண்ணனுக்குத் தெரிய வருகிறது. தன் விளைநிலத்தில் அதிக பயிர்களை விளைவித்து அறுவடை செய்தால், தன் தங்கையை மணமுடித்துத் தருவதாகக் கூறுகிறான்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]