யோ. திருவள்ளுவர்
யோ. திருவள்ளுவர் | |
---|---|
பிறப்பு | சூலை 22 |
வலைத்தளம் | |
http://www.thiruvalluvar.in/ |
யோ. திருவள்ளுவர் உலக விவகாரங்கள் குறித்தும், உரிமைக்காகப் போராடுபவர்கள் குறித்தும் ஆராய்ந்து எழுதுபவர்களில் ஒருவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்சமயம் தொழில் நிமித்தமாக பெல்யியத்தில் வாழ்கிறார். 20 ஆண்டுகளாக ஈழம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
வாழ்க்கைக்குறிப்பு[தொகு]
இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலைக்கு அருகே உள்ள மணலிக்கரை என்னும் கிராமத்தில் பிறந்தவர்.
எழுத்து[தொகு]
இவரது புலம் பெயர் தொழிலாளர் பற்றிய சோகக்கதைகளைக் கொண்ட "திரை கடலோடியும் துயரம் தேடு" நூல் குறிப்பிடும்படியாக வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.
செயற்பாடுகள்[தொகு]
1987 இல் இருந்து கூடங்குளம் அணு உலைக்கான எதிர்ப்பு, அனைவருக்கும் வேலை உத்தரவாதம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்.
வெளி வந்த நூல்கள்[தொகு]
- திரை கடலோடியும் துயரம் தேடு (ஆழி வெளியீடு)
- ஈழம், இனப்படுகொலைகளுக்குப் பின்னால்