யூதர்களின் வரலாறு

வரலாற்று ரீதியிலான இசுரேல் மற்றும் யூதேயாவைச் சேர்ந்த இசுரயேலர் மற்றும் எபிரேயரிலிருந்து யூதர்கள் தோன்றினர் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த இரு தொடர்புடைய இராச்சியங்களும் இரும்புக் காலத்தின் போது லெவண்ட் பகுதியில் தோன்றியவையாகும்.[1][2] இசுரயேலர் குறித்த தொடக்க கால குறிப்பானது மெனப்தா கல்வெட்டில் (அண். 1213–1203 பொ. ஊ. மு.) பொறிக்கப்பட்டுள்ளது. இசுரயேலர்களின் கதையைக் கூறும் பிந்தைய சமய இலக்கியங்கள் குறைந்தது பொ. ஊ. மு. 1,500-ஆம் ஆண்டிலேயே யூதர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. பாரம்பரியமாக இசுரேல் என்ற பெயரானது எபிரேய பிதாப்பிதாவான யாக்கோபுவிடமிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இசுரேல் என்ற பெயரின் தோற்றத்தின் ஒரு விளக்கத்தை இவர் வழங்குகிறார். ஒரு தேவ தூதனுடன் மல்யுத்தம் செய்ததற்குப் பிறகு யாக்கோபுவுக்கு இசுரேல் என்று பெயர் மாற்றப்படுகிறது. இப்பெயரின் பொருள் "கடவுளுடன் போராடுபவன்" என்பதாகும். சமாரியாவை அடிப்படையாகக் கொண்டிருந்த இசுரேல் இராச்சியமானது புது அசிரியப் பேரரசிடம் பொ. ஊ. 720-ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்தது.[3] யூதேயா இராச்சியமானது புது பாபிலோனியப் பேரரசிடம் பொ. ஊ. மு. 586-ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்தது.[4] யூதேயாவின் மக்கள் தொகையில் ஒரு பங்கினர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர். அசிரிய மற்றும் பாபிலோனிய சிறைப்படுத்தல் காலங்களானவை புலம்பெயர்ந்த யூதர்களின் தொடக்கமாகக் கருதப்படுகின்றன.
அகாமனிசியப் பேரரசு இப்பகுதியை வென்றதற்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட யூதர்கள் திரும்பி வரவும், தங்களது கோயிலை மீண்டும் கட்டவும் அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் இரண்டாம் கோயில் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன.[5][6] பல நூற்றாண்டுகள் அயல்நாட்டு ஆட்சிக்குப் பிறகு செலூக்கியப் பேரரசுக்கு எதிரான மக்கபேய கிளர்ச்சியானது சுதந்திரமான அசுமோனிய இராச்சியம் அமைவதற்கு வழி வகுத்தது.[7] ஆனால், இந்த இராச்சியம் படிப்படியாக உரோமானிய ஏகாதிபத்திய அமைப்புக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டது.[8] பொ. ஊ. ஒன்றாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் உரோமானியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு தொடர்ச்சியான வெற்றிகரமாக அமையாத கிளர்ச்சிகளான யூத-உரோமைப் போர்களானவை எருசலேம் மற்றும் இரண்டாவது கோயில் அழிக்கப்பட்டு[9] பல யூதர்கள் வெளியேற்றப்படுவதில் முடிவடைந்தன.[10] சிரியா பாலத்தீனாவின் யூத மக்கள் தொகையானது தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் படிப்படியாகக் குறைந்தது. புலம்பெயர்ந்த யூதர்களின் பங்கை மேம்படுத்தியது. மக்கள் தொகைக் குறைவுக்கு உள்ளான யூதேயாவில் இருந்து கலிலேயாவுக்கும், பிறகு பாபிலோனுக்கும் யூதர்களின் ஆன்மீக மற்றும் மக்கள் தொகை மையத்தை இது இடம் மாற்றியது. இதனுடன் சேர்த்து சிறிய யூத சமூகங்களானவை உரோமைப் பேரரசு முழுவதும் சிதறிக் காணப்பட்டன. இக்காலத்தின் போது மைய யூத நூல்களான மிசுனா மற்றும் தல்மூத் ஆகியவை இயற்றப்பட்டன. தொடர்ந்து வந்த ஆயிரமாண்டு காலத்தில் தங்களது மூதாதையர்கள் எங்கு குடியிருந்தனரோ அதைப் பொறுத்து மூன்று முதன்மையான இன உட்பிரிவுகளாக புலம்பெயர்ந்த யூத சமூகங்கள் ஒன்றிணைந்தன. அவை நடு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த அசுகனாசி, தொடக்கத்தில் ஐபீரியாவிலிருந்த செபராது மற்றும், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த மிசுராகி ஆகியோராவர்.[11][12]
தொடக்க கால முசுலீம் படையெடுப்புகளானவை கிழக்கு நடுநிலம் மீதான பைசாந்தியப் பேரரசின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தன. இவ்வாறாக புதிதாக நிறுவப்பட்ட ராசிதீன் கலீபகமானது ஏழாம் நூற்றாண்டின் போது லெவண்ட், மெசொப்பொத்தேமியா, மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றியது. எட்டாம் நூற்றாண்டின் போது ஐபீரிய மூவலந்தீவைக் கைப்பற்றியது. யூதப் பண்பாடானது எசுப்பானியாவில் ஒரு பொற்காலத்தைக் கண்டது. சமூகத்தில் யூதர்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். யூதர்களது சமய, பண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்வானது செழிப்படைந்தது. இந்நிலை சகிப்புத் தன்மையற்ற அல்மொகதர்கள் வரும் வரை நீடித்திருந்தது. 1492-இல் எசுப்பானியாவிலிருந்து வெளியேறும் நிலைக்கு யூதர்கள் தள்ளப்பட்டனர். பெருமளவில் உதுமானியப் பேரரசு மற்றும் இத்தாலிக்குப் புலம் பெயர்ந்தனர். 12-ஆம் மற்றும் 15-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அசுகனாசி யூதர்கள் நடு ஐரோப்பாவில் கடுமையான ஒடுக்கு முறைகளை எதிர் கொண்டனர். இது போலந்துக்கு இவர்களைப் பெருமளவுக்குப் புலம் பெயரத் தூண்டியது.[13][14] 18-ஆம் நூற்றாண்டானது அசுகலா சிந்தனைசார் இயக்கத்தின் (யூத அறிவொளிக் காலம்) வளர்ச்சியைக் கண்டது. மேலும், 18-ஆம் நூற்றாண்டில் தொடங்கி தங்களை வரம்புபடுத்தும் சட்டங்களிலிருந்து சம உரிமை அளிக்க வேண்டியும், பரந்த ஐரோப்பிய சமூகத்திற்குள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியும் யூதர்கள் செயல்படத் தொடங்கினர்.
மேற்கு ஐரோப்பாவிலிருந்த யூதர்கள் அதிகரித்து வந்த நிலையாக சட்டத்தின் முன்னர் சம உரிமை பெற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருசியப் பேரரசின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த குடியிருப்பின் வெளிர் பகுதி என்று அழைக்கப்பட்ட பகுதியில் யூதர்கள் அதிகரித்து வந்த ஒடுக்கு முறை, சட்ட ரீதியிலான கட்டுப்பாடுகள் மற்றும் பரவலான அமைப்பு ரீதியிலான படுகொலைகளை எதிர் கொண்டனர். 1870-கள் மற்றும் 1880-களின் போது பாலத்தீனத்தில் ஒரு யூத அரசை மீண்டும் நிறுவும் குறிக்கோளுடன் உதுமானிய சிரியாவிற்குப் புலம் பெயரும் செயல்பாட்டை ஐரோப்பாவிலிருந்து யூத மக்கள் அதிக செயல்பாட்டுடன் விவாதிக்கத் தொடங்கினர். 1897-ஆம் ஆண்டு சியோனியமானது அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. மேற்குறிப்பிட்ட அமைப்பு ரீதியிலான படுகொலைகளானவை 1881 மற்றும் 1924-க்கு இடையில் ஐக்கிய அமெரிக்காவுக்கு 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் மொத்தமாக புலம் பெயர்வதற்குத் தூண்டின.[15] ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் யூதர்கள் அறிவியல், பண்பாடு மற்றும் பொருளாதார தளங்களில் ஆதிக்கமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். இதில் பொதுவாக மிகப் பிரபலமாக கருதப்படுபவர்களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும் லுட்விக் விட்கென்ஸ்டைன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.[16]
செருமனியில் இட்லர் மற்றும் நாசிக் கட்சி அதிகாரத்திற்கு வந்த போது 1933-இல் யூதர்களின் நிலையானது கடினமாகியது. பொருளாதார பிரச்சினைகள், இன ரீதியிலான யூத எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் நிகழப் போகும் போர் குறித்த ஓர் அச்சம் ஆகியவை ஐரோப்பாவிலிருந்து கட்டளைப் பாலத்தீனப் பகுதிக்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் பல யூதர்கள் தப்பித்துச் செல்வதற்குக் காரணமானது. 1939-இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. 1941 வரை செருமனி கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பாவையும் ஆக்கிரமித்திருந்தது. 1941-இல் சோவியத் ஒன்றியம் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து செருமனி இறுதித் தீர்வு எனும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது. அதற்கு முன்னர் நடந்திராத அளவில் நடைபெற்ற ஒரு விரிவான, அமைப்பு ரீதியிலான செயல்பாடு இதுவாகும். யூத மக்கள் கொன்றழிக்கப்படுவதை குறிக்கோளாக இது கொண்டிருந்தது. ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் யூதர்கள் ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் இது காரணமானது. போலந்தில் அனைத்து வன்சிறைக் காப்பிடங்களையும் சேர்ந்த விஷ வாயு முகாம்களில் யூதர்கள் கொல்லப்பட்டனர். அவுஷ்விட்ஸ் வதை முகாம் வளாகத்தில் கொல்லப்பட்டனர். யூதர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இந்த இனப் படுகொலையானது பெரும் இன அழிப்பு என்று அறியப்படுகிறது.
பெரும் இன அழிப்புக்கு முன்னரும், இன அழிப்பின் போதும் பெருமளவு எண்ணிக்கையிலான யூதர்கள் கட்டளைப் பாலத்தீனப் பகுதிக்குப் புலம் பெயர்ந்தனர். மே 14, 1948 அன்று பிரித்தானியாவின் கட்டளைப் பாலத்தீனப் பகுதி முடிவுக்கு வந்த போது தாவீது பென்-குரியன் எரெத்சு இசுரேலில் (இசுரேல் நிலம்) ஒரு யூத மற்றும் சனநாயக அரசான இசுரேல் உருவாக்கப்படுவதை அறிவித்தார். இதற்குப் பிறகு உடனடியாக அனைத்து அண்டைப் பகுதி அரபு நாடுகளும் படையெடுத்தன. புதிதாக உருவாக்கப்பட்ட இசுரேலிய பாதுகாப்புப் படைகள் எதிர்த்து தாக்குப் பிடித்தன. 1949-இல் போரானது முடிவுக்கு வந்தது. இசுரேல் அரசைக் கட்டமைப்பதைத் தொடங்கியது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலுமிருந்து வந்த அலியாவின் பெரும் அலைகளை உள்ளிழுத்துக் கொண்டது. 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி இசுரேலானது ஒரு நாடாளுமன்ற முறையாக 96 இலட்சம் மக்கள் தொகையுடன் உள்ளது. இதில் 70 இலட்சம் பேர் யூதர்கள் ஆவர். இசுரேலுக்கு வெளியில் உள்ள மிகப் பெரிய யூத சமூகமானது ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது. அதே நேரத்தில், பெரும் சமூகங்களானவை பிரான்சு, கனடா, அர்ஜென்டினா, உருசியா, ஐக்கிய இராச்சியம், ஆத்திரேலியா மற்றும் செருமனி ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
மேலோட்டம்
[தொகு]பண்டைக் கால யூத வரலாறானது விவிலியம், விவிலியத்திற்கு வெளியிலுள்ள ஆதாரங்கள், திருமுறையில் ஏற்றுக் கொள்ளப்படாத விவிலிய நூல்கள், கிறித்துவின் பிறப்பிற்கு 200 ஆண்டுகள் ஒட்டியவாறு எழுதப்பட்ட யூத நூல்கள், சொசிபசின் நூல்கள், கிரேக்க-உரோமானிய எழுத்தாளர்கள் மற்றும் திருச்சபைத் தந்தையர், மேலும் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுகள், பண்டைக் கால ஆவணங்கள் (எலிபென்டைனிய பாபிரசு, பையூம், சாக்கடல் சுருள் ஏடுகள், பார் கோக்பா மடல்கள், பபதாவின் ஆவணங்கள், கெய்ரோ கெனிசா ஆவணங்கள் போன்றவை) ஆகியவற்றுடன் சேர்த்து வாய் வழி வரலாறு, மிதுராசு மற்றும் தல்மூத்தில் உள்ள விவரிப்புகளின் தொகுப்புகள் ஆகியவற்றிலிருந்து அறியப்படுகிறது.
தொடக்க நவீன காலத்தில் அச்சு எந்திரத்தின் வருகையுடன் யூத வரலாறுகளும், எபிரேய விவிலியத்தின் தொடக்க கால பிரதிகளும் பதிப்பிக்கப்பட்டன. இவை யூத சமயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையவையாக இருந்தன. அதிகரித்து வந்த நிலையாக யூதர்களின் தேசிய வரலாறுகள், யூத மக்கள் மற்றும் அடையாளம் குறித்த தகவல்களைக் கொண்டவையாகத் திகழ்ந்தன. ஒரு கையெழுத்துப் பிரதி அல்லது எழுத்தரைக் கொண்ட பண்பாட்டிலிருந்து ஓர் அச்சிடும் பண்பாட்டிற்கு மாறிய ஒரு நகர்வாக இது இருந்தது. யூத வரலாற்றாளர்கள் தங்களது ஒட்டு மொத்த அனுபவங்கள் குறித்த நூல்களை எழுதினர். ஆனால், அதிகரித்து வந்த நிலையாக வரலாற்றை அரசியல், பண்பாடு மற்றும் அறிவியல் அல்லது தத்துவ தேடலுக்காகவும் பயன்படுத்தினர். நிகழ்கால நிலையை விமர்சிக்கவோ அல்லது மேம்படுத்தவோ ஒரு தர்க்க ரீதியிலான விவரிப்பைக் கட்டமைப்பதைத் தேடுதலாகக் கொண்ட எழுத்தாளர்கள் பண்பாட்டு ரீதியாக தருவிக்கப்பட்ட நூல்களின் ஒரு தரவகத்திலிருந்து தங்களது தகவல்களைப் பெற்றனர். ஐரோப்பிய மறுமலர்ச்சி மற்றும் அறிவொளிக் காலம் போன்ற சிந்தனைசார் இயக்கங்களுடன் நவீன யூத வரலாற்றியலானது பின்னிப் பிணைந்ததாக உள்ளது. ஆனால், பிந்தைய நடுக்காலத்தில் அதற்கு முந்தைய கால நூல்களிலிருந்தும் தகவல்களைப் பெற்றும், பண்டைக் காலத்தில் பல்வேறுபட்ட ஆதாரங்களுக்குள் இருந்தும் தகவல்களைப் பெற்றது. தற்காலத்தில் யூதர்கள் மற்றும் யூத சமயத்தின் வரலாறானது பொதுவாக ஏழு காலங்களாகப் பிரிக்கப்படுகிறது:
- பண்டைக் கால இசுரேல் மற்றும் யூதேயா (அண். 1200–பொ. ஊ. மு. 586)
- இரண்டாம் கோயில் காலம் (அண். பொ. ஊ. மு. 516 – பொ. ஊ. 70)[17]
- யூதக் குருமார் அல்லது தல்மூதிய காலம் (70–பொ. ஊ. 640)[18]
- நடுக் காலங்கள் (640–1492)
- தொடக்க நவீன காலம் (1492–1750)
- நவீன காலம் (1750–20ஆம் நூற்றாண்டு)
- சியோனியம், பெரும் இன அழிப்பு மற்றும் இசுரேல் நிறுவப்படுதல் (19ஆம்–21ஆம் நூற்றாண்டுகள்)
பண்டைக் கால இசுரேல் (1500–பொ. ஊ. மு. 586)
[தொகு]தொடக்க கால இசுரயேலர்
[தொகு]
தொடக்க கால யூதர்கள் மற்றும் அவர்களுக்கு அண்டைப் பகுதியில் வாழ்ந்தவர்களின் வரலாறானது வளமான பிறை பிரதேசம் மற்றும் நடுநிலக் கடலின் கிழக்கு கடற்கரையை மையமாகக் கொண்டிருந்தது. நைல் மற்றும் மெசொப்பொத்தேமியாவுக்கு இடையில் அமைந்திருந்த பகுதியை ஆக்கிரமித்திருந்த அந்த மக்களின் மத்தியில் இந்த வரலாறானது தொடங்குகிறது. எகிப்து மற்றும் பாபிலோனியாவில் இருந்த பண்டைக் கால பண்பாட்டு அமைவிடங்கள், அரபுத் தீபகற்பத்தின் பாலைவனங்கள், மற்றும் அனத்தோலியாவின் உயர் நிலங்கள், கானானிய நிலம் (நவீன கால இசுரேல், பாலத்தீன நிலப்பரப்புகள், யோர்தான் மற்றும் லெபனான் ஆகியவற்றின் பகுதிகளை இது தோராயமாக ஒத்துள்ளது) ஆகியவற்றால் சூழப்பட்ட இப்பகுதியானது நாகரிகங்களின் சந்திப்புப் பகுதியாகத் திகழ்ந்தது.
இசுரேல் என்ற பெயருடைய மக்கள் குறித்த தொடக்க கால பதியப்பட்ட ஆதாரமானது பண்டைய எகிப்தின் மெனப்தா கல்வெட்டில் காணப்படுகிறது. இக்கல்வெட்டு பொ. ஊ. மு. 1,200-ஆம் ஆண்டுக்குக் காலமிடப்படுகிறது. நவீன தொல்லியல் ஆய்வுகளின் படி, இசுரயேலர் மற்றும் அவர்களின் பண்பாடானது கானானிய மக்கள் மற்றும் அவர்களின் பண்பாடுகளிலிருந்து முதலில் ஒரு தனித்துவமான ஒரு கடவுள் (பிற கடவுள்களை மறுக்காது ஒரு கடவுளை மட்டும் வழிபடும் முறை) வழிபாடாகவும், பிந்தைய காலத்தில் ஒரு கடவுள் கொள்கையாகவும் மாறிய கோட்பாட்டின் வளர்ச்சியின் மூலம் பிரிந்தது. இந்த சமயமானது தேசிய கடவுளான யாவேயை மையமாகக் கொண்டிருந்தது.[19][20][21] இந்த மக்கள் எபிரேயத்தின் ஒரு தொல்வழக்கான வடிவத்தைப் பேசினர். அந்த தொல்வழக்கான மொழியானது தற்காலத்தில் விவிலிய எபிரேயம் என்று அறியப்படுகிறது.[22]
பொ. ஊ. மு. முதலாம் ஆயிரமாண்டின் நடுப் பகுதியிலிருந்து, யூதர்கள் பாரம்பரியமாக தங்களது சொந்த வரலாற்றைக் கொண்டிருந்தனர் என்ற புரிதலானது எபிரேய வேதாகமத்தின் விவரிப்புகளைச் சுற்றி அமைந்திருந்தது. இப்பார்வையின் படி, யூதர்களின் உயிர் வழி மூதாதையர் மற்றும் யூத சமயத்தின் தந்தை ஆகிய இரு பங்கையும் கொண்டவராக முக்கியத்துவப்படுத்தப்படும் ஆபிரகாமே முதல் யூதராவார்.[23] பிறகு ஆபிரகாமுக்கு ஈசாக்கும், ஈசாக்குக்கு யாக்கோபும் பிறந்தனர். ஒரு தேவதூதனுடனான ஒரு மல்யுத்ததைத் தொடர்ந்து யாக்கோபுக்கு இசுரேல் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. ஒரு கடுமையான பஞ்சத்தைத் தொடர்ந்து யாக்கோபும், அவரது 12 மகன்களும் எகிப்துக்குத் தப்பிச் சென்றனர். அங்கே அவர்கள் இறுதியாக இசுரேலின் 12 பழங்குடியினங்களை அமைத்தனர். இசுரயேலர் பின்னர் எகிப்தில் அடிமைத் தனத்திலிருந்து மீட்கப்பட்டு, இறுதியாக கானானுக்கு மோசேவால் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் இறுதியாக யோசுவாவின் தலைமைத்துவத்தின் கீழ் கானானை வென்றனர்.
இசுரயேலரின் தோற்றம் குறித்த உண்மையான பார்வையை விவிலியம் தரவில்லை என நவீன அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர். எகிப்தில் இல்லாமல் கானானில் இசுரேல் தோன்றியதைப் பெருமளவுக்குக் காட்டும் தொல்லியல் ஆதாரங்களானவை "திணறடிக்கும்" அளவுக்கு அதிகமாக உள்ளதாகவும், "எகிப்திலிருந்து வெளியேறியதற்கோ, காட்டியல்பான சினாய் தீபகற்பம் வழியாக ஒரு 40 ஆண்டு கால புனித பயணத்தை மேற்கொண்டதற்கோ இடைவெளியை அவை கொடுக்கவில்லை" என்பதற்கு பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஆதரவளிக்கின்றன.[24] மோசே மற்றும் எகிப்திலிருந்து வெளியேறியது குறித்த தொல்லியல் ஆய்வுகளை "ஒரு பயனற்ற செயல்" என பெரும்பாலான தொல்லியலாளர்கள் கைவிட்டு விட்டனர்.[24] எனினும், இந்த கதை விவரிப்பானது அதனுள் ஒரு "வரலாற்று ரீதியிலான கருப்பொருளைக்" கொண்டுள்ளது என ஏற்றுக் கொள்கின்றனர்.[25][26][27][28] எகிப்தில் சிறைப்படுத்தப்பட்டது, அதிலிருந்து தப்பித்தது மற்றும் காட்டியல்பான இடம் வழியாகப் பயணித்தது என குறிப்பிடப்படும் வெளியேற்றப்பட்டது குறித்த விவரிப்புடன் நேரடியாகத் தொடர்புடைய எந்த ஓர் ஆதாரத்தையும் தொல்லியலாளர்கள் மற்றும் எகிப்தியவாதிகளின் ஒரு நூற்றாண்டு கால ஆய்வானது வெளிக்கொணரவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. இது விவாதத்திற்குரியதாக இருந்தாலும் இவ்வாறாகக் குறிப்பிடப்படுகிறது. இரும்புக் கால இசுரேல் எனக் குறிப்பிடப்படும் யூதேயா மற்றும் இசுரேல் இராச்சியங்களானவை அவற்றின் தோற்றங்களைக் கானானில் கொண்டிருந்தன. எகிப்தில் கொண்டிருக்கவில்லை என்று பரிந்துரைக்கு இது வழி வகுத்துள்ளது.[29][30] இவ்வாறாக தொடக்க கால இசுரேலிய குடியிருப்புகளின் பண்பாடானது கானானியப் பண்பாடு ஆகும். அவர்களது வழிபாட்டுப் பொருட்களானவை கானானிய கடவுளான எல் என்ற கடவுளைச் சேர்ந்தவையாகும். உள்ளூர் கானானிய பாரம்பரியத்தில் எஞ்சியிருக்கும் மட்பாண்டங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய எழுத்துக்கள் தொடக்க கால கானானிய மொழியைச் சேர்ந்தவையாகும். கானானியத் தளங்களில் இருந்து "இசுரேலிய" கிராமங்களைப் பிரிக்கும் கிட்டத்தட்ட ஒற்றைக் குறியீடானது இசுரேலிய கிராமங்களில் பன்றி எலும்புகள் கிடைப்பதில்லை என்பதாகும். எனினும், இதை ஓர் இனக் குறியீடாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது பிற காரணிகளால் இது ஏற்பட்டதா என்பது தொடர்ந்து ஒரு விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது.[31]
விவிலிய விவரிப்பின் படி, இசுரேல் நிலமானது பல 100 ஆண்டுகளுக்கு ஒரு தொடர்ச்சியான நீதிபதிகளால் ஆளப்பட்ட 12 பழங்குடியினங்களின் ஒரு கூட்டமைப்பாக அமைக்கப்பட்டது.
பண்டைக் கால இசுரேல் மற்றும் யூதேயா
[தொகு]இரண்டாவது இரும்புக் காலத்தின் போது இரு இசுரேலிய இராச்சியங்களானவை தோன்றின. அவை இசுரேல் மற்றும் யூதேயா ஆகியவை ஆகும். இவற்றின் வரலாற்றுத் தன்மையானது விவாதத்திற்குரியதாக இருந்தாலும், விவிலியமானது இசுரேல் மற்றும் யூதேயா ஆகிய அரசுகளை தொடக்க இசுரேல் அரசின் வழி வந்தவையாக விவரிக்கிறது.[32][33] வடக்கிலிருந்த இசுரேல் இராச்சியமானது அண். பொ. ஊ. மு. 900-ஆம் ஆண்டிலிருந்தும்,[1]:169–195[34] யூதேயா இராச்சியமானது அண். பொ. ஊ. மு. 700-ஆம் ஆண்டிலிருந்தும் அமைந்திருந்தன என்பதை வரலாற்றாளர்களும், தொல்லியலாளர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.[2] 1993-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தெல் தன் கல்வெட்டானது இந்த இராச்சியமானது குறைந்தது ஏதோ ஒரு வடிவத்தில் பொ. ஊ. மு. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில் அமைந்திருந்தது என்று குறிப்பிடுகிறது. ஆனால், இந்த இராச்சியத்தின் அதிகார எல்லை எந்த அளவுக்கு விரிவடைந்திருந்தது என்பதை இது குறிப்பிடவில்லை.[35][36][37]
விவிலியப் பாரம்பரியமானது இசுரேலிய முடியாட்சியானது சவுலுக்குக் கீழ் பொ. ஊ. மு. 1037-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்று குறிப்பிடுகிறது. இறைதூதர் சாமுவேல் சவுலுக்கு நறு நெய்யாட்டினார்.[38] இந்த முடியாட்சியானது தாவீது, பிறகு அவரது மகன் சாலமோனுக்குக் கீழ் தொடர்ந்து. தாவீது இராச்சியத்தின் எல்லைகளை பெருமளவுக்கு விரிவாக்கினார். எபூசியர்களிடமிருந்து எருசலேமைக் கைப்பற்றினார். எருசலேமை இராச்சியத்தின் தேசிய, அரசியல் மற்றும் சமயத் தலை நகரமாக மாற்றினார். அவரது மகனான சாலமோன் பிறகு எருசலேமில் யூதர்களின் முதல் கோயிலை மோரியா மலை மீது கட்டினார். அவரது இறப்பான, பாரம்பரியமாக அண். பொ. ஊ. மு. 930-ஆம் ஆண்டிற்குக் காலமிடப்படுகிற ஆண்டில், 10 வடக்கு இசுரேலியப் பழங்குடியினங்களுக்கும், தெற்கிலிருந்த யூதேயா மற்றும் பெஞ்சமின் பழங்குடியினங்களுக்கும் இடையில் ஓர் உள்நாட்டுப் போரானது ஏற்பட்டது (சிமியோனானது யூதேயாவுக்குள் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்டது). பிறகு இந்த இராச்சியமானது வடக்கில் இசுரேல் இராச்சியமாகவும், தெற்கில் யூதேயா இராச்சியமாகவும் பிரிந்தது.
இந்த இராச்சியங்களில் இசுரேல் இராச்சியமானது மிகுந்த செழிப்பானதாக இருந்தது. சீக்கிரமே ஒரு பிராந்திய சக்தியாக வளர்ச்சியடைந்தது.[39] ஒமீரிய அரசமரபின் காலத்தின் போது இந்த இராச்சியமானது சமாரியா, கலிலேயா, மேல் யோர்தான் பள்ளத்தாக்கும் சரோன் மற்றும் தெற்கு யோர்தானின் பெரும் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.[40] இதன் தலைநகரான சமாரியாவனது லெவண்டிலிருந்த மிகப் பெரிய இரும்புக் கால அரண்மனைகளில் ஒன்றின் அமைவிடமாகத் திகழ்ந்தது.[41][42] இசுரேல் இராச்சியமானது பொ. ஊ. மு. 720-ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. அந்த ஆண்டில் இது புது அசிரியப் பேரரசால் வெல்லப்பட்டது.[3]
தனது தலைநகரத்தை எருசலேமில் கொண்டிருந்த யூதேயா இராச்சியமானது யூதேய மலைகள், செபேலா, யூதேயப் பாலைவனம் மற்றும் நெகேவின் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இசுரேல் இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு யூதேயாவானது புது அசிரியப் பேரரசின் ஒரு துணை அரசாக மாறியது. பொ. ஊ. மு. ஏழாம் நூற்றாண்டில் இந்த இராச்சியத்தின் மக்கள் தொகையானது பெருமளவுக்கு அதிகரித்தது. அசிரியருக்குக் கீழ்ப்படிந்ததாகச் செழித்தது. அசிரிய மன்னன் சென்னசெரீப்புக்கு எதிரான அசேகியாவின் கிளர்ச்சி நடைபெற்ற போதிலும் இந்நிலை தொடர்ந்தது.[43]
எபிரேய விவிலியத்தின் பெரும் பகுதிகளானவை இக்காலத்தின் போது எழுதப்பட்டன. ஒசேயா,[44] எசாயா,[45] ஆமோசு[46] மற்றும் மீக்கா[47] ஆகியவற்றின் தொடக்க காலப் பகுதிகளுடன் சேர்த்து நாகூம்,[48] செப்பனியா,[49] பெரும்பாலான இணைச் சட்டம்,[50] உபாகம வரலாற்றின் முதல் பிரதி (யோசுவா/நீதித் தலைவர்கள்/சாமுவேல்/மன்னர்களின் நூல்கள்)[51] மற்றும் அபக்கூக்கு ஆகியவை இதில் அடங்கும்.[52]
பொ. ஊ. மு. 605-ஆம் ஆண்டில் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சியுடன் லெவண்ட் பகுதி மீதான கட்டுப்பாட்டிற்கு எகிப்து மற்றும் புது பாபிலோனியப் பேரரசுக்கு இடையில் ஓர் அதிகாரப் போட்டியானது ஏற்பட்டது.[53] யூதேயா உடனடியாக வீழ்ச்சியடைவதற்கு இது காரணமானது. பொ. ஊ. மு. 601-இல், சமீபத்தில் பாபிலோனிடம் அடிபணிந்திருந்தவரான யூதேயாவின் செகோயியாகிம் பேரரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். இவருக்குப் பிறகு சீக்கிரமே இவரின் மகன் செகோயியாசின் ஆட்சிக்கு வந்தார். அவர் தன்னுடைய தந்தையின் கொள்கையைத் தொடர்ந்தார். இதன் காரணமாக ஒரு பாபிலோனியப் படையெடுப்பை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானார்.[53] பொ. ஊ. மு. மார்ச்சு 597-இல்[54] செகோயியாசின் பாபிலோனியர்களிடம் சரணடைந்தார். பாபிலோனுக்குக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார்.[53] இந்தத் தோல்வியானது பாபிலோனியக் காலவரிசை நூல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[55][56] செகோயியாசின்னின் சிற்றப்பனான சதேகியா பாபிலோனியர்களால் பிறகு மன்னனாக அமர வைக்கப்பட்டார்.[53]
பொ. ஊ. மு. 587 அல்லது 586-இல் யூதேயாவில் இரண்டாவது முறையாக கிளர்ச்சி ஏற்பட்டதால் இரண்டாம் நெபுகாத்நேசர் எருசலேமை முற்றுகையிட்டு அழித்தார்.[53][57] யூதர்களின் முதலாம் கோயிலானது தரைமட்டமாக்கப்பட்டது.[58] அதன் புனித கொள்கலன்களானவை போரில் வெல்லப்பட்ட பொருட்களாகப் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அழிவைத் தொடர்ந்து ஒரு பெரும் மக்கள் வெளியேற்றமானது நடைபெற்றது. மக்கள் தொகையின் பிற பிரிவினர் உள்ளிட்ட நகரத்தின் எஞ்சிய மக்கள் மெசொப்பொத்தேமியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.[58] யூத வரலாற்றில் "பாபிலோனிய சிறைப்படுத்தல்" என்று அறியப்படும் சகாப்தத்தின் தொடக்கத்தை இது குறித்தது. சதேகியாவே பிடிக்கப்பட்டார். பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.[58] பிறர் எகிப்துக்குத் தப்பியோடினர்.[சான்று தேவை] யூதேயாவின் மக்கள் தங்களது அரசை இழந்தனர். இப்பகுதியிலிருந்து வெளியேறியவர்கள் தங்களது தாயகத்தை இழந்தனர்.[59] முடியாட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த இராச்சியமானது பாபிலோனியப் பேரரசின் ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டது.[53][58]
பாபிலோனிய சிறைப்படுத்தல் (அண். 587–538 பொ. ஊ. மு.)
[தொகு]
யூதேயா வீழ்ந்தது மற்றம் பாரசீக ஆட்சியின் கீழ் யூதர்கள் சியோனுக்குத் திரும்பி வருதல் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பல தசாப்தங்களின் போது யூத வரலாறானது தெளிவற்ற காலகட்டத்திற்குள் நுழைகிறது. பல யூதர்கள் பாபிலோனியா, ஈலாம் மற்றும் எகிப்துக்கு நாடு கடத்தப்பட்டனர். அதே நேரத்தில், பிறர் யூதேயாவில் தொடர்ந்து வாழ்ந்தனர். மிக்தோல், தபனேசு, நோப் மற்றும் பத்திரோசில் இருந்த குடியிருப்புகள் உட்பட எகிப்தில் இருந்த யூத சமூகங்களை எரேமியா குறிப்பிடுகிறார். மேலும், ஒரு யூத இராணுவக் குடியேற்றமானது எலிபென்டைன் தீவில் அமைந்திருந்தது. இது யூதர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் நிறுவப்பட்டதாகும். அங்கு யூதர்கள் தங்களது சொந்த சன்னிதியைக் கட்டமைத்திருந்தனர்.[59] இந்த நாடு கடத்தப்பட்ட காலத்தின் போது தான் உபாகமமானது விரிவாக்கப்பட்டது. தொடக்க கால புனித நூல்கள் தொகுக்கப்பட்டன. எரேமியாவின் முதல் பிரதி, எசேக்கியேல், ஒபதியாவின் பெரும்பான்மையான பகுதிகள், மற்றும் ஆய்வுகளில் "இரண்டாவது எசாயா" என்று குறிப்பிடப்படும் அனைத்து நூல்களும் இந்த காலகட்டத்தின் போது தான் எழுதப்பட்டன.[சான்று தேவை]
இரண்டாம் கோயில் காலம் (பொ. ஊ. மு. 538 – பொ. ஊ. 70)
[தொகு]பாரசீக காலம் (அண். 538–பொ. ஊ. மு. 332)
[தொகு]
எசுரா நூலின் படி, அகாமனிசியப் பேரரசின் மன்னனும், பாரசீகருமான சைரசு பொ. ஊ. மு. 538-ஆம் ஆண்டில் நாடு கடந்த வாழ்ந்த பாபிலோனிய நிலையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.[60] பாபிலோனை தான் வென்று ஓர் ஆண்டுக்குப் பிறகு இந்நிலையைக் கொண்டு வந்தார்.[61] தாவீதனின் அரச குடும்பத்தின் வழி வந்த ஓர் இளவரசனான செரூப்பபேல் மற்றும் முதலாம் யூத கோயிலின் முன்னாள் உயர் பூசாரிகளின் வழி வந்த யோசுவா என்ற பூசாரி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட தங்கள் நிலையில் இருந்து இவர்கள் திரும்பி வந்தனர். மேற்குறிப்பிட்ட இருவரும் இரண்டாம் கோயில் கட்டமைக்கப்படுவதை மேற்பார்வையிட்டனர். இந்த கோயிலானது பொ. ஊ. மு. 521 மற்றும் 516-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டி முடிக்கப்பட்டது.[60] முந்தைய இராச்சியமான யூதேயாவானது அகாமனிசியப் பேரரசின் ஒரு பகுதியாக, யூதேயா மாகாணமாக (எகுத் மெதினதா)[62] வேறுபட்ட எல்லைகளுடனும், ஒரு சிறிய நிலப்பரப்பைக் கொண்டதாகவும் உருவானது.[63] சமகால அறிஞர்கள் பொ. ஊ. மு. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் நடைபெற்ற ஒரு படிப்படியாக திரும்பி வரும் நிகழ்வைக் குறிப்பிடுகின்றனர்.[64] பாரசீக யூதேயாவின் மக்கள் தொகையானது இராச்சிய கால மக்கள் தொகையை விட பெருமளவுக் குறைந்திருந்தது. தொல்லியல் ஆய்வுகளானவை பொ. ஊ. மு. ஐந்தாம்-நான்காம் நூற்றாண்டுகளின் போது சுமார் 30,000 பேரைக் கொண்ட மக்கள் தொகை இருந்ததைக் காட்டுகின்றன.[65]:308
கடைசி தோராவானது பரவலாக அகாமனிசியப் பேரரசின் (539–333 பொ. ஊ. மு., அநேகமாக 450–350 பொ. ஊ. மு.) ஒரு தயாரிப்பாக பார்க்கப்படுகிறது.[66] இந்த ஒப்புதலானது ஒரு பாரம்பரிய யூத பார்வையைப் எதிரொலிக்கிறது. இப்பார்வையில் பாபிலோனிலிருந்து திரும்பி வரும் யூத சமூகத்தின் தலைவரான எசுராவுக்கு கடைசி தோரா அறிவிக்கப்படுவதில் தன்னுடைய முக்கியமான பங்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[67]
யூத பாரம்பரியத்தில் கடைசியானவர்களாகக் கருதப்படும் மூன்று இறை தூதர்களான ஆகாய், செச்சாரியா மற்றும் மலச்சி ஆகியோர் இந்த காலத்தின் போது செயல்பாட்டில் இருந்தனர்.[68] கடைசி யூத இறை தூதரின் இறப்பிற்குப் பிறகு மற்றும் தொடர்ந்து பாரசீக ஆட்சியில் இருந்த அதே வேளையில், யூதர்களின் தலைமைத்துவமானது தலைவர்களின் சுகோத்தின் (ஜோடிகள்) ஐந்து தொடர்ச்சியான தலைமுறைகளின் கைகளுக்கு மாற்றப்பட்டது. அதில் பாரசீகர்களுக்குக் கீழும், பிறகு கிரேக்கர்களுக்குக் கீழும் இவர்கள் செழித்திருந்தனர். இதன் விளைவாக பரிசேயரும், சதுசேயரும் உருவாக்கப்பட்டனர். பாரசீகர்கள், பிறகு கிரேக்கர்களுக்குக் கீழ் யூத நாணயங்களானவை யூதேயாவில் எகுத் நாணயங்களாக அச்சடிக்கப்பட்டன.[சான்று தேவை]
எலனிய காலம் (அண். 332–பொ. ஊ. மு. 110)
[தொகு]பொ. ஊ. மு. 332-இல் மாசிடோனியப் பேரரசரான அலெக்சாந்தர் பாரசீகர்களைத் தோற்கடித்தார். அலெக்சாந்தரின் இறப்பு மற்றும் அவரது தளபதிகள் அவரது பேரரசைப் பிரித்துக் கொண்டதற்குப் பிறகு செலூக்கியப் பேரரசானது அமைக்கப்பட்டது.
அலெக்சாந்திரியப் படையெடுப்புகளானவை கிரேக்கப் பண்பாட்டை லெவண்ட் பகுதிக்குப் பரப்பின. இக்காலத்தின் போது யூத சமயத்தின் பிரிவுகளானவை பொ. ஊ. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து வளர்ச்சியடைந்திருந்த எலனிய மெய்யியலால் தாக்கம் பெற்றது. குறிப்பாக, அலெக்சாந்திரியாவில் இருந்த வெளிநாடு வாழ் யூதர்கள் இவ்வாறு தாக்கம் பெற்றனர். செப்துவசிந்தா தொகுக்கப்படுவதில் இது உச்சநிலையை அடைந்தது. யூத இறையியல் மற்றும் எலனிய சிந்தனை கலக்க வேண்டும் என்பதன் ஒரு முக்கியமான ஆதரவாளராக பிலோ திகழ்ந்தார்.
அசுமோனிய அரசமரபு (110–பொ. ஊ. மு. 63)
[தொகு]செலூக்கிய மன்னரான நான்காம் அந்தியோகசு எபிபேன்சின் யூத எதிர்ப்பு ஆணைகள், மற்றும் எலனிய மயமாக்கப்பட்ட மற்றும் பழமைவாத யூதர்களுக்கு இடையிலான பதட்டங்களானவை பொ. ஊ. மு. 167-ஆம் ஆண்டு யூதேயாவில் மக்கபேய கிளர்ச்சி வெடிப்பதைத் தூண்டின. மத்ததியாசுவின் தலைமைத்துவத்தின் கீழ் இக்கிளர்ச்சி நடைபெற்றது. அவரது மகனான யூதாசு மக்கபேயசு பொ. ஊ. மு. 164-ஆம் ஆண்டு எருசலேமை மீண்டும் கைப்பற்றினார். இரண்டாம் கோயிலைத் தூய்மைப்படுத்தினார். பலியிடல் வழிபாட்டை மீண்டும் கொண்டு வந்தார்.[69] இந்த வெற்றிகரமான கிளர்ச்சியானது அசுமோனிய அரசமரபின் கீழ் ஒரு சுதந்திரமான யூத அரசு நிறுவப்படுவதற்கு இறுதியாக வழி வகுத்தது. இந்த அரசானது 165 முதல் பொ. ஊ. மு. 63-ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது.[70]
உரோமானியர் காலம் (பொ. ஊ. மு. 63 – பொ. ஊ. 135)
[தொகு]
அசுமோனியர்களுக்குக் கீழ் யூதேயாவானது ஒரு சுதந்திரமான யூத இராச்சியமாகத் திகழ்ந்தது. ஆனால், பொ. ஊ. மு. 63-ஆம் ஆண்டில் உரோமானியத் தளபதி பொம்பெயால் இது வெல்லப்பட்டு உரோமின் ஒரு துணை அரசாக மீண்டும் அமைக்கப்பட்டது. உரோமானிய விரிவாக்கமானது பிற பகுதிகளிலும் நடைபெற்றது. அது 150 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. பிறகு உரோமானிய மூப்பவையால் முதலாம் ஏரோது "யூதர்களின் மன்னனாக" நியமிக்கப்பட்டார். அசுமோனிய அரசமரபை இடம் மாற்றினார். ஏரோதுவின் வழித்தோன்றல்களில் சிலர் பல்வேறு பதவிகளை அவருக்குப் பின் வகித்தனர். இவர்கள் ஏரோதிய அரசமரபினர் என்று அறியப்பட்டனர். பொ. ஊ. மு. 4 முதல் பொ. ஊ. 6-ஆம் ஆண்டு வரை குறுகிய காலத்திற்கு ஏரோது அர்ச்செலசு ஓர் இன முடியாட்சியாளராக யூதேயாவின் நால்வராட்சி அரசை ஆண்டார். இவருக்கு மன்னன் என்ற பட்டத்தை வழங்க உரோமானியர்கள் மறுத்தனர்.

பொ. ஊ. 6-ஆம் ஆண்டில் குயிரினியசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு யூதேயாவானது உரோமானிய சிரியாவின் ஒரு தொலைதூர அரசாக அமைக்கப்பட்டது. பொ. ஊ. 41-ஆம் ஆண்டு வரை ஒரு நிர்வாக அலுவலர் (எகிப்தும் இவ்வாறே ஆளப்பட்டது) மற்றும் பொ. ஊ. 44-ஆம் ஆண்டிற்குப் பிறகு வழக்கறிஞர் அதிகாரி ஆகியோரின் ஆட்சியின் கீழ் இது அமைந்திருந்தது. இதன் யூத குடிமக்களை நடத்துவதில் இந்தப் பேரரசானது பொதுவாக இரக்கமற்றதாகவும், மிருகத்தனத்துடனும் நடந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பொ. ஊ. 30-ஆம் ஆண்டில் (அல்லது பொ. ஊ. 33) கலிலேயாவைச் சேர்ந்த, இடம் விட்டு இடம் பயணம் செய்கின்ற ஓர் இராபியும், கிறித்தவத்தில் மைய நபராகவும் உள்ள இயேசு பொந்தியு பிலாத்து எனும் யூதேயாவின் உரோமானிய நிர்வாக அதிகாரியின் கீழ் எருசலேமில் சிலுவையேற்றத்தின் மூலம் கொல்லப்பட்டார்.[71]
ஒரு குறுகிய காலத்திற்கு யூதேயாவானது அக்ரிப்பாவின் கீழ் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு, பகுதியளவு சுதந்திரம் கொண்ட நாடாகத் திகழ்ந்தது. உரோமானிய உயர்குடியினர் மற்றும் உள்ளூர் யூத குடிமக்கள் ஆகிய இரு பிரிவினருடனும் நல்ல உறவு முறைகளைப் பேணி வந்தது. அவரது இறப்பிற்குப் பிறகு யூதேயாவானது மீண்டும் உரோமால் இணைத்துக் கொள்ளப்பட்டது. அவருக்குப் பிறகு அவரது பிரபலம் குறைந்த மகனான இரண்டாவது ஏரோது அக்ரிப்பா இன ஆட்சியாளராக ஆக்கப்பட்டார்.[72]
உரோமானியரின் ஒடுக்கு முறையான ஆட்சியுடன் பொருளாதார, சமய மற்றும் இனம் சார்ந்த பதட்டங்கள் சேர்ந்ததானது பொ. ஊ. 66-இல் முதலாம் யூத-உரோமைப் போர் வெடிப்பதற்கு இறுதியாக வழி வகுத்தது. இப்போரானது பெரும் கிளர்ச்சி என்றும் அறியப்படுகிறது. எதிர்கால உரோமானியப் பேரரசரான வெசுப்பாசியான் பொ. ஊ. 67 வாக்கில் கலிலேயாவில் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். முக்கியமான வலுவூட்டல் பகுதிகளைக் கைப்பற்றினார்.[73] அவருக்குப் பிறகு அவரது மகன் டைட்டசு ஆட்சிக்கு வந்தார். எருசலேம் மீது நடத்தப்பட்ட ஒரு மிருகத் தனமான முற்றுகைக்குத் தலைமை தாங்கினார். பொ. ஊ. 70-இல் நகரம் வீழ்ச்சியடைவதில் இது உச்ச நிலையை அடைந்தது. உரோமானியர்கள் எருசலேமுக்குத் தீ வைத்து யூதர்களின் இரண்டாம் கோயிலை அழித்தனர்.[74][75] உரோமில் ஒரு வெற்றி விழாவுடன் உரோமானிய வெற்றியானது கொண்டாடப்பட்டது. மெனோரா போன்ற யூத சமயம் சார்ந்த பொருட்கள் இவ்விழாவில் காட்டப்பட்டன. இதன் பிறகு உரோமின் புதிய அமைதி கோயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டன.[76] பிளேவிய அரசமரபானது இந்த வெற்றியை அரசியல் அனுகூலத்திற்குப் பயன்படுத்தியது. உரோமில் இவ்வெற்றி குறித்த நினைவுச் சின்னங்களை எழுப்பியது. யூதேயா வெல்லப்பட்டது குறித்த நாணயங்களை அச்சிட்டது.[77] மசாதா முற்றுகையுடன் (பொ. ஊ. 73-74) இப்போரானது முடிவுக்கு வந்தது. யூத மக்கள் பரவலாக அழிவுக்கு உள்ளாயினர். இடம் பெயர்தல், அடிமைப்படுத்தப்படுதல் மற்றும் யூதர்களின் நிலத்தை உரோமானியர்கள் பறிமுதல் செய்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.[78]

இரண்டாம் கோயில் அழிக்கப்பட்டது யூத வரலாற்றில் ஓர் அழிவை ஏற்படுத்திய நிகழ்வைக் குறிக்கிறது. யூத சமயத்துக்குள் ஆழமான மாற்றங்களை இது தூண்டியது.[79][80][81] பலியிடும் வழிபாட்டு முறையின் மைய நிலையானது ஒழிக்கப்பட்டது. சமயப் பழக்க வழக்கங்களானவை பிரார்த்தனை, டோராவைக் கற்றல் மற்றும் யூத தொழுகைக் கூடங்களில் சமூக கூட்டங்களை நடத்துதல் என மாறியது. யூதக் குருசார் பாரம்பரியத்தின் படி, யோகனன் பென் சக்காய் யவ்னேவில் டோரா கற்பதற்கான ஒரு மையத்தை நிறுவ உரோமானியர்களிடமிருந்து அனுமதியைப் பெற்றார். இது பிறகு யூத சமயம்சார் மற்றும் பண்பாட்டு வாழ்க்கை முறையின் ஒரு கவனக் குவியமாக ஒரு தலைமுறைக்குச் சேவையாற்றியது.[82][83][84] யூத சமயமானது பல பிரிவுகளைக் கொண்டிருந்த அதன் நிலையிலிருந்து ஒரு பெரும் மாற்றத்தைக் கண்டது.[85][86] சதுசேயர் மற்றும் எசனேயர் ஆகிய பிந்தைய இரண்டாம் கோயில் காலகட்டத்தின் இரு முக்கியமான சமயப் பிரிவுகளானவை முக்கியத்துவமற்றவை ஆயின.[81] அதே நேரத்தில், அவர்களது அலகிச் விளக்கங்கள், வாய்வழி டோராவின் மையப் பங்கு மற்றும் உயிர்த்தெழுதலில் உள்ள நம்பிக்கை உள்ளிட்ட பரிசேயரின் பாரம்பரியங்களானவை யூதக் குருசார் யூதத்தின் அடிப்படைகளாயின.[82]
இரண்டாம் கோயில் காலத்தின் போது புலம்பெயர்ந்த யூதர்கள்
[தொகு]வெளிநாடு வாழ் யூதர்கள் பொ. ஊ. 70-இல் இரண்டாம் கோயில் அழிக்கப்படுவதற்கு முன்னரே நன்றாகப் பரவியிருந்தனர். இது நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. கட்டாயப்படுத்தப்பட்ட வெளியேற்றம் மற்றும் தன்னார்வ புலம்பெயர்வு ஆகிய இரு நிகழ்வுகளாலும் இந்த வெளியேற்றம் நடைபெற்றது.[87][88] மெசொப்பொத்தேமியாவில் யூத சமூகத்தின தொடக்கத்திற்கான ஓர் ஆதாரமானது சோச்சினின் பொருட்கள் பட்டிகைகளில் காணப்படுகிறது. நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட யூதேயாவின் மன்னன் மற்றும் அவரது குடும்பத்திற்கு இரண்டாம் நெபுகாத்நேசரால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை இது பட்டியலிடுகிறது. மேற்கொண்ட ஆதாரங்களானவை அல்-யகுது பட்டிகைகளில் காணப்படுகின்றன. இவை பொ. ஊ. மு. 6-ஆம் - 5-ஆம் நூற்றாண்டுகளுக்குக் காலமிடப்படுகின்றன. முதலாம் கோயில் அழிக்கப்பட்டதற்குப் பிறகு யூதேயாவிலிருந்து வந்த, வெளியேற்றப்பட்ட யூதர்களுடன் இவை தொடர்புடையவை ஆகும்.[89] பொ. ஊ. மு. 626-ஆம் ஆண்டிலிருந்து பாபிலோனியாவில் யூதர்கள் வாழ்ந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ள போதிலும் இந்நிலை காணப்பட்டது.[90] எகிப்தில் பொ. ஊ. மு. 5-ஆம் - 4-ஆம் நூற்றாண்டுகளின் போது எல்லைப் பகுதியில் அமைந்திருந்த இரு கோட்டைகளில் ஒரு பாரசீக யூத கோட்டை காவல்படையினரால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விசாரணைகளானவை எலிபென்டைன் ஆவணங்களிலிருந்து வெளிக் காட்டப்படுகின்றன. ஜொசிஃபஸ் அலெக்சாந்திரியாவில் யூத சமூகமானது பேரரசர் அலெக்சாந்தரால் பொ. ஊ. மு. 4-ஆம் நூற்றாண்டில் அந்நகரம் நிறுவப்பட்டதிலிருந்து அங்கு வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார்.[91] பொ. ஊ. மு. 200 வாக்கில் எகிப்து மற்றும் மெசொப்பொத்தேமியா (யூத ஆதாரங்களில் இப்பகுதி "பாபிலோனியா" என்று குறிப்பிடப்படுகிறது) ஆகிய இரு இடங்களிலும் நிறுவப்பட்ட யூத சமூகங்களானவை இருந்தன. இதைத் தொடர்ந்து வந்த இரண்டு நூற்றாண்டுகளிலும் யூத சமூகங்கள் அனத்தோலியா, கிரேக்கம், மாசிடோனியா, மற்றும் சைரீன் ஆகிய இடங்களிலும் யூத மக்கள் வாழ்ந்து வந்தனர். பொ. ஊ. மு. 1-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கி உரோம் நகரத்திலும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர்.[88][92]
பொ. ஊ. முதலாம் நூற்றாண்டில் யூத-உரோமைப் போர்களின் ஒரு விளைவாக[93] ஒரு பெரும் எண்ணிக்கையிலான யூதர்கள் சிறைபிடிக்கப்பட்டனர், அடிமைகளாக விற்கப்பட்டனர் அல்லது போர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தப்பித்தோடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உரோமைப் பேரரசு முழுவதும் யூத சமூகங்கள் அமைக்கப்படுவதற்கும், விரிவடைவதற்கும் இது பங்களித்தது. மேலும், அரேபியா மற்றும் மெசொப்பொத்தேமியாவிலும் யூத சமூகங்கள் அமைக்கப்பட்டன. சைரீனைகா, சைபிரசு மற்றும் எகிப்து முழுவதிலும் இருந்த யூத சமூகங்களானவை கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கப்பட்டன. வெளிநாடு வாழ் யூதர்களின் கிளர்ச்சிக்கு ஓர் எதிர்வினையாக உரோமானியர்கள் கொடுத்த கடுமையான எதிர்வினையே இதற்குக் காரணமாகும்.[94][95]
திருத்தூதர் பணிகளின் புதிய ஏற்பாட்டு நூல், மேலும் புனித பாலின் பிற நூல்கள் ஆகியவை உரோமானிய உலகத்தின் நகரங்களில் வாழ்ந்த எலனியமயமாக்கப்பட்ட, பெருமளவிலான யூத மக்கள் குறித்து அடிக்கடி குறிப்பிடுகின்றன. இந்த எலனிய மயமாக்கப்பட்ட யூதர்கள் தமது ஆன்மீக உணர்வில் மட்டுமே புலம்பெயர்ந்த யூதர்களால் தாக்கம் பெற்றிருந்தனர். உலகின் பல்வேறு பகுதிகளில் ஒடுக்கு முறைகளால் பெருமளவுக்கு அதிகரித்து வந்த யூத நம்பிக்கைகளின் ஒரு முதன்மைக் கூறாக உருவான இழப்பு மற்றும் நாடற்ற நிலை குறித்த எண்ணங்களால் இவர்கள் பாதிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. யூதப் பாரம்பரியத்தை கோயிலை அடிப்படையாகக் கொண்ட சமயத்திலிருந்து வெளிநாடு வாழ் யூதர்களின் யூத குருமார் பாரம்பரியங்களுக்கு மாற்றமடையச் செய்ததில் முக்கியப் பங்கு வகித்தது மிசுனா மற்றும் தல்மூத்தில் காணப்படும் டோரா குறித்த விளக்கங்களின் வளர்ச்சியே ஆகும்.
தல்மூதிய காலம் (70–பொ. ஊ. 640)
[தொகு]வெளிநாடு வாழ் யூதர்களின் கிளர்ச்சி (115–பொ. ஊ. 117)
[தொகு]வெளிநாடு வாழ் யூதர்களின் கிளர்ச்சியின் (115–பொ. ஊ. 117) போது உரோமைப் பேரரசின் பல கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த யூத வெளிநாடு வாழ் சமூகங்கள் பரவலான கிளர்ச்சியில் ஈடுபட்டன.[96] மெசியா (இறை தூதர்) குறித்த உணர்வுகள், வெளிநாடு வாழ் யூதர்களைக் கூட்டுதல் மற்றும் யூத கோயிலை மீண்டும் கட்டமைக்கும் நம்பிக்கை ஆகியவற்றால் தூண்டப்பட்ட இந்த சமூகங்கள் ஓர் அகண்ட இயக்கத்தை ஏற்படுத்த வேண்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அநேகமாக இந்த இயக்கத்தின் குறிக்கோள்களானவை யூதேயாவுக்குத் திரும்புதல் மற்றும் எருசலேமை மீண்டும் கட்டமைப்பதாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[97][98][99] பண்டைக் கால ஆதாரங்கள் இந்தக் கிளர்ச்சியை மட்டு மீறிய அளவுக்கு மிருகத்தனமானவை என்று குறிப்பிடுகின்றன.[96] எனினும், நவீன அறிஞர்கள் பொதுவாக இந்த குறிப்புகளை மிகைப்படுத்தப்பட்டவையாகக் கருதுகின்றனர். கிளர்ச்சியை உரோமானியர்கள் ஒடுக்கியதானது இனக்கருவறுப்பு உள்ளிட்ட கடுமையான செயல்பாடுகளால் குறிக்கப்படுகிறது. லிபியா, சைப்பிரசு மற்றும் எகிப்திலிருந்த வெளிநாடு வாழ் யூத சமூகங்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கப்படும் நிலைக்கு இது காரணமானது.[94][95] அலெக்சாந்திரியாவில் இருந்த முக்கியமான மற்றும் செல்வச் செழிப்புமிக்க சமூகமும் இதில் அடங்கும்.[88][94]
பர் கோக்பா கிளர்ச்சி (132–பொ. ஊ. 136)
[தொகு]
பொ. ஊ. 132 முதல் 136 வரை யூதேயாவானது பர் கோக்பா கிளர்ச்சியின் மையமாகத் திகழ்ந்தது. எருசலேமின் சிதிலங்கள் மீது ஒரு புறச் சமய சார்புடைய அயேலியா காபிதோலினா எனும் குடியேற்றத்தை நிறுவும் அத்திரியனின் முடிவால் இக்கிளர்ச்சி தூண்டப்பட்டிருந்தது.[100] தொடக்க கால வெற்றிகளானவை யூதேயாவில் குறுகிய காலம் நீடித்து இருந்த ஒரு யூத அரசு நிறுவப்படுவதற்கு வழி வகுத்தன. இது சைமன் பர் கோக்பாவின் தலைமைத்துவத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இவர் தனக்கு நாசி அல்லது இசுரேலின் இளவரசன் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டார்.[100] கிளர்ச்சி அரசின் நாணயங்களானவை "இசுரேலின் சுதந்திரம்" மற்றும் "எருசலேமின் சுதந்திரத்திற்காக" ஆகிய வரிகளை அறிவித்திருந்தன. தேசியவாத அடையாளத்திற்காக பண்டைக் கால எபிரேய எழுத்து முறை இதில் பயன்படுத்தப்பட்டிருந்தது.[100][101] எனினும், உரோமானியர்கள் சீக்கிரமே ஆறு இலீசியன்களையும், மேற்கொண்ட துணைப் படைகளையும் யூலியசு செவரசின் கீழ் சேர்த்தனர். அவர்கள் பிறகு மிருகத்தனமாக இந்த கிளர்ச்சியை நொறுக்கினர். வரலாற்று ரீதியிலான பதிவுகளானவை 50 முதன்மையான வலுவூட்டல் பகுதிகள் மற்றும் 985 கிராமங்கள் அழிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. 5.80 இலட்சம் யூதர்கள் இறப்பதற்கும், பரவலான பஞ்சம் மற்றும் நோய்கள் பரவுவதற்கும் இது காரணமானது.[102] உண்மையான யூதேயா பகுதியிலிருந்த யூத தாயகத்தில் பரவலான அழிவு மற்றும் மக்கள் தொகை குறைவு ஏற்பட்டதை தொல்லியல் ஆய்வுகளானவை உறுதிப்படுத்துகின்றன. இப்பகுதியில் பெரும்பாலான யூதர்கள் கொல்லப்பட்டனர், அடிமைகளாக விற்கப்பட்டனர், வெளியேற்றப்பட்டனர் அல்லது தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.[102][103][104] உரோமானியர்களும் கூட கடுமையான இழப்புகளைச் சந்தித்தனர்.[101] இக்கிளர்ச்சிக்குப் பிறகு எருசலேமுக்குள் நுழைய யூதர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அத்திரியன் சமயம் சார்ந்த ஆணைகளை வெளியிட்டார்.[105][106] யூதர்களுக்கு எதிராக ஒரு தண்டனை நடவடிக்கையாக யூதேயா மாகாணமானது சிரியா பாலத்தீனா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யூதர்கள் அல்லாத குடியிருப்பு வாசிகளின் சினத்தைத் தணிப்பது மற்றும் இந்நிலத்துடனான வரலாற்று ரீதியிலான யூத தொடர்புகளை அழிப்பது ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.[100][107][108] கிறித்தவர்கள் இக்கிளர்ச்சியில் பங்கெடுக்க மறுத்தனர். இக்காலகட்டத்தில் இருந்து தான் கிறித்தவ சமயத்தை ஒரு தனி சமயமாக யூதர்கள் கருதத் தொடங்கினர்.[109] நவீன சகாப்தம் வரை ஒரு யூத அரசை மீண்டும் நிறுவும் முயற்சிகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை யூதர்களின் இந்தத் தோல்வியானது குறித்தது.[110]
சிமியோன் பர் யோச்சை என்ற இக்காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு யூத குருமாரானவர் சோகர் எனும் நூலை எழுதிய ஓர் ஆசிரியராகக் கருதப்படுகிறார். கப்பாலிய சிந்தனையின் அடித்தள நூலாக இது கருதப்படுகிறது. எனினும், நவீன கால அறிஞர்கள் இந்நூலானது நடுக்கால எசுப்பானியாவில் எழுதப்பட்டது என்று நம்புகின்றனர்.[111]
இசுரேல் நிலத்தில் பிந்தைய உரோமானிய காலம்
[தொகு]இப்பகுதியில் உரோமானியப் பேரரசுடன் யூதர்களுக்கு இருந்த உறவு முறைகளானவை தொடர்ந்து சிக்கலானவையாகத் திகழ்ந்தன. தங்களது தோல்வி மற்றும் அவமானத்தை ஆண்டுக்கு ஒரு முறை மேற்குச் சுவரில் இருந்த திசா பாவ் என்ற இடத்தில் துக்கம் அனுட்டிக்க யூதர்களுக்கு உரோமானியப் பேரரசர் முதலாம் கான்சுடன்டைன் அனுமதியளித்தார். பொ. ஊ. 351-352-இல் கலிலேயாவின் யூதர்கள் மற்றுமொரு கிளர்ச்சியைத் தொடங்கினர். கடுமையான எதிர் வினையை இது பெற்றது.[112] கான்சுடன்டைனிய அரசமரபின் கீழ் கிழக்கு உரோமைப் பேரரசில் தொடக்க கால கிறித்தவர்களிடம் செல்வச் செழிப்பு மிக்க நிலை அதிகரித்து வந்த காலத்தின் போது இந்தக் கிளர்ச்சி ஏற்பட்டது. எனினும், 355-இல் கான்சுடன்டைனிய அரசமரபின் கடைசி மன்னனான பேரரசர் யூலியன் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து உரோமானிய ஆட்சியாளர்களுடனான உறவு முறைகளானவை மேம்பட்டன. தனக்கு முன் ஆட்சியில் இருந்தவர்களைப் போலில்லாமல் இவர் கிறித்தவத்திற்கு எதிர்ப்புக் காட்டியவராகத் திகழ்ந்தார். 363-இல் சாசானியப் பாரசீகத்திற்கு எதிராக தன்னுடைய படையெடுப்பைத் தொடங்க அந்தியோச்சிலிருந்து யூலியன் புறப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே, கிறித்தவத்தை தவிர்த்த பிற சமயங்களைக்கு ஆதரவளிக்கும் தன்னுடைய முயற்சியைத் தொடரும் ஒரு செயல்பாடாக யூத கோயில் மீண்டும் கட்டப்படுவதற்கு ஆணையிட்டார்.[113] இக்கோயில் மீண்டும் கட்டமைக்கப்படுவதில் அடைந்த தோல்விக்குப் பெரும்பாலும் 363-ஆம் ஆண்டின் கலிலேயா நிலநடுக்கமும், பாரம்பரியமாக இத்திட்டம் குறித்த யூதர்களின் கலவையான எண்ணங்களும், அநேகமாக நாச வேலைகளும், மற்றும் தீ விபத்தும் காரணமாகக் கூறப்படுகின்றன. அக்கால கிறித்தவ வரலாற்றாளர்களிடையே இருந்த பொதுவான பார்வையானது இது தெய்வீகத் தலையீட்டால் தோல்வியடைந்தது என்பதாகும்.[114] யூதர்களுக்கான யூலியனின் ஆதரவானது "எலன் யூலியன்" என்று அவர் யூதர்களால் அழைக்கப்படுவதற்குக் காரணமானது.[115] பாரசீகப் படையெடுப்பில் யூலியன் அடைந்த ஓர் ஊறு விளைவிக்கக் கூடிய காயம் மற்றும் அதைத் தொடர்ந்து அவரது இறப்பு ஆகியவை யூத குறிக்கோள்களை முடிவுக்குக் கொண்டு வந்தன. எருசலேம் மீதான பைசாந்திய ஆட்சியின் ஒட்டு மொத்த காலகட்டம் வழியாக யூலியனுக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவினர். எருசலேம் மீது யூதர்களுக்கு இருந்த எந்த உரிமை கோரலையும் இது தடுத்தது.
பொ. ஊ. 438-இல் கோயில் தளத்தில் யூதர்கள் வழிபடுவதற்கான தடையை உரோமானியப் பேரரசி இதோசியா நீக்கிய போது கலிலேயாவிலருந்த யூத சமூகத்தின் தலைவர்கள் "யூதர்களின் பெரும் மற்றும் வலிமையான மக்களுக்கு" என்று ஓர் அழைப்பை விடுத்தனர். "நம் மக்களின் நாடு கடந்து வாழும் நிலையானது முடிவுக்கு வந்துவிட்டது!" என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்ற முழக்கத்துடன் இது தொடங்கியது. எனினும், தங்களது முதன்மை நிலைக்கு ஓர் அச்சுறுத்தலாக இதைக் கண்ட எருசலேமின் கிறித்தவ மக்கள் இதை அனுமதிக்கவில்லை. ஒரு கலகம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு நகரத்திலிருந்து யூதர்களை அவர்கள் துரத்தியடித்தனர்.[116][117]
5-ஆம் மற்றும் 6-ஆம் நூற்றாண்டுகளின் போது பாலத்தீனா பிரைமா மாகாணம் முழுவதும் ஒரு தொடர்ச்சியான சமாரிய கலகங்கள் வெடித்தன. குறிப்பாக வன்முறை நிறைந்தவையாகத் திகழ்ந்தவை மூன்றாவது மற்றும் நான்காவது கலகங்களாகும். கிட்டத்தட்ட ஒட்டு மொத்த சமாரிய சமூகமும் அழிக்கப்படுவதில் இது முடிவடைந்தது. 556-ஆம் ஆண்டின் சமாரிய கலகத்தில் யூத சமூகமும் இணைந்து கொண்டது என்று கருதப்படுகிறது. இசுரேலிய சமயம் ஒரு மிருகத்தனமான ஒடுக்கு முறைக்கு உள்ளாவதையும் இந்நிகழ்வு கண்டது.
மீள் நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையில் 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூதர்கள் பாரசீகர்களுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தினர். 614-ஆம் ஆண்டு பாலத்தீனா பிரைமா மாகாணத்தின் மீது பாரசீகர்கள் படையெடுத்திருந்தனர். பாரசீகர்களின் பக்கம் யூதர்கள் சண்டையிட்டனர். எருசலேமிலிருந்த பைசாந்தியப் பேரரசின் கோட்டைக் காவல் படையினரைத் திணறடித்தனர். ஒரு தன்னாட்சியுடைய பகுதியாக எருசலேம் ஆளப்படுவதற்கு யூதர்களிடம் வழங்கப்பட்டது.[118] எனினும், யூதர்களது தன்னாட்சியானது குறுகிய காலமே நீடித்திருந்தது. ஒரு கிறித்தவ கலகத்தின் போது எருசலேமின் யூதத் தலைவர் சீக்கிரமே அரசியல் கொலை செய்யப்பட்டார். எருசலேம் பாரசீகர்கள் மற்றும் யூதர்களால் மூன்று வாரங்களுக்குள் மீண்டும் வெல்லப்பட்டாலும் அது அரசற்ற நிலையில் மூழ்கியது. இறுதியாகப் பாரசீகப் படைகள் பின் வாங்கிய போது பொ. ஊ. 625 அல்லது 628-இல் யூதர்கள் பைசாந்தியர்களிடம் சரணடைந்தனர். ஆனால், பொ. ஊ. 629-இல் தீவிரப் போக்குடைய கிறித்தவர்களால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எஞ்சிய யூதர்கள் எகிப்துக்குத் தப்பியோடினர். பொ. ஊ. 637-இல் முசுலிம் அரேபிய இராணுவங்களிடம் இப்பகுதி மீதான பைசாந்தியக் (கிழக்கு உரோமைப் பேரரசு) கட்டுப்பாடானது இறுதியாக இழக்கப்பட்டது. அப்போது உமறு அக்கோவை வெல்வதை முடித்தார்.
முசுலிம்களுக்கு முந்தைய பாபிலோனியாவில் யூதர்கள் (பொ. ஊ. 219–638)
[தொகு]எருசலேமின் வீழ்ச்சிக்குப் பிறகு பாபிலோனியா 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக யூத சமயத்தின் கவனக் குவியமாக உருவானது. பொ. ஊ. மு. 597-இல் செகோயியாசின்னால் தலைமை தாங்கப்பட்ட யூதா பழங்குடியினம் பாபிலோனுக்கு நாடு கடந்து வாழ்ந்ததுடன் பாபிலோனியாவில் முதல் யூத சமூகங்களின் இருப்பானது தொடங்குகிறது. பொ. ஊ. மு. 586-இல் எருசலேமில் முதலாம் கோயில் அழிக்கப்பட்டதற்குப் பிறகும் இது தொடர்ந்தது.[93] பர் கோக்பா கிளர்ச்சிக்குப் பிறகு பொ. ஊ. 135-இல் பாபிலோனுக்கு மேற்கொண்ட பல யூதர்கள் புலம்பெயர்ந்தனர். தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளிலும் இது நடைபெற்றது.[93] மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான யூத நகரங்கள் மற்றும் சமூகங்களில் சில நிறுவப்பட்ட பாபிலோனியாவானது யூத வாழ்க்கை முறையின் மையமாக 13-ஆம் நூற்றாண்டு வரை திகழ்ந்தது. முதலாம் நூற்றாண்டு வாக்கில் பாபிலோனியா ஏற்கனவே வேகமாக அதிகரித்து வந்த[93] 10 இலட்சம் யூதர்கள் மக்கள் தொகையைக் கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொ. ஊ. 200 மற்றும் 500 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இது 20 இலட்சமாக அதிகரித்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[119] இயற்கையான வளர்ச்சி மற்றும் யூதேயாவில் இருந்து மேற்கொண்ட யூதர்கள் புலம் பெயர்ந்தது ஆகிய இரு செயல்பாடுகளாலும் இது நடைபெற்றது. அந்த சகாப்தத்தின் உலக யூத மக்கள் தொகையில் சுமார் 1/6 பங்கினராக இவர்கள் திகழ்ந்தனர்.[119] அங்கு தான் இவர்கள் பண்டைக் கால பாபிலோனியாவில் யூதர்களால் பயன்படுத்தப்பட்ட மொழிகளான எபிரேயம் மற்றும் அரமேயத்தில் பாபிலோனிய தல்மூத் நூலை எழுதினர். யூதர்கள் பாபிலோனியாவில் தல்மூதிய கல்வி நிலையங்களை நிறுவினர். இவை சியோனிச் (இது "சியோனிம்" என்ற சொல்லிலிருந்து உருவானதாகும். விவிலிய எபிரேயத்தில் இதன் பொருள் "பேரழகு" ஆகும், அல்லது "மேதைகள்" ஆகும்) கல்வி நிலையங்கள் என்றும் அறியப்படுகின்றன. யூதர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் மையமாகவும், தோராயமாக பொ. ஊ. 500 முதல் 1038 வரை பாபிலோனியாவில் யூத சட்டம் வளர்ச்சியடைவதற்கான மையமாகவும் இது உருவானது. இதில் இரு மிக பிரபலமான கல்வி நிலையங்களானவை பும்பேதிதா மற்றும் சுரா கல்வி நிலையங்களாகும். முதன்மையான எசிவோத் கல்வி நிலையங்களானவை நெகர்தியா மற்றும் மகுசாவில் கூட அமைந்திருந்தன.[120] தல்மூதிய எசிவா கல்வி நிலையங்களானவை யூத பண்பாடு மற்றும் கல்வியின் ஒரு முக்கியமான பங்காயின. மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் பிந்தைய நூற்றாண்டுகளில் அமெரிக்கா மற்றும் உலகைச் சுற்றியிருந்த பிற நாடுகளில் வெளிநாடு வாழ் யூதர்கள் வாழ்ந்த பகுதிகளில் எசிவா கல்வி நிலையங்களை யூதர்கள் தொடர்ந்து நிறுவினர். ஐக்கிய அமெரிக்கா மற்றும் இசுரேலில் பெரும்பான்மையாக அமைந்துள்ள இந்த எசிவா கல்வி நிலையங்களில் தல்மூதிய கற்றலானது இன்றும் தொடர்கிறது.
பாபிலோனியாவிலிருந்த தல்மூதிய எசிவா கல்வி நிலையங்களானவை அமோரைம் சகாப்தத்திற்குப் பின் சவோரைம் சகாப்தத்தைப் பின்பற்றத் தொடங்கின. அமோரைம் என்பவர்கள் மிசுனா மூடப்பட்ட சகாப்தத்தின் முடிவிலிருந்து தல்மூத் மூடப்பட்ட காலங்கள் (பொ. ஊ. 200-500) வரையிலும் செயல்பாட்டிலிருந்த (யூதேயா மற்றும் பாபிலோனில்) தல்மூதிய துறவிகள் ஆவர். சவோரைம் என்பவர்கள் அமோரைம் (ஐந்தாம் நூற்றாண்டு) சகாப்தத்தின் முடிவிலிருந்து சியோனிம் சகாப்தத்தின் தொடக்கம் வரை பாபிலோனிலிருந்த பெத் மிதுராசா (தோரா கற்குமிடங்கள்) துறவிகள் ஆவர். சியோனிம் என்பவர்கள் சுரா மற்றும் பும்பேதிதாவின் இரு பெரிய மதகுருமார் கல்லூரிகளின் தலைவர்களாவர். தொடக்க நடுக்கால சகாப்தத்தின் போது உலகம் முழுவதும் இருந்த யூத சமூகத்தின பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆன்மீகத் தலைவர்களாக இவர்கள் திகழ்ந்தனர். இவர்கள் ரெசு கலுதாவிலிருந்து மாறுபட்டிருந்தனர். இசுலாமிய நிலங்களிலிருந்த யூதர்கள் மீது மதச்சார்பற்ற அதிகாரத்தைக் கொண்டிருந்தவர்களாக ரெசு கலுதா திகழ்ந்தனர். பாரம்பரியங்களின் படி, ரெசு கலுதா என்பவர்கள் யூதேயா மன்னர்களின் வழித்தோன்றல்களாவர். இதன் காரணமாகவே பார்த்தியாவின் மன்னர்கள் இவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்தினர்.[121]
பிந்தைய பண்டைக் காலம் மற்றும் தொடக்க நாடுக் காலங்களின் யூதர்களுக்கு பாபிலோனியாவின் எசிவோத் ஆனது பண்டைக் கால சன்கேத்திரின் ஆற்றிய அதே பங்கை கிட்டத்தட்ட ஆற்றியது. அதாவது யூத சமய அதிகார அமைப்புகளின் ஒரு மன்றம் இதுவாகும். இந்தக் கல்வி நிலையங்களானவை சரதுச சாசானிய அரசமரபின் கீழான இசுலாமுக்கு முந்தைய பாபிலோனியாவில் நிறுவப்பட்டன. சாசானியத் தலைநகரான சிதேசிபோனிலிருந்து இவை தொலை தூரத்தில் அமைந்திருக்கவில்லை. சிதேசிபோனே அக்காலத்தில் உலகின் மிகப் பெரிய நகரமாக இருந்தது. 7-ஆம் நூற்றாண்டில் பாரசீகம் வெல்லப்பட்டதற்குப் பிறகு இந்தக் கல்வி நிலையங்களானவை இறுதியாக 400 ஆண்டுகளுக்கு இசுலாமியக் கலீபகத்தின் கீழ் நடத்தப்பட்டன. செரிரா கவோனின் கூற்றுப்படி, சுராவின் முதல் கவோன் மர் பர் ராப் சனான் ஆவார். இவர் 609-ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார். சுராவின் கடைசி கவோன் சாமுவேல் பென் ஓபினி ஆவார். இவர் 1034-ஆம் ஆண்டு இறந்தார். பும்பேதிதாவின் கடைசி கவோன் எசேக்கியா கவோன் ஆவார். இவர் 1040-ஆம் ஆண்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்தார். இவ்வாறாக சியோனிமின் செயல்பாடுகளானவை கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் காலத்தை உள்ளடக்கியிருந்தன.
பாபிலோனிய யூத சமயத்தின் முதன்மையான இருக்கைகளில் ஒன்று நெகர்தியாவிலல் அமைந்திருந்தது. பெரும்பாலும், யூதர்களைக் கொண்டிருந்த ஒரு மிகப் பெரிய நகரமாக இது திகழ்ந்தது.[93] மன்னன் செகோயியாசின்னால் கட்டப்பட்டதாக நம்பப்படும் ஒரு மிகப் பழமையான யூத கோயில் நெகர்தியாவில் அமைந்திருந்தது. நெகர்தியாவுக்கு அருகில் குசாலில் மற்றொரு யூத கோயில் இருந்தது. இதிலிருந்து நீண்ட தொலைவில் இல்லாமல் எசுராவின் கல்வி நிலையத்தின் சிதிலங்களைக் காண முடியும். உரோமைப் பேரரசன் அத்திரியனின் காலத்துக்கு முன்னர் சன்கேத்திரினிலிருந்து ஒரு தூதுக் குழுவுடன் வந்த அகிபா, தான் இந்நகருக்கு வருகை புரிந்த போது திருமணட் சட்டம் (மிசுனா எப்) குறித்த ஒரு கருத்து குறித்து அங்கு குடியிருந்த அறிஞருடன் ஒரு விவாதத்தில் ஈடுபட்டார். இதே நேரத்தில் நிசிபிசுவில் (வடக்கு மெசொப்பொத்தேமியா) ஒரு மிகச் சிறந்த யூத கல்லூரி அமைந்திருந்தது. இதன் தலைவராக யூதா பென் பத்திரியா இருந்தார். ஒடுக்கு முறைகளின் காலத்தின் போது இங்கு தான் பல யூதேயா அறிஞர்கள் புகலிடம் அடைந்தனர். நெகர்-பெகோத் பகுதியில் அமைந்திருந்த ஒரு பள்ளியும் ஒரு குறிப்பிட்ட தற்காலிக முக்கியத்துவத்தைய அடைந்தது. யோசுவா பென் அனானியாவின் உடன்பிறப்பின் மகனும், யூதேயாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவருமான அனானியாவால் இது நிறுவப்பட்டது. பாபிலோனியாவின் யூதர்கள் மற்றும் யூதேயா-இசுரேலிய யூதர்களுக்கு இடையில் ஒரு பிரிவுக்கான காரணமாக இப்பள்ளி இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், அனானியாவின் குறிக்கோள்களை யூதேயா அதிகார அமைப்புகள் துரிதமாகக் கட்டுப்பாடுத்தி வைத்ததால் இப்பிரிவு தவிர்க்கப்பட்டது.
பைசாந்திய காலம் (பொ. ஊ. 324–638)
[தொகு]உரோமைப் பேரரசு முழுவதும் பரவியவர்களாகவும் யூதர்கள் திகழ்ந்தனர். பைசாந்திய ஆட்சிக் காலத்தின் போது நடு மற்றும் கிழக்கு நடுநிலக் கடல் பகுதியில் இந்நிலை ஓரளவுக்கு இருந்தது. போராளிச் செயல்பாடு சார்ந்த, கிறித்தவ மற்றும் சீசரோபாபிய (சமய சகிப்புத் தன்மையுடைய அரசாங்கத்தின் சக்தியுடன் சமய சக்தியை இணைக்கும் சமூக ஒழுங்கு) பண்புகளைக் கொண்டிருந்ததான பைசாந்தியப் பேரரசு யூதர்களை நன்முறையில் நடத்தவில்லை. இப்பேரரசில் நாடு கடந்து வாழ்ந்த யூதர்களின் நிலை மற்றும் செல்வாக்கானது பெருமாளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
யூதர்களை கிறித்தவத்துக்கு மாற்றுவது என்பது அதிகாரப்பூர்வ கிறித்தவக் கொள்கையாகும். தங்களது முயற்சிகளில் உரோமின் அதிகாரப்பூர்வ சக்தியை கிறித்தவ தலைமைத்துவமானது இதில் பயன்படுத்தியது. பொ. ஊ. 351-இல் தங்களது ஆளுநரான கான்சுடன்டியசு கல்லுசுவின் மேற்கொண்ட அழுத்தங்களுக்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கல்லுசு கிளர்ச்சியை ஒடுக்கினார். கிளர்ச்சி தொடங்கிய இடமான கலிலேயா பகுதியின் முக்கியமான நகரங்களை அழித்தார். இதில் திசிப்போரி மற்றும் லித்தா (முதன்மையான சட்ட கல்வி நிலையங்களில் இரண்டு நிலையங்கள் அமைந்திருந்த தளம்) என்றுமே இந்த அழிவிலிருந்து மீளவில்லை.
இக்காலத்தின் போது திபேரியசுவிலிருந்த நாசியான இரண்டாம் இல்லேல் ஓர் அதிகாரப்பூர்வ நாட்காட்டியை உருவாக்கினார். மாதா மாதம் நிலவானது பார்க்கப்பட வேண்டும் என்ற தேவையை இந்த நாட்காட்டி கொண்டிருக்கவில்லை. மாதங்கள் அமைக்கப்பட்டன. யூதேயாவிடமிருந்து மேற்கொண்ட எந்த ஓர் அறிவுறுத்தலையும் பெற வேண்டிய தேவையை இந்த நாட்காட்டி கொண்டிருக்கவில்லை. இதே நேரம் வாக்கில், திபேரியசுவிலிருந்த யூத கல்வி நிலையமானது மிசுனா, பிரைதோத், மற்றும் யூதா அனாசியின் இறப்புக்குப் பிறகு கற்றறிந்த அறிஞர்களின் தலைமுறைகளால் மேம்படுத்தப்பட்ட விளக்கங்கள் மற்றும் விரிவுரைகளின் ஒன்றிணைந்த பகுதியை இணைக்கத் தொடங்கியது. மிசுனாவின் ஒழுங்கின் படி இந்த நூலானது அமைக்கப்பட்டது: மிசுனாவின் ஒவ்வொரு பத்தியும் அந்த மிசுனாவுடன் தொடர்புடைய விளக்கவுரைகள், கதைகள் மற்றும் பதிவுகள் ஆகிய அனைத்தின் தொகுப்பையும் கொண்டிருந்தது. இந்த நூலானது எருசலேம் தல்மூத் என்று அழைக்கப்பட்டது.
பேரரசர் பற்று துறந்த யூலியனின் ஆட்சியின் போது அதிகாரப்பூர்வ ஒடுக்கு முறையிலிருந்து ஒரு குறுகிய கால விடுபாட்டை யூதேயாவின் யூதர்கள் பெற்றனர். உரோமைப் பேரரசை எலனிய சமயத்திற்கு மீண்டும் மாற்றுவது யூலியனின் கொள்கையாக இருந்தது. எருசலேமை மீண்டும் கட்டமைக்க யூதர்களை இவர் ஊக்குவித்தார். எனினும், யூலியனின் ஆட்சியானது 361 முதல் 363 வரை மட்டுமே நீடித்திருந்ததால் பேரரசு முழுவதும் உரோமைக் கிறித்தவ ஆட்சி மீண்டும் நிறுவப்படுவதற்கு முன்னர் யூதர்களால் மீண்டும் போதிய அளவுக்கு கட்டமைக்க இயலவில்லை. 398-இல் தொடங்கி கிறித்த சமூகத் தலைவராக யோவான் கிறிசோஸ்தோம் பதவியேற்றுக் கொண்டதற்கு பிறகு யூதர்களுக்கு எதிரான கிறித்தவ விமர்சனங்களானவை அதிகரித்தன. "யூதர்களுக்கு எதிராக" மற்றும் "உருவச் சிலைகள் குறித்து, ஓமிலி (சமயச் சொற்பொழிவு) 17" ஆகிய தலைப்புகளையுடைய சொற்பொழிவுகளை இவர் போதித்தார். இதில் ஓமிலி 17 சொற்பொழிவில் யோவான் "யூதர்களின் நோய் கொண்ட நிலைக்கு" எதிராகப் போதித்தார்.[122] இத்தகைய சினம் கொண்ட மொழியானது யூதர்கள் குறித்து கிறித்தவர்களின் நம்பிக்கையற்ற ஒரு சூழ்நிலையும், அந்தியோக்கியா மற்றும் கான்சுடாண்டினோபில் போன்ற இடங்களிலிருந்த பெரிய யூத குடியிருப்புகளுக்கு எதிராக வெறுப்பும் ஏற்படுவதற்குப் பங்களித்தது.
5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூதர்களுக்கு எதிரான அதிகாரப்பூர்வ ஒடுக்கு முறையை நிறுவிய ஆணைகளின் ஒரு தொகுப்பை முதலாம் தியோடோசியசு வெளியிட்டார். அடிமைகளை வைத்துக் கொள்ளவோ, புதிய கோயில்களைக் கட்டமைக்கவோ, அரசாங்க பதவிகளில் அமரவோ, அல்லது ஒரு யூதர் மற்றும் யூதரல்லாதவருக்கு இடையிலான வழக்குகளில் யூதர்கள் யூதரல்லாதவர்களை யூத சமய நீதிமன்ற வழக்குகளுக்கு உட்படுத்தவோ யூதர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. யூதர் மற்றும் யூதரல்லாதவருக்கு இடையிலான திருமணமானது மரண தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. கிறித்தவர்கள் யூத சமயத்திற்கு மாறுவதும் இத்தகைய தண்டனையைப் பெறக் கூடியதானது. சன்கேத்திரின் மற்றும் நாசி பதவி ஆகியவற்றை தியோடோசியசு தடைசெய்தார். முதலாம் ஜஸ்டினியனின் கீழ் யூதர்களின் அடிப்படை உரிமைகள் மீது மேற்கொண்ட கட்டுப்பாடுகளை அதிகார அமைப்புகள் கொண்டு வந்தன.[123] யூதர்களின் சமயம் சார்ந்த சிறப்புரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தின.[124] யூத கோயிலின் உள்விவகாரங்களில் பேரரசர் தலையிட ஆரம்பித்தார்.[125] தெய்வீக வழிபாட்டில் எபிரேய மொழியின் பயன்பாட்டை எடுத்துக்காட்டாகத் தடை செய்தார். இந்தக் கட்டுப்பாடுகளை மதிக்காதவர்கள் உடல் ரீதியான தண்டனைகள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுதல் மற்றும் உடமைகளை இழத்தல் ஆகிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாயினர். சிர்திசு மேசர் என்ற பகுதியிலிருந்து தொலை தூரத்தில் அமைந்திராத போரியமில் செருமானிய வான்டல் பழங்குடியினங்களுக்கு எதிரான பைசாந்தியப் படையெடுப்பில் பைசாந்தியத் தளபதி பெலிசரியசை யூதர்கள் எதிர்த்தனர். இதன் காரணமாக யூதர்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவ கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களது யூத கோயிலானது ஒரு கிறித்தவ கோயிலாக மாற்றப்பட்டது.[126]
ஜஸ்டினியனும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்களும் யூதேயா மாகாணத்துக்கு வெளிப்புறம் இருந்த பகுதிகள் குறித்து கவலைகள் கொண்டிருந்தனர். இந்த ஒழுங்குமுறைகளை அமல்படுத்த போதிய துருப்புக்களை அவர் கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக ஐந்தாம் நூற்றாண்டானது புதிய யூத கோயில்கள் அலை போல் கட்டப்பட்ட ஒரு காலமாக இருந்தது. இதில் பல கோயில்கள் அழகான பளிங்கு தரைகளுடன் கட்டப்பட்டன. பைசாந்தியப் பண்பாட்டின் செழிப்பான கலை வடிவங்களை யூதர்கள் பின்பற்றத் தொடங்கினர். இக்காலத்தைச் சேர்ந்த யூத பளிங்குக் கற்களானவை மக்கள், விலங்குகள், மேனோராக்கள், ராசிகள் மற்றும் விவிலிய பாத்திரங்களைச் சித்தரித்தன. இந்த யூத கோயில் தரைகளின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளானவை பெயித் ஆல்பா (தன்னுடைய மகன் ஈசாக்குக்கு பதிலாக ஒரு செம்மறிக் கடாவை ஆபிரகாரம் பலியிடும் காட்சியை இது ஒரு ராசியுடன் சேர்த்து உள்ளடக்கியுள்ளது), திபேரியசு, பெயித் சியான் மற்றும் திசிப்போரி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
பைசாந்திய ஆட்சிக்குக் கீழான யூதர்களின் பாதுகாப்பற்ற நிலையானது நீண்ட காலத்திற்கு தொடரவில்லை. இதற்குப் பெரும்பங்கு காரணம் தொலைதூர அரேபியத் தீபகற்பத்தில் (இத்தீபகற்பத்தில் யூதர்களின் பெரிய அளவிலான மக்கள் வாழ்ந்து வந்தனர்) இருந்து முசுலிம் சமயமானது வெடிப்பு போன்று பரவியதாகும். 636-இல் எர்மோக் யுத்தத்தில் தங்களது வெற்றிக்கு சில ஆண்டுகளுக்குள்ளாகவே புனித நிலத்தில் (அல்லது லெவண்ட், இப்பகுதியானது நவீன கால இசுரேல், யோர்தான், லெபனான் மற்றும் சிரியாவாக வரையறுக்கப்படுகிறது) இருந்து பைசாந்தியர்களை முசுலிம் கலீபகமானது வெளியேற்றியது. பின் வந்த நூற்றாண்டுகளில் எஞ்சியிருந்த பைசாந்திய நிலப்பரப்பிலிருந்து கலீபகத்தில் குடியேறும் முயற்சியாக ஏராளமான யூதர்கள் தப்பித்து ஓடினர்.
பைசாந்தியப் பேரரசிலிருந்த யூத சமூகத்தின் அளவானது அனத்தோலியாவின் யூதர்களை கிறித்தவ மதத்திற்கு கட்டாயப்படுத்தி மதமாற்றும் சில பேரரசர்களின் முயற்சியால் பாதிக்கப்படவில்லை. ஏனெனில், இந்த முயற்சிகளானவை மிக குறைவான வெற்றியையே கொடுத்தன.[127] பைசாந்திய ஆட்சிக்கு கீழான ஆசியா மைனர் பகுதியில் யூதர்களின் நிலை குறித்து வரலாற்றாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அமைப்பு ரீதியிலான படுகொலைகள், மொத்தமாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுதல் போன்ற மேற்கு ஐரோப்பாவில் அந்நேரத்தில் பரவலாக காணப்பட்ட எந்த ஓர் அமைப்பு ரீதியிலான ஒடுக்கு முறையின் பாணியும் பைசாந்தியத்தில் பதிவு செய்யப்படவில்லை.[128] இரண்டாம் மெகமுது கான்சுடாண்டினோபில் நகரத்தை வென்றதற்குப் பிறகு பெரும்பாலான யூத மக்கள் தொடர்ந்து அங்கேயே வாழ்ந்தனர் என்று குறிப்பிடப்படுகிறது.[சான்று தேவை]
- லுலாவ் (மூடப்பட்ட ஓலை) மற்றும் எத்ரோக்குடன் கூடிய மெனோராவைக் கொண்ட பளிங்கு, 6-ஆம் நூற்றாண்டு புரூக்ளின் அருங்காட்சியகம்
- பெயித் அல்பாவில் உள்ள ஒரு யூத கோயிலின் நடைபாதை ஓர பளிங்கு (5-ஆம் நூற்றாண்டு)
- திசிப்போரி யூத கோயிலில் உள்ள பளிங்கு (5-ஆம் நூற்றாண்டு)
- அமத் கதேர் யூத கோயிலிலிருந்து மீட்கப்பட்ட நடைபாதை ஓர பளிங்கு (5-ஆம் அல்லது 6-ஆம் நூற்றாண்டு)
புலம்பெயர்ந்த சமூகங்கள்
[தொகு]எருசலேம் முற்றுகைக்குப் பிறகு பொ. ஊ. 72-இல் சிங்லி (கொடுங்கல்லூர்) பகுதிக்கு யூதர்கள் வருகை புரிந்த காலத்திற்கு தங்களது சமூகத்தின் வேறூன்றாலனது தொடங்கியதாக கொச்சியின் யூத பாரம்பரியமானது குறிப்பிடுகிறது. ஒரு யூத இராச்சியம் இங்கு இருந்ததாகவும் கூட குறிப்பிடப்படுகிறது. பொ. ஊ. 379-இல் யூதர்கள் தங்கள் தலைவரான யோசேப் ரப்பனுக்குக் கீழ் உள்ளூர் மன்னனான சேரமான் பெருமாளால் யூத சமூகத்திற்கு வழங்கப்பட்ட தன்னாட்சியை இவர்கள் இவ்வாறு புரிந்து கொண்டுள்ளனர் என்று குறிப்பிடப்படுகிறது. முதல் யூத கோயிலானது இப்பகுதியில் 1568-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தோமாவால் கேரளத்தில் இந்திய கிறித்தவம் தொடங்கப்பட்டது குறித்த தொன்ம கதையானது அவர் இங்கு வந்த போது எபிரேய மொழியைப் புரிந்து கொண்ட ஓர் உள்ளூர் சிறுமியை சந்தித்தாகக் குறிப்பிடுகிறது.[129]
நவீன கால எத்தியோப்பியாவில் ஒரு யூத அரசான செமியேன் இராச்சியமானது அநேகமாக 4-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இது 17-ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.[130]
நடுக்காலம்
[தொகு]இசுலாமிய காலம் (638–1099)
[தொகு]
பொ. ஊ. 638-இல் பைசாந்தியப் பேரரசானது லெவண்ட் பகுதி மீதான கட்டுப்பாட்டை இழந்தது. கலீபா உமறுவுக்குக் கீழான அரேபிய இசுலாமியப் பேரரசானது எருசலேமையும், மெசொப்பொத்தேமியா, சிரியா, பாலத்தீனம் மற்றும் எகிப்து நிலங்களையும் வென்றது. ஓர் அரசியல் அமைப்பாக யூத பொருளாதார, சமூக, மற்றும் சிந்தனைசார் மேம்பாட்டுக்கு புதிய சூழ்நிலைகளை இசுலாம் உருவாக்கியது.[131] 500 ஆண்டு காலத்திற்குப் பிறகு எருசலேமில் தங்களது இருப்பை மீண்டும் நிறுவ யூதர்களுக்கு உமறு அனுமதியளித்தார்.[132] யூத பாரம்பரியமானது உமறை ஓர் அன்பாதரவான ஆட்சியாளராகக் கருதுகிறது. மிதுரசா உமறை "இசுரேலின் ஒரு நண்பனாகக்" குறிப்பிடுகிறது.[132]
அரேபிய புவியியலாளர் அல்-மக்திசியின் கூற்றுப்படி, யூதர்கள் "நாணயங்களின் தரம் அறிபவர்களாகவும், சாயமிடுபவர்களாகவும், தோல் பதனிடுபவர்களாகவும், வங்கியாளர்களாகவும் சமூகத்தில்" பணியாற்றினர்.[133] பாத்திமிய காலத்தின் போது, பல யூத அதிகாரிகள் அந்த அரசில் பணியாற்றினர்.[133] 7-ஆம் நூற்றாண்டில் அரேபிய படையெடுப்பு காலத்தின் போது இப்பகுதியின் பெரும்பாலான மக்கள் கிறித்தவர்களாகவும், யூதர்களாகவும் இருந்தனர் என பேராசிரியர் மோசே கில் நம்புகிறார்.[134]
இந்த காலத்தின் போது யூதர்கள் செழிப்பாக வளர்ந்த சமூகங்களில் பண்டைக் கால பாபிலோனியா முழுவதும் வாழ்ந்து வந்தனர். சியோனிச் காலத்தில் பாபிலோனிய எசிவா கல்வி நிலையங்களானவை யூத கற்றலின் முதன்மையான மையங்களாகத் திகழ்ந்தன. இந்த பள்ளிகளின் தலைவர்களாக இருந்த சியோனிம் (இச்சொல்லுக்கு "அழகு" அல்லது "அறிவாளிகள்" என்று பொருள்) எனப்படுபவர்கள் யூத சட்டத்தில் உச்சநிலை அதிகார மையங்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
7-ஆம் நூற்றாண்டில் புதிய முசுலிம் ஆட்சியாளர்கள் கரச் நில வரியைத் தொடங்கினர். கிராமப்புறப் பகுதிகளிலிருந்து பாபிலோனிய யூதர்கள் மொத்தமாக பகுதாது போன்ற நகரங்களுக்குப் புலம் பெயர்வதற்கு இது காரணமாக அமைந்தது. இது பதிலுக்கு பெருமளவு செல்வம் மற்றும் பன்னாட்டு செல்வாக்கை யூதர்களுக்கு வழங்கியது. மேலும், சாதியா கவோன் போன்ற யூத சிந்தனையாளர்களிடமிருந்து ஒரு மிகுதியான பல இன, பண்பாட்டை உள்ளடக்கிய ஒரு பார்வையை இது கொண்டு வந்தது. முதல் முறையாக மேற்குலக தத்துவத்துடன் சாதியா கவோன் ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்தார். 10-ஆம் நூற்றாண்டில் அப்பாசியக் கலீபகமும், பகுதாது நகரமும் வீழ்ச்சியடைந்த போது பல பாபிலோனிய யூதர்கள் நடு நிலக் கடல் பகுதிக்குப் புலம் பெயர்ந்தனர். பாபிலோனிய யூதப் பழக்க வழக்கங்களானவை யூத உலகம் முழுவதும் பரவுவதற்குப் பங்களித்தனர்.[135]
எசுப்பானியாவில் யூதப் பண்பாட்டின் பொற்காலம் (711–1031)
[தொகு]எசுப்பானியாவில் யூதப் பண்பாட்டின் பொற்காலமானது ஐரோப்பாவில் நடுக்காலத்துடன் ஒத்து அமைந்தது. ஐபீரிய மூவலந்தீவின் பெரும்பாலான பகுதி முழுவதும் முசுலிம் ஆட்சியைக் கொண்டிருந்த ஒரு காலமாக இக்காலம் திகழ்ந்தது. அக்காலத்தின் போது சமூகத்தில் யூதர்கள் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். யூத சமூக, பண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்வானது செழிப்பாக அமைந்திருந்தது.
ஐபீரிய மூவலந்தீவின் யூதர்களுக்கு சகிப்புத் தன்மையின் ஒரு காலமானது இவ்வாறாக உதித்தது. முசுலிம் படையெடுப்பின் விளைவாக ஆப்பிரிக்காவிலிருந்து வந்த புலம் பெயர்ந்த யூதர்களால் இவர்களது எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தது. குறிப்பாக 912-ஆம் ஆண்டிற்குப் பிறகு மூன்றாம் அப்தர் இரகுமான் மற்றும் அவரது மகன் இரண்டாம் அல்-அகம் ஆகியோரின் ஆட்சிக் காலத்தின் போது யூதர்கள் செழித்திருந்தனர். குர்துபா கலீபகத்திற்குப் பணியாற்றியும், அறிவியலைக் கற்றும், வணிகம் மற்றும் தொழிற்துறையில் ஈடுபட்டும், குறிப்பாக பட்டு மற்றும் அடிமைகள் வணிகத்தில் ஈடுபட்டும் இருந்தனர். பொருளாதார தளத்தில் யூதர்களின் விரிவாக்கமானது அதற்கு முன்னர் நடந்திராத அளவுக்கு இருந்தது. டொலேடோவில் யூதர்கள் அரேபிய நூல்களை உரோமானிய மொழிகளுக்கும், கிரேக்க மற்றும் எபிரேய நூல்களை அரேபிய மொழிக்கும் மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தனர். தாவரவியல், புவியியல், மருத்துவம், கணிதவியல், கவிதை மற்றும் தத்துவம் ஆகிய துறைகளுக்கும் கூட யூதர்கள் பங்களித்தனர்.[136][137] பிரித்தானிய-அமெரிக்க வரலாற்றாளர் பெர்னார்டு லீவிசின் கூற்றுப்படி:
பொதுவாக யூதர்கள் தங்களது சமயத்தைப் பின்பற்றவும், தங்களது சமூகத்தின் சட்டங்கள் மற்றும் புனித நூல்களின் படி வாழவும் அனுமதிக்கப்பட்டனர். மேற்கொண்டு, யூதர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளானவை சமுதாயத்துக்குரியதாகவும், அடையாளம் அளவிலுமே இருந்தன. எளிதில் புலப்படக் கூடியதாகவும், நடைமுறை ரீதியிலும் அவை இல்லை. இதை, இந்த ஒழுங்கு முறைகளானவை இரு சமூகங்களுக்கிடையிலான உறவு முறையை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன, யூதர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறலாம்.[138]
அப்தல் ரகுமானின் அரசவை மருத்துவரும், அமைச்சருமாக அசுதை பென் ஈசாக்கு இப்னு சாப்ருத் திகழ்ந்தார். மெனகெம் பென் சருக், துனசு பென் லப்ரத் மற்றும் பிற யூத அறிஞர்கள் மற்றும் கவிஞர்களுக்குப் புரவலராக இவர் திகழ்ந்தார். சாமுவேல் அனாகித், மோசே இப்னு எசுரா, சாலமன் இப்னு கபிரோல் யூதா அலேவி மற்றும் மோசே மைமோனிதேசு போன்ற பிரபலமான நபர்களுக்குக் கீழ் இக்காலகட்டத்தின் போது யூத சிந்தனையானது செழித்திருந்தது.[136] அப்தல் இரகுமானின் ஆட்சிக் காலத்தின் போது அறிஞர் மோசே பென் எனோச் குர்துபாவின் யூத மத குருவாக நியமிக்கப்பட்டார். இதன் விளைவாக அல்-அந்தலுசானது தல்மூதிய கற்றலின் மையமாக உருவானது. குர்துபா கற்றறிந்த யூதர்களுக்கான சந்திப்பு இடமாக உருவானது.
அல்மொகதர்களால் அல்-அந்தலுசு படையெடுப்புக்கு உள்ளான போது யூதர்களின் இந்தப் பொற்காலமானது முடிவுக்கு வந்தது. வடக்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு பழமைவாத அரசமரபு இதுவாகும். மத சிறுபான்மையினரிடம் அதிக அளவு சகிப்பு தன்மையற்ற நிலையுடன் அல்மொகதர்கள் நடந்து கொண்டனர்.
யூதர்களும், சிலுவைப் போர்களும் (1099–1260)
[தொகு]
இயேசுவின் இறப்பிற்குப் பழிவாங்க வேண்டும் என்று குறிப்பிட்ட சமய சொற்பொழிவுகளானவை சிலுவைப் போர்களில் பங்கெடுக்க கிறித்தவர்களை ஊக்குவித்தன. புனித நிலத்திற்குச் செல்லும் சிலுவைப் போர் வீரர்கள் இசுமாயிலர்களுடன் சண்டையிடுவதற்கு முன்னராக இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்குப் பழிவாங்குவதற்காக இசுமாயிலருக்கு மத்தியில் வாழ்ந்து வரும் யூதர்களைக் கொல்ல வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்ததாக 12-ஆம் நூற்றாண்டு யூத நூலில் சாலமன் பென் சாம்சன் பதிவிட்டுள்ளார். இந்த கொலைகளானவை பிரான்சின் ரோவன் துறைமுகத்தில் தொடங்கின. பிரான்சு-செருமனியின் ரைன் பள்ளத்தாக்கிலிருந்த யூத சமூகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.[139]
எய்தெல்பெர்க்கைச் சுற்றியிருந்த நிலப்பரப்புகளில் யூதர்கள் மீது சிலுவைப்போர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பெருமளவு யூதர்கள் கொல்லப்பட்டனர். பலர் கிறித்தவ மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். திரு முழுக்கைத் தவிர்ப்பதற்காக பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தாங்கள் கொல்லப்பட்டால் தங்களது பிள்ளைகள் கிறித்தவர்களாக வளர்க்கப்பட எடுத்துச் செல்லப்படுவார்கள் என்ற யூதர்கள் புரிந்து கொண்டதானது தற்கொலை செய்து கொள்வதற்கான வழியை அவர்கள் தேர்ந்தெடுப்பதற்குப் பின் இருந்த ஒரு முக்கியமான காரணியாகக் குறிப்பிடப்பட்டது. கிறித்தவ நிலங்களுக்கு மத்தியில் வாழ்ந்த யூதர்கள் இந்த அச்சுறுத்தலை கடுமையாக உணர்ந்தனர்.[140] பெரும் இன அழிப்பில் உச்ச நிலையை அடைந்த ஒரு தொடர்ச்சியான யூத எதிர்ப்பு நிகழ்வுகளில் முதல் நிகழ்வாக இந்தப் படுகொலை பார்க்கப்பட்டது.[141] இந்தப் படுகொலைகளின் போது அண்டை கிறித்தவர்கள் மற்றும் ஆட்சியாளர்களால் தாங்கள் கைவிடப்பட்டதாக யூதர்கள் எண்ணினர். யூதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து உறுதிமொழிகள் மற்றும் சாசனங்களின் மீது நம்பிக்கை இழந்தனர்.[142]
பல யூதர்கள் தற்காப்பைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், தற்காப்பை அவர்கள் கையாண்ட விதமானது வரம்புக்கு உட்பட்டதாக இருந்தது. அவர்களது இறப்புகள் அதிகரிக்க மட்டுமே செய்தன. பெரும்பாலான கட்டாய மதமாற்றங்களானவை பயனற்றவை என்று நிரூபிக்கப்பட்டது. பின்னாட்களில் பல யூதர்கள் தங்களது தொடக்க நம்பிக்கைக்கு மதம் மாறினர். திருத்தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், பேரரசர் நான்காம் என்றி இந்த மாற்றங்களுக்கு அனுமதியளிக்க ஒப்புக் கொண்டார்.[139] இந்த படுகொலைகளானவை கிறித்தவ இராச்சியங்களில் யூதர்களுக்கு ஒரு புதிய காலகட்டத்தை தொடங்கி வைத்தன. சமூக அழுத்தத்திலிருந்து யூதர்கள் தங்களது நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டனர். தற்போது வாள் முனையில் அவர்கள் தமது நம்பிக்கையை தக்க வைக்க வேண்டியிருந்தது. சிலுவைப் போர்களின் போது நடந்த படுகொலைகளானவை யூதர்களை உட்புறத்திலிருந்து ஆன்மீக ரீதியாக வலுவடையச் செய்தன. தங்களது போராட்டமானது கடவுளின் பெயரை புனிதப்படுத்தம் இசுரேலின் போராட்டம் என்பது யூதர்களின் பார்வையாக இருந்தது.[143]
1099-இல் சிலுவைப் போர் வீரர்களுக்கு எதிராக எருசலேமை தற்காக்க அரேபியர்களுக்கு யூதர்கள் உதவி புரிந்தனர். நகரம் வீழ்ந்த போது சிலுவைப் போர் வீரர்கள் பல யூதர்களை ஒரு யூத கோயிலில் திரட்டினர். கோயிலுக்கு தீ வைத்தனர்.[139] கைஃபா நகரத்தில் யூதர்கள் கிட்டத்தட்ட தனியாக பட்டணத்தை சிலுவைப் போர் வீரர்களுக்கு எதிராக தற்காத்தனர். ஒரு மாதத்திற்கு (சூன்-சூலை 1099) தாக்குப் பிடித்தனர்.[133] எருசலேம், திபேரியசு, ரமலா, அசுகெலோன், சீசரியா மற்றும் காசா உள்ளிட்ட நகரங்களில் நாடு முழுவதும் இந்நேரத்தில் யூத சமூகங்களானவை சிதறிக் காணப்பட்டன. சிலுவைப் போர் காலத்தின் போது யூதர்களுக்கு நிலத்தை உடைமையாக வைத்துக் கொள்ள அனுமதியளிக்கப்படாத காரணத்தால் தாங்கள் செயல்பாட்டிலில்லாத காலங்களின் போது கடற்கரை பட்டணங்களில் வணிகப் பணிகளில் யூதர்கள் பணியாற்றினார். சிதோனில் கண்ணாடி தயாரிப்பவர்களாகவவும், எருசலேமில் உரோமம் விற்பவர்களகவும், சாயம் அடிப்பவர்களாகவும் பெரும்பாலான யூதர்கள் கைவினைஞர்களாக திகழ்ந்தனர்.[133]
இக்காலத்தின் போது திபேரியசுவைச் சேர்ந்த மோசோரெதெசு உயிர்க்குறியை நிறுவினார். எழுத்துக்களின் மேல் அல்லது கீழே குறிப்பிடப்படும் குறியீடுகளின் ஓர் அமைப்பு இதுவாகும். இது உயிரெழுத்துக்களையோ அல்லது எபிரேய அரிச்சுவடியின் எழுத்துகளின் வேறுபட்ட உச்சரிப்புக்கு இடையில் பிரித்தறிவதையோ பிரதிநிதித்துவப்படுத்தியது. பியூதிம் எனும் யூத சடங்குப் பாடல்கள் மற்றும் மிதுரசிம் எனும் எபிரேய புனித நூல்களின் விளக்க உரைகளில் பல இந்நேரத்தில் பாலத்தீனத்தில் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.[133]
1165-ஆம் ஆண்டு எழுதிய மைமோனிதசு தான் எருசலேமுக்குச் சென்றதாகவும், கோயில் மலைக்குச் சென்றதாகவும், அங்கு "பெரிய, புனிதமான இடத்தில்" வழிபட்டதாகவும் எழுதியுள்ளார்.[144] மைமோனிதசு தனக்கும், தன் மகன்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை வரும் ஒரு விடுமுறை நாளை நிறுவினார். எபிரேய நாட்காட்டியின் எட்டாம் மாதமான செசுவான் மாதத்தின் ஆறாவது நாள் இதுவாகும். கோயில் மலைக்கு தான் சென்று வழிபட்ட நாளை நினைவு கூருவதற்காக மைமோனிதசு இதை நிறுவினார். மற்றொரு நாள் செசுவான் மாதத்தின் ஒன்பதாம் நாள் ஆகும். எபிரோனில் பிதாப்பிதாக்களின் குகையில் இவர் வழிபட்ட நாளை நினைவு கூருவதற்காக இந்நாள் நிறுவப்பட்டது.
1141-இல் எகுதா அலேவி பாலத்தீனத்திற்குப் புலம் பெயர யூதர்களுக்கு அழைப்பு விடுத்தார். தானும் ஒரு நீண்ட தூர பயணத்தில் ஈடுபட்டார். குர்துபாவிலிருந்து ஒரு புயலால் தாக்கப்பட்ட பகுதி வழியாக பயணித்ததற்குப் பிறகு இவர் எகிப்திய அலெக்சாந்திரியாவுக்கு வருகை புரிந்தார். அங்கு தன்னுடைய நண்பர்கள் மற்றும் போற்றுபவர்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார். தமியேத்தாவில் தன்னுடைய மன எண்ணத்திற்கு எதிராக இவர் போராட வேண்டியிருந்தது. தன்னுடைய நண்பர் அல்போன் அலேவியின் வேண்டுதலாலும் மன எண்ணத்திற்கு எதிராக இவர் போராட வேண்டியிருந்தது. தான் எகிப்தில் தொடர்ந்து தங்கியிருந்தால் அங்கு சகிப்புத் தன்மையற்ற ஒடுக்கு முறையிலிருந்து தள்ளியிருக்கலாம் என்று இவருக்கு கூறப்பட்டது. நிலம் வழியாக பயணிக்கும் கடினமான பாதையில் இவர் பயணத்தை தொடங்கினார். தயர் மற்றும் திமிஷ்குவிலிருந்த யூதர்களை இவர் வழி நெடுக சந்தித்தார். எருசலேமுக்கு அருகில் நெருங்கிய போது புனித நகரத்தின் காட்சியால் பிரமித்த இவர் தன்னுடைய மிக அழகான இரங்கற்பாவைப் பாடினார் என்று யூத கதைகள் குறிப்பிடுகின்றன. இப்பாவானது பிரபலமான "சியோனித்" (சியோன் அ-லோ திசாலி) ஆகும். இந்நேரத்தில் ஓர் அரேபியர் நகரத்தின் வாயிலில் இருந்து குதிரையில் உச்ச வேகத்தில் வந்தார் என்றும், இவர் மீது வேகமாக அக்குதிரையை ஓட்டிச் சென்றார் என்றும், இந்த விபத்தில் இவர் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.[சான்று தேவை]
மம்லூக் காலம் (1260–1517)
[தொகு]நகமனிதசு 1267-இல் பழைய நகரமான எருசலேமில் குடியமரத் தொடங்கியதாகப் பதிவுகள் உள்ளன. இவர் ஏக்கர் பகுதிக்கு நகர்ந்தார். அங்கு இவர் யூத கற்றலை செயல் முனைப்புடன் பரப்பினார். அந்நேரத்தில் யூத கற்றலானது புனித நிலத்தில் அக்கறை செலுத்தாமல் விடப்பட்டிருந்தது. தன்னைச் சுற்றி மாணவர்களின் ஒரு வட்டத்தை இவர் சேர்த்தார். மக்கள் கூட்டமாக வரத் தொடங்கினர். யூப்பிரடீசு மாவட்டத்தில் இருந்தும் கூட இவருடைய பேச்சைக் கேட்பதற்காக வருகை புரிந்தனர். கரைதியர்கள் இவருடைய உரைகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவராக மூத்த ஆரோன் பென் யோசப்பு திகழ்ந்தார். பிற்காலத்தில் யோசப்பு கரைதிய அதிகாரமுடையர்களில் ஒரு மிகச் சிறந்தவர்களில் ஒருவராக உருவானார். நகமனிதசு எருசலேமுக்கு வருகை புரிந்து சீக்கிரமே தன்னுடைய மகனான நகமனுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அக்கடிதத்தில் புனித நகரத்தின் பாழடைந்த நிலையை விளக்கியுள்ளார். அந்நேரத்தில், எருசலேமில் வெறும் இரண்டு யூதர்களே வாழ்ந்தனர். அந்த இருவரும் சாயமிடும் வணிகத்தைச் செய்து வந்த சகோதரர்கள் ஆவர். ஏக்கரில் இருந்து பின்னாட்களில் அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் நகமனிதசு அடக்கமான பண்பை வளர்த்துக் கொள்ளுமாறு தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். பண்புகளிலேயே முதல் நிலைப் பண்பு என்று இவர் இதைக் கருதினார். மற்றொரு கடிதத்தை இவர் தனது இரண்டாவது மகனுக்கு அனுப்பினார். இவரது இரண்டாவது மகன் காசுதிலிய அரசவையில் அதிகாரப்பூர்வ பதவியில் இருந்தார். தினசரி பிரார்த்தனைகளை ஓதுவதை நகமனிதசு பரிந்துரைக்கிறார். அனைத்திற்கு மேலாக ஒழுக்கமின்மைக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கிறார். 76 வயதை அடைந்ததற்குப் பிறகு நகமனிதசு இறக்கிறார். இவரது உடலானது கைஃபாவில் பாரிசின் எச்சியலின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டது.
எச்சியல் 1260-ஆம் ஆண்டு ஏக்கரில் தன் மகன் மற்றும் ஆதரவாளர்களின் ஒரு பெரிய குழுவுடன் குடியமர்ந்தார்.[145][146] அங்கு இவர் மிதுரசு அகதோல் தி பாரிசு என்ற தல்மூதிய கல்வி நிலையத்தை நிறுவினார்.[147] 1265 மற்றும் 1268 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அங்கு இவர் இறந்ததாக நம்பப்படுகிறது. 1488-இல் மிசுனா விரிவுரையாளரான ஒபடியா பென் ஆபிரகாம் எருசலேமுக்கு வருகை புரிந்தார். இந்நிலத்தில் யூத சமூகம் திரும்பி வந்ததன் ஒரு புதிய காலத்தை இது குறித்தது.
எசுப்பானியா, வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு
[தொகு]
நடு காலங்களின் போது கிறித்தவர்களைக் காட்டிலும் யூதர்கள் இசுலாமிய ஆட்சியாளர்களால் பொதுவாக நன் முறையில் நடத்தப்பட்டனர். இரண்டாந்தர குடியுரிமையைக் கொண்டிருந்த போதும் அரசவைகளில் முக்கியமான பங்கை யூதர்கள் ஆற்றினர். தோராயமாக 900-1100-க்கு இடையிலான காலகட்டத்தின் போது மூரிய எசுப்பானியாவில் ஒரு பொற்காலம் ஏற்பட்டது. அக்காலத்திற்கு பின்னர் நிலையானது மோசமடைந்தாலும் இக்காலம் ஏற்பட்டது. எனினும், நூற்றாண்டுகளின் போக்கில் வடக்கு ஆப்பிரிக்காவில் யூதர்கள் கொல்லப்பட்டதில் முடிவடைந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, மொரோக்கோ, லிபியா மற்றும் அல்சீரியாவில் இவை நடைபெற்றன. அங்கே யூதர்கள் இறுதியாக கெட்டோக்களில் (முகாம்) வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.[149]
11-ஆம் நூற்றாண்டின் போது எசுப்பானியாவில் முசுலிம்கள் யூதர்களுக்கு எதிராக அமைப்பு ரீதியிலான படுகொலைகளை நடத்தினர். 1011-ஆம் ஆண்டு குர்துபா மற்றும் 1066-இல் கிரானடாவில் நடைபெற்ற படுகொலைகளை இவ்வாறு குறிப்பிடலாம்.[150] நடுக் காலங்களின் போது எகிப்து, சிரியா, ஈராக்கு மற்றும் ஏமனின் அரசாங்கங்களானவை யூத கோயில்களை அழிப்பதற்கு ஆணையிட்ட சட்டங்களை இயற்றின. சில நேரங்களில் ஏமன், மொரோக்கோ மற்றும் பகுதாதுவின் சில பகுதிகளில் இசுலாமுக்கு மதம் மாறுவது அல்லது மரணத்தை எதிர் கொள்வது என்ற நிலைக்கு யூதர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.[151][மேம்பட்ட ஆதாரம் தேவைப்படுகிறது] 1172 வாக்கில் பெரும்பாலான இசுலாமியப் ஐபீரியாவின் கட்டுப்பாட்டை பெற்ற அல்மொகதர்கள் தங்களது அடிப்படைவாதப் பார்வையில் அல்மொராவிதேசுகளைத் தாண்டினர். திம்மிக்களை அவர்கள் கடுமையாக நடத்தினர். மொரோக்கோ மற்றும் இசுலாமிய எசுப்பானியாவிலிருந்து யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகிய இரு சமயத்தவரையுமே அவர்கள் வெளியேற்றினர். இறப்பு அல்லது மதமாற்றம் என்ற நிலையை எதிர் கொண்ட போது பல யூதர்கள் புலம் பெயரத் தொடங்கினர்.[152] மைமோனிதசுவின் குடும்பம் போன்ற சில குடும்பங்கள் சற்று அதிகப்படியான சகிப்புத் தன்மையுடைய முசுலிம் நிலங்களுக்கு தெற்கு மற்றும் கிழக்கு நோக்கித் தப்பியோடினர். அதே நேரத்தில், பிறர் வடக்கு நோக்கி வளர்ந்து வந்த கிறித்தவ இராச்சியங்களில் குடியமரப் பயணித்தனர்.[153][154][மேம்பட்ட ஆதாரம் தேவைப்படுகிறது]
ஐரோப்பா
[தொகு]
சேம்சு பி. கரோலின் கூற்றுப்படி, "உரோமானியப் பேரரசின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 10% ஆக இருந்தனர். இந்த தகவின் படி, பிற காரணிகள் தலையிடாமல் இருந்திருந்தால், தற்போதைய உலகத்தில 1.3 கோடி யூதர்கள் என்று தற்போது இருப்பதற்குப் பதிலாக 20 கோடி யூதர்கள் இருந்திருக்க வேண்டும்".[156]
யூத மக்கள் தொகையானது ஐரோப்பாவில் வாழ்ந்து வந்தது. குறிப்பாக முந்தைய உரோமை பேரரசின் பகுதியில் மிக தொடக்க காலத்திலிருந்தே வாழ்ந்து வந்தது. யூத ஆண்கள் புலம் பெயர தொடங்கிய போது புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து சில நேரங்களில் மனைவிகளை திருமணம் செய்து கொண்டனர். யூத மக்கள் மத்தியில் ஒய்-டிஎன்ஏ மரபணுவுடன் ஒப்பிடும் போது பல்வேறு இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடியால் இது நிரூபிக்கப்படுகிறது.[157] இந்த குழுக்களுடன் யூத வணிகர்கள் இணைந்தனர். பின்னர் புலம் பெயர்ந்த யூதர்களின் உறுப்பினர்கள் இணைந்தனர்.[சான்று தேவை] பிரான்சு மற்றும் செருமனியில் யூத சமூகங்கள் குறித்த பதிவுகளானவை நான்காம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன. எசுப்பானியாவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு எண்ணிக்கையிலான யூத சமூகங்களானவை இதற்கு முந்தைய காலத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.[சான்று தேவை]
நடுக் காலங்களானவை பொதுவாக யூதர்களுக்குக் கடினமான காலமாக இருந்தது எனக் கூறப்படும் பாரம்பரியத்தை நார்மன் கன்டோர் மற்றும் பிற 20-ஆம் நூற்றாண்டு அறிஞர்கள் மறுக்கின்றனர். அதிகரித்து வந்த சட்டங்களின் தொகுப்புடன் ஓர் அமைப்பாக கிறித்தவ திருச்சபையானது முழுவதுமாக ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்னர் தொடக்க நடுக்கால சமூகமானது பொதுவாக யூதர்களிடம் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டது. 800 மற்றும் 1100-க்கு இடையில் கிறித்தவ ஐரோப்பாவில் 15 இலட்சம் யூதர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் கிறித்தவர்களாக இல்லாத காரணத்தால் மதகுருமார்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பணியாட்களையுடைய நில மானிய முறைமையின் ஒரு பிரிவாக இவர்கள் பிரிக்கப்படவில்லை. கிறித்தவ பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய பணி மற்றும் ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்படுதல் போன்ற ஒடுக்குமுறைகள் யூதர்களுக்கு ஏற்படவில்லை என்பது இதன் பொருளாகும். கிறித்தவ சமூகத்துடனான உறவுமுறைகளில் யூதர்களானவர்கள் மன்னர்கள், குறுநில மன்னர்கள் மற்றும் மத குருமார்களால் பாதுகாக்கப்பட்டனர். இதற்கு முக்கியக் காரணம் நிதி, நிர்வாகம் மற்றும் மருத்துவம் ஆகிய மூன்று தளங்களில் இவர்கள் அளித்து வந்த முக்கியமான பணிகளே ஆகும்.[158] எனினும், யூதர்களிடம் அரசியல் வலிமை இல்லாததானது கடுமையான வரி விதிப்பின் வழியாக யூதர்களிடமிருந்து மிகு நலம் பெறும் நிலைக்கு இவர்களை தள்ளியிருந்தது.[159]
விவிலியத்தில் ஆர்வம் கொண்டிருந்த கிறித்தவ அறிஞர்கள் தல்மூதிய யூத மத குருமார்களைக் கலந்தாலோசித்தனர். ஓர் அமைப்பாக உரோமை கத்தோலிக்க திருச்சபையானது வலிமையடைந்த போது பிரான்சிசுகிய மற்றும் தொமினிகிய போதனை அமைப்புகள் நிறுவப்பட்டன. போட்டியிட்டு கொண்டிருந்த நடுத்தர வர்க்கம் மற்றும் பட்டணங்களில் வாழ்ந்த கிறித்தவர்களின் வளர்ச்சியும் ஏற்பட்டது. 1300 வாக்கில் புனித வாரத்தின் போது கிறித்தவ திருச்சபையைச் சேர்ந்தவர்களும், உள்ளூர் மத குருமார்களும் இயேசுவின் பாடுகள் குறித்த நாடகங்களை நடத்தினர். யூதர்கள் (சமகால உடையில்) இயேசு கிறித்துவை கொல்வது என்பது நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி இதில் சித்தரிக்கப்பட்டது. இக்காலத்திலிருந்து யூதர்கள் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாவதும், நாடு கடத்தப்படுவதும் வாடிக்கையானது. 1500 வாக்கில் தற்கால போலந்தில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மற்றும் தங்களது செழிப்பான வாழ்வு மீண்டும் புதுப்பிக்கப்பட்டதை யூதர்கள் கண்டனர்.[158]
1300-க்குப் பிறகு கிறித்தவ ஐரோப்பாவில் யூதர்கள் அதிகப்படியான இடர்பாடுகள் மற்றும் ஒடுக்கு முறையால் பாதிப்படைந்தனர். ஐரோப்பிய யூதர்கள் பொதுவாக நகர்ப்புறத்தில் வாழ்ந்த எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். உண்மையைப் பிடிவாதமாக மறுப்பவர்கள் யூதர்கள் என்ற மனப்பான்மையை கிறித்தவர்கள் கொண்டிருந்தனர். ஏனெனில், கிறித்தவர்களின் பார்வையில் யூத புனித நூல்கள் குறித்த தங்களது அறிவிலிருந்து கிறித்தவ கொள்கைகளின் உண்மையை யூதர்கள் அறிந்திருக்க வேண்டும் என கிறித்தவர்கள் எதிர்பார்த்தனர். கிறித்தவத்தை ஏற்றுக் கொள்ளும் அழுத்தங்கள் குறித்து யூதர்கள் அறிந்திருந்தனர்.[160] கத்தோலிக்க கிறித்தவர்கள் வட்டிக்குக் கடன் கொடுப்பதை திருச்சபையானது தடை செய்திருந்ததால் சில யூதர்கள் வட்டிக்கு கடனளிக்கும் முக்கியமானவர்களாக ஆயினர். திருச்சபையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலையை அடையாமல், தங்களது பயன்பாட்டுக்காக மூலதனத்தை வழங்கும் மக்களின் இத்தகைய ஒரு வர்க்கத்தைக் கொண்டிருப்பதானது தங்களுக்கு அனுகூலமானது என கிறித்தவ ஆட்சியாளர்கள் படிப்படியாக அறிந்து கொண்டனர். இதன் விளைவாக மேற்கு ஐரோப்பாவின் பண வணிகமானது யூதர்களின் சிறப்பு துறையாக உருவானது. ஆனால், வங்கிப் பரிவர்த்தனைகள் மூலமாக யூதர்கள் பெரும் பணத்தை ஈட்டும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நிகழ்விலும், அவர்களது வாழ்நாளின் போதோ அல்லது அவர்கள் இறக்கும் போதோ அப்பணத்தை மன்னர் எடுத்துக் கொண்டார்.[161] மன்னனின் கருவூலத்திற்கு அனுகூலம் அளிப்பதற்கு வரியளிக்கும் மன்னனின் உடைமையாகக் கருதப்படும், ஏகாதிபத்திய செர்வி கமரே எனப்படுவர்களாக யூதர்கள் உருவாயினர். குறுநில மன்னர்கள் அல்லது நகரங்களிடம் யூதர்களையும், அவர்களது உடைமைகளையும் மன்னர்கள் அளித்தனர்.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்த யூதர்கள் அடிக்கடி படுகொலை செய்யப்பட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டனர். சிலுவைப் போர்களின் போது இந்த ஒடுக்கு முறையானது அதன் உச்சநிலையை அடைந்தது. மக்களின் சிலுவைப் போரில் (1096) ரைன் மற்றும் தன்யூப் ஆற்றுப் பகுதிகளில் வாழ்ந்து வந்த, செழித்திருந்த யூத சமூகங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டன. இரண்டாம் சிலுவைப் போரில் (1147) பிரான்சிலிருந்து யூதர்கள் தொடர்ச்சியான படுகொலைகளுக்கு உள்ளாயினர். 1251 மற்றும் 1320-ஆம் ஆண்டுகளின் மேய்ப்பாளர்களின் சிலுவைப் போர்களாலும் யூதர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். சிலுவைப் போர்களை தொடர்ந்து பெருமளவில் யூதர்கள் வெளியேற்றப்படுவது நடைபெற்றது. 1290-ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டது,[162] பிரான்சிலிருந்து 1396-இல் 1,00,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டது மற்றும் 1421-இல் ஆத்திரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான யூதர்கள் வெளியேற்றப்பட்டது ஆகிய நிகழ்வுகள் இதில் அடங்கும். இக்காலத்தின் போது ஐரோப்பாவிலிருந்து பல யூதர்கள் தப்பித்து ஓடியோ அல்லது வெளியேற்றப்பட்டோ போலந்துக்குப் புலம் பெயர்ந்தனர். அங்கு மற்றுமொரு பொற்காலம் என்று குறிப்பிடப்படும் காலத்தில் செழித்திருந்தனர்.
இத்தாலியில் வெனிசு நகரத்தில் வாழ யூதர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், ஒரு கெட்டோவில் அவர்கள் வாழ வேண்டிய தேவை இருந்தது. இந்த பழக்க வழக்கமானது இத்தாலி முழுவதும் பரவியது. கத்தோலிக்க ஐரோப்பாவில் பல இடங்களில் இது பின்பற்றப்பட தொடங்கியது. கெட்டோக்களுக்கு வெளியில் வாழும் யூதர்கள் பொதுவாக ஒரு மஞ்சள் நட்சத்திரத்தை குறியீடாக அணிய வேண்டியிருந்தது.[163][164]
எசுப்பானியா மற்றும் போர்த்துகலிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்படுதல்
[தொகு]


14-ஆம் நூற்றாண்டின் போது எசுப்பானியாவில் அதிக அளவிலான எண்ணிக்கையிலிருந்த யூத சமூகமானது குறிப்பிடத்தக்க ஒடுக்கு முறைக்கு உள்ளானது. இதில் முக்கியமானது 1391-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பெரிய அமைப்பு ரீதியிலான படுகொலை ஆகும். எசுப்பானியாவின் 3 இலட்சம் யூதர்களில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக்க கிறித்தவத்துக்கு மதம் மாறுவதில் இது முடிவடைந்தது. 1492-இல் கிரானடா முசுலிம் இராச்சியத்தை வென்றதுடன் கத்தோலிக்க முடியாட்சியாளர்கள் அல்கம்ப்ரா ஆணையை வெளியிட்டனர். எசுப்பானியாவின் எஞ்சியிருந்த 1 இலட்சம் யூதர்கள் மதம் மாறுவது அல்லது நாட்டை விட்டு வெளியேறுவது ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எசுப்பானியாவிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வானது பொ. ஊ. 73-இல் நடைபெற்ற எருசலேம் அழிவு மற்றும் 1940-களில் நடைபெற்ற பெரும் இன அழிப்புக்கு இடையில் நடைபெற்ற மிக மோசமான அழிவாக யூதர்களால் கருதப்படுகிறது.[165]
இதன் விளைவாக 50,000 முதல் 70,000 யூதர்கள் எசுப்பானியாவிலிருந்து வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் எசுப்பானியாவின் ஏற்கனவே அதிக அளவிலிருந்த மதம் மாற்றப்பட்ட சமூகத்தில் இணைந்தனர். பெரிய அளவிலிருந்த கத்தோலிக்க பண்பாட்டால் அனேகமாக 2.5 இலட்சம் மதம் மாறியவர்கள் இவ்வாறாக படிப்படியாக உள்ளிழுத்து கொள்ளப்பட்டனர். யூத சமயத்தை ரகசியமாக பின்பற்றியவர்கள் எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணையால் 40 ஆண்டு கால கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டாலும் இவ்வாறான நிலை இருந்தது. 1530-ஆம் ஆண்டு வரை குறிப்பாக இதுவே நிலைமையாக இருந்தது. அதற்குப் பிறகு திரிபுக் கொள்கை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மதம் மாறியவர்கள் குறித்த விசாரணையானது ஒட்டு மொத்த விசாரணைகளில் 3% என்ற அளவுக்கு குறைந்தது. இதே போன்ற வெளியேற்றங்களானவை சிசிலியில் 1493-ஆம் ஆண்டு செபராதிய யூதர்களுக்கும் (37,000 யூதர்கள்), 1496-இல் போர்த்துகலின் யூதர்களுக்கும் நடந்தது. வெளியேற்றப்பட்ட எசுப்பானிய யூதர்கள் முதன்மையாக உதுமானியப் பேரரசு, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் போர்த்துகலுக்கு தப்பினர். ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் ஆலந்து மற்றும் இங்கிலாந்தில் குடியமர்ந்தனர்.
இந்த வெளியேறுதலுக்கு பிறகு தற்போதைய இங்கிலாந்து, பிரான்சு, செருமனி, ஆத்திரியா மற்றும் ஆலந்து ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறுதல்கள் மற்றும் தடை செய்யப்படுதல்களின் ஒரு நீண்ட செயல்முறையானது நடைபெற்றது. சனவரி 1492-இல் கடைசி முசுலிம் அரசானது எசுப்பானியாவில் தோற்கடிக்கப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து எசுப்பானியாவின் யூதர்கள் (உலகின் மிகப் பெரிய யூத சமூகம் இது) கிறித்தவத்திற்கு மதம் மாறுவது அல்லது தங்களது உடைமைகளை அப்படியே விட்டு விட்டு நாட்டை விட்டு வெளியேறுவது என்பதில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 1 இலட்சம் யூதர்கள் மதம் மாறினர். பலர் தொடர்ந்து ரகசியமாக யூத சமயத்தை பின்பற்றினர். ரகசியமாக பின்பற்றியதற்கு கத்தோலிக்க திருச்சபையின் திரிபுக் கொள்கை விசாரணையானது (தாமசு தி தார்க்குமதாவால் தலைமை தாங்கப்பட்டது) பொது இடத்தில் எரிப்பதன் மூலம் மரண தண்டனையை அளிப்பது என்பதை தற்போது கட்டாயமாக்கியது. 1.75 இலட்சம் யூதர்கள் எசுப்பானியாவிலிருந்து வெளியேறினர்.[166]
பல எசுப்பானிய யூதர்கள் வடக்கு ஆப்பிரிக்கா, போலந்து மற்றும் உதுமானியப் பேரரசுக்கு புலம் பெயர்ந்தனர். குறிப்பாக தெசலோனிகி நகரத்திற்கு (தற்போது கிரேக்கத்தில் உள்ளது) குடிபெயர்ந்தனர். உலகின் மிகப் பெரிய யூத நகரமாக இது உருவானது. உதுமானியப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மத்திய கிழக்கு மற்றும் பாலத்தீனப் பகுதிகளுக்கு சில குழுக்கள் பயணத்தின. சுமார் 1 இலட்சம் எசுப்பானிய யூதர்கள் போர்த்துகலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். எனினும், ஐந்தாண்டுகள் கழித்து அவர்களது குழந்தைகள் பறிக்கப்பட்டனர். மதம் மாற வேண்டும் அல்லது குழந்தைகளை விட்டு விட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அவர்கள் உள்ளாயினர்.[167]
தொடக்க நவீன காலம்
[தொகு]நவீன கால யூதர்களை ஆய்வு செய்யும் வரலாற்றாளர்கள் ஐரோப்பிய யூதர்கள் "நவீனமயமாக்கப்பட்ட" நான்கு வெவ்வேறு பாதைகளை அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறாக பெரும்பான்மை நடைமுறை வழக்கிலிருந்து ஐரோப்பிய சமூகத்திற்குள் யூதர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அரசியல் ரீதியாக சம உரிமை அளிக்கப்படுவது குறித்த உறுதி மற்றும் சவால்களை யூதர்கள் எதிர் கொண்டிருந்ததால் ஐரோப்பிய அறிவொளிக் காலத்தின் கண்ணாடி வழியாக இச்செயல்முறையை பார்ப்பது என்பது ஒரு பொதுவான அணுகுமுறையாக உள்ளது. கெட்டோ அமைப்பு வீழ்ச்சியடைவதற்கு வழி வகுத்த யூத பாரம்பரியத்தின் வீழ்ச்சி மற்றும் யூதப் பண்பாட்டில் பெருமளவு மாற்றங்களுக்கான முகவர்களாக உள்ள எடுத்துக்காட்டுகளாக இரு சமூக பிரிவுகள் மீது இந்த அணுகுமுறையை பயன்படுத்தும் அறிஞர்கள் கவனம் கொண்டுள்ளனர். இந்த இரு சமூக பிரிவுகளில் முதலானவர்கள் அரசவை யூதர்கள் ஆவர். நவீன கால யூதர்களுக்கு இவர்களே முன்னோடியாக குறிப்பிடப்படுகின்றனர். ஆப்சுபர்க்கு பேரரசு போன்ற நடு ஐரோப்பிய அரசுகளின் ஆதி-மூலதன பொருளாதாரம் மற்றும் அரசவை சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது மற்றும் பங்களிப்பை அடைந்தவர்களாக இவர்கள் திகழ்ந்தனர். பல இன பண்பாட்டில் இணைந்த அரசவை யூதர்களுக்கு மாறாக, நவீன யூதர்களை ஆராய்ச்சி செய்யும் வரலாற்றாளர்களால் முன் வைக்கப்படும் இரண்டாவது சமூகப் பிரிவினர் மசுகில் (கற்றறிந்த நபர்) ஆவர். இவர்கள் அசுகலாவைத் (அறிவொளிக் காலம்) தொடங்கியவர்களாக கருதப்படுகின்றனர். சமயச் சார்பற்ற புலமையை மசுகில் பின் தொடர்ந்தது மற்றும் அவர்கள் பகுத்தறிவுடன் மதகுரு சார்ந்த யூத பாரம்பரியத்தை விமர்சித்தது ஆகிய செயல்பாடுகளை யூத சமூகம் மற்றும் பண்பாட்டை சமயச் சார்பற்றதாக ஆக்குவதற்காக ஒரு நீடித்த சிந்தனை சார் அடித்தளத்தை நிறுவியதாக இந்த விளக்கமுறையானது காண்கிறது. "அதிகப்படியாக வகைப்படுத்தப்படாத, செருமானியமயமாக்கப்பட்ட யூத சிந்தனைசார் அறிஞர்களால்" தலைமை தாங்கப்பட்ட மேற்கத்தியமயமாக்கப்படும் ஒரு சுய கவலையுடைய செயல்முறையின் வழியாக நவீனத்திற்குள் யூதர்கள் நுழைந்தனர் என்பது நிறுவப்பட்ட எடுத்துக்காட்டாக உள்ளது. அசுகலாவானது சீர்திருத்தம் மற்றும் பழமைவாத இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமானது. சியோனியத்தின் விதைகளை விதைத்தது. அதே நேரத்தில் யூதர்கள் வாழ்ந்த நாடுகளுக்குள் பண்பாட்டு இணைவை ஊக்குவித்தது.[168] அசுகலா வளர்ந்து வந்த அதே நேரம் வாக்கில் அசிதிய யூதமானது ஓர் இயக்கமாக பரவியது. அசுகாலாவுக்கு கிட்டத்தட்ட முற்றிலும் மாறான ஓர் உலகப் பார்வையை இது போதித்தது.
1990-களில் ஐரோப்பிய அசுகலாவிலிருந்து வேறுபட்டிருந்த, "நவீனமயமாக்கலுக்கான மாற்றுப் பாதையாக" "அரசவை யூதர்" என்ற கருத்துருவானது பரிந்துரைக்கப்பட்டது. அசுகனாசிய செருமானியமயமாக்கப்பட்ட யூதர்கள் மீது குவிக்கப்பட்ட கவனத்திற்கு மாறாக, அரசவை யூதர் கருத்துருவானது மதம் மாறிய செபராது யூதர்கள் மீது கவனம் செலுத்தியது. திரிபுக் கொள்கை விசாரணையிலிருந்து இவர்கள் தப்பித்தவர்கள் ஆவர். நடு நிலக் கடல் மற்றும் அத்திலாந்திக்கின் ஐரோப்பிய துறைமுக நகரங்களிலும், ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலும் இவர்கள் குடியமர்ந்தனர்.[169]
அரசவை யூதர்கள்
[தொகு]வட்டிக்குப் பணம் கொடுத்த மற்றும் கிறித்தவ ஐரோப்பிய உயர் குடியினக் குடும்பங்களில் சிலவற்றின் நிதி விவகாரங்களைக் கையாண்ட யூத வங்கியாளர்கள் அல்லது வணிகர்கள் அரசவை யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். யூத பைலிப் மற்றும் இசுதத்லான் ஆகியவை இவர்களுடன் தொடர்புடைய வரலாற்று ரீதியிலான சொற்களாகும்.
குறுகிய கால கடன்களுக்காக யூத வங்கியாளர்களின் சேவையை உள்ளூர் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய போது பிற்காலத்தில் அரசவை யூதர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் எடுத்துக்காட்டுகள் உருவாயினர். இவர்கள் உயர் குடியினருக்கு கடன் வழங்கினர். இச்செயல்முறையில் சமூக செல்வாக்கைப் பெற்றனர். அரசவை யூதர்களின் உயர்குடியின புரவலர்கள் இவர்களை நிதியாளர்கள், வழங்குநர்கள், தூதர்கள் மற்றும் வணிகக் குழுவினராக பணியில் அமர்த்தினர். பிற பொருட்கள், உணவு, ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள் ஆகியவற்றை தங்களது புரவலருக்கு வழங்குவதற்காக அரசவை யூதர்கள் தங்களது குடும்ப தொடர்புகள், பிற யூதர்களுக்கும் தமக்கும் இடையிலான தொடர்புகளை பயன்படுத்த முடிந்தது. இவர்களின் சேவைகளுக்கு மாற்றாக அரசவை யூதர்கள் சமூக மதிப்புகளை பெற்றனர். தங்களுக்கு தாமே உயர்குடியினர் வரையிலான நிலையை பெற்றதும் இதில் அடங்கும். யூத கெட்டோக்களுக்கு வெளியில் இவர்களால் வாழ முடிந்தது. சில உயர் குடியினர் தங்களது வங்கியாளர்களை தங்களது சொந்த அரசவையில் வைத்துக் கொள்ள விரும்பினர். உயர்குடியின பாதுகாப்பின் கீழ் இருந்ததால் யூத மத குருமார்களின் நீதி வரம்பிலிருந்து இவர்கள் விலக்கு பெற்றிருந்தனர்.
நடுக்காலங்களிலிருந்து அரசவை யூதர்களால் பெருமளவு தனிநபர் செல்வங்களை ஈட்டவும், அரசியல் மற்றும் சமூக செல்வாக்கைப் பெறவும் முடிந்தது. சில நேரங்களில் இவர்கள் உள்ளூர் சமூகத்தில் முக்கியமான நபர்களாகத் திகழ்ந்தனர். தங்களுடைய சக யூதர்களைப் பாதுகாக்கவும், அவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தவும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்த இவர்களால் முடிந்தது. சில நேரங்களில் உள்ளூர் உயர் சமூகத்துடன் கருத்துக்களைப் பரிமாறும் ஒரே யூதர்களாக இவர்கள் திகழ்ந்தனர். யூதர்களின் கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் முன் வைக்கக் கூடியவர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர். எனினும், அரசவை யூதர்கள் கிறித்தவ உலகில் சமூகத் தொடர்புகள் மற்றும் செல்வாக்கை முதன்மையாக தங்களது கிறித்தவ புரவலர்களின் வழியாகக் கொண்டிருந்தனர். யூதர்களின் பாதுகாப்பற்ற நிலை காரணமாக சில உயர் குடியினர் தாங்கள் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் அப்படியே விட்டு விடும் நிலையும் இருந்தது. இவர்களுக்கு ஆதரவளித்த உயர்குடியின நபர் இறந்தால், அவரது யூத நிதியாளர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுதல் அல்லது மரண தண்டனைக்கு உட்படுத்தப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படலாம் என்ற நிலை இருந்தது என்று குறிப்பிடப்படுகிறது.[சான்று தேவை]
துறைமுக யூதர்கள்
[தொகு]துறைமுக யூதர் என்பது ஐரோப்பாவின் கடல்சார் பொருளாதாரத்தில் ஈடுபட்டிருந்த யூதர்களை விளக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகும். குறிப்பாக, 17-ஆம் மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளின் போது இச்சொல் பயன்பாட்டில் இருந்தது. எலன் பிரை என்ற பிரித்தானிய வரலாற்றாளர் "முதல் நவீன யூதர்கள்" என்று இவர்கள் கருதப்படலாம் என்று பரிந்துரைக்கிறார். பிரையின் கூற்றுப்படி துறைமுக யூதர்கள் "திரிபுக் கொள்கை விசாரணையின் அகதிகள்" மற்றும் ஐபீரியாவிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டது ஆகியவற்றின் விளைவாக தொடர்ந்து வந்தவர்கள் ஆவர். ஆம்சுடர்டாம், இலண்டன், திரியேத்தே மற்றும் அம்பர்க்கு போன்ற துறைமுகங்களில்வணிகம் செய்ய வணிகர்கள் இவர்களுக்கு அனுமதி வழங்கியதால் துறைமுக நகரங்களில் இவர்கள் குடியமர அனுமதிக்கப்பட்டனர். புலம் பெயர்ந்த யூதர்களுடனான இவர்களது தொடர்புகள் மற்றும் கடல்சார் வணிகத்தில் இவர்களின் நிபுணத்துவம் ஆகியவை ஐரோப்பாவின் ஏற்றுமதி சார் அரசாங்கங்களுக்கு குறிப்பாக மதிப்பு மிக்கவர்களாக இவர்களை ஆக்கியதாக பிரை குறிப்பிடுகிறார்.[169] அமெரிக்க வரலாற்றாளர் லோயிசு துபின் "தாங்கள் வாழ்ந்த நகரங்கள் செழிப்படைவவதற்கு காரணமான பன்னாட்டு கடல்சார் வாணிபத்தில் தங்களது ஈடுபாட்டிற்காக மதிப்பு பாராட்டப்பட்ட" யூத வணிகர்களை துறைமுக யூதர்கள் என்று வரையறுக்கிறார்.[170] சமயம் குறித்த தங்களது நெகிழ்வுத் தன்மை, மற்றும் "பாரம்பரிய மற்றும் அறிவொளி பெற்ற 'யூத அடையாளங்கள்' ஆகிய இரண்டிலுமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்த தயக்கம் காட்டும் பல இன பண்பாடு" ஆகியவற்றால் குறிக்கப்பட்டவர்களாக இந்த நபர்களின் சமூக பண்பாட்டு விவர அறிக்கையை சோர்க்கின் என்ற அமெரிக்க திரைப்பட இயக்குனர் மற்றும் பிறர் குறிப்பிடுகின்றனர்.
16-ஆம் மற்றும் 18-ஆம் நூற்றாண்டு வரை சாக்லேட் மற்றும் வெனில்லா வணிகத்தில் யூத வணிகர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஐரோப்பா முழுவதும் இருந்த யூத மையங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். முதன்மையாக ஆம்ஸ்டர்டாம், பயோன், போர்தியக்சு, அம்பர்க்கு மற்றும் லிவோர்னோ ஆகிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்தனர்.[171]
உதுமானியப் பேரரசு
[தொகு]உதுமானியப் பேரரசின் காலத்தின் போது (1300-1600) பேரரசின் பல பிற சமூகங்களுடன் சேர்த்து யூதர்களும் ஓரளவுக்கு செழிப்பான நிலையில் இருந்தனர். பிற உதுமானிய குடிமக்களுடன் ஒப்பிடும் போது வணிகத்தில் முதன்மையானவர்களாவும், தூதரகம் மற்றும் பிற உயர் பதவிகளையும் யூதர்கள் வகித்து வந்தனர். 16-ஆம் நூற்றாண்டில் குறிப்பாக, மில்லத்துகளுக்குக் (தனித்து இயங்கும் நீதிமன்றங்கள்) கீழ் மிக முக்கியமானவர்களாக யூதர்கள் இருந்தனர். யூத செல்வாக்குக்கு எடுத்துக்காட்டாக நட்சொசு தீவின் சஞ்சக்-பெயாக (ஆளுநர், முசுலிம்களால் மட்டுமே பொதுவாக நிரப்பப்படும் ஒரு நிலை) யோசேப்பு நாசி நியமிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.[172]
யர்முக் யுத்த காலத்தின் போது லெவண்ட் பகுதியானது முசுலிம் ஆட்சிக்குக் கீழ் வந்த போது கைஃபா, சிச்சேம், எபிரோன், ரமலா, காசா, எருசலேம் மற்றும் வடக்கிலிருந்த பல நகரங்களில் 30 யூத சமூகங்கள் வாழ்ந்து வந்தன. சபேத் நகரமானது யூதர்களுக்கு ஓர் ஆன்மீக மையமாக உருவானது. இங்கு தான் சுல்ச்சான் அருச் நூலும், பல கப்பாலிய நூல்களும் தொகுக்கப்பட்டன. முதல் எபிரேய அச்சிடும் எந்திரம், மேற்கு ஆசியாவில் முதல் அச்சிடும் பணியும் 1577-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Finkelstein, Israel; Silberman, Neil Asher (2001). The Bible unearthed: archaeology's new vision of ancient Israel and the origin of its stories (1st Touchstone ed.). New York: Simon & Schuster. ISBN 978-0-684-86912-4.
- 1 2 The Pitcher Is Broken: Memorial Essays for Gosta W. Ahlstrom, Steven W. Holloway, Lowell K. Handy, Continuum, 1 May 1995 பரணிடப்பட்டது ஏப்ரல் 9, 2023 at the வந்தவழி இயந்திரம் Quote: "For Israel, the description of the battle of Qarqar in the Kurkh Monolith of Shalmaneser III (mid-ninth century) and for Judah, a Tiglath-pileser III text mentioning (Jeho-) Ahaz of Judah (IIR67 = K. 3751), dated 734–733, are the earliest published to date."
- 1 2 Broshi, Maguen (2001). Bread, Wine, Walls and Scrolls. Bloomsbury. p. 174. ISBN 978-1-84127-201-6.
- ↑ Faust, Avraham (August 29, 2012). Judah in the Neo-Babylonian Period. Society of Biblical Literature. pp. 1. doi:10.2307/j.ctt5vjz28. ISBN 978-1-58983-641-9.
- ↑ Stökl, Jonathan; Waerzegger, Caroline (2015). Exile and Return: The Babylonian Context. Walter de Gruyter. pp. 7–11, 30, 226.
- ↑ Encyclopaedia Judaica. Vol. 3 (2nd ed.). p. 27.
- ↑ Bang, Peter Fibiger; Scheidel, Walter (2013). The Oxford Handbook of the State in the Ancient Near East and Mediterranean. Oxford University Press. pp. 184–187. ISBN 978-0-19-518831-8.
- ↑ Malamat, Abraham (1976). A History of the Jewish People. Harvard University Press. pp. 223–239. ISBN 978-0-674-39731-6.
- ↑ Zissu, Boaz (2018). "Interbellum Judea 70-132 CE: An Archaeological Perspective". Jews and Christians in the First and Second Centuries: The Interbellum 70‒132 CE. Leiden: Brill. p. 19. ISBN 978-90-04-34986-5. கணினி நூலகம் 988856967.
- ↑ Fahlbusch, Erwin; Bromiley, Geoffrey William (2005). The Encyclopedia of Christianity. Wm. B. Eerdmans. p. 15. ISBN 978-0-8028-2416-5.
- ↑ "Heritage: Civilization and the Jews; The Uses of Adversity." p. 87. Eban, Abba Solomon. "Heritage: Civilization and the Jews." Summit Books Syracuse, New York: 1984. p. 87.
- ↑ Dosick (2007), pp. 59–60.
- ↑ Mosk (2013), p. 143. "Encouraged to move out of the Holy Roman Empire as persecution of their communities intensified during the twelfth and thirteenth centuries, the Ashkenazi community increasingly gravitated toward Poland."
- ↑ Harshav, Benjamin (1999). The Meaning of Yiddish. Stanford: Stanford University Press. p. 6. "From the fourteenth and certainly by the sixteenth century, the centre of European Jewry had shifted to Poland, then ... comprising the Grand Duchy of Lithuania (including today's Byelorussia), Crown Poland, Galicia, the Ukraine and stretching, at times, from the Baltic to the Black Sea, from the approaches to Berlin to a short distance from Moscow."
- ↑ Lewin, Rhoda G. (1979). "Stereotype and reality in the Jewish immigrant experience in Minneapolis". Minnesota History 46 (7): 259. http://collections.mnhs.org/MNHistoryMagazine/articles/46/v46i07p258-273.pdf. பார்த்த நாள்: August 10, 2020.
- ↑ "Jewish Nobel Prize Winners". jinfo.org. Archived from the original on December 24, 2018. Retrieved October 7, 2011.
- ↑ Goodman, Martin, ed. (2004). "Jews and Judaism in the Second Temple Period". The Oxford Handbook of Jewish Studies. Oxford University Press. pp. 36–52. doi:10.1093/oxfordhb/9780199280322.013.0003. ISBN 0-19-928032-0.
- ↑ Goodman, Martin, ed. (2004). "Historiography on the Jews in the 'Talmudic Period' (70–640 ce)". The Oxford Handbook of Jewish Studies. Oxford University Press. pp. 79–114. doi:10.1093/oxfordhb/9780199280322.013.0005. ISBN 0-19-928032-0.
- ↑ Mark Smith in "The Early History of God: Yahweh and Other Deities of Ancient Israel" states "Despite the long regnant model that the Canaanites and Israelites were people of fundamentally different culture, archaeological data now casts doubt on this view. The material culture of the region exhibits numerous common points between Israelites and Canaanites in the Iron I period (c. 1200–1000 BCE). The record would suggest that the Israelite culture largely overlapped with and derived from Canaanite culture... In short, Israelite culture was largely Canaanite in nature. Given the information available, one cannot maintain a radical cultural separation between Canaanites and Israelites for the Iron I period." (pp. 6–7). Smith, Mark (2002) "The Early History of God: Yahweh and Other Deities of Ancient Israel" (Eerdman's)
- ↑ Rendsberg, Gary (2008). "Israel without the Bible". In Frederick E. Greenspahn. The Hebrew Bible: New Insights and Scholarship. NYU Press, pp. 3–5
- ↑ Gnuse, Robert Karl (1997). No Other Gods: Emergent Monotheism in Israel. England: Sheffield Academic Press Ltd. pp. 28, 31. ISBN 1-85075-657-0.
- ↑ Steiner, Richard C. (1997), "Ancient Hebrew", in Hetzron, Robert (ed.), The Semitic Languages, Routledge, pp. 145–173, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-05767-7
- ↑ Levenson 2012, ப. 3.
- 1 2 Dever, William G. (2002). What Did the Biblical Writers Know and When Did They Know It?. Wm. B. Eerdmans. ISBN 978-0-8028-2126-3. p. 99
- ↑ For more about the historicity of Jewish history as it pertains to rabbinic sources, see Klein, Reuven Chaim (2023). "Are historical sections of the Talmud actually historical? Critical tools for understanding historical claims in rabbinic literature". Journal of Philological Pedagogy (Chandler School of Education) 12: 42–75. doi:10.17613/rjp5a-md343. https://www.academia.edu/127965994.
- ↑ Faust 2015, p.476: "While there is a consensus among scholars that the Exodus did not take place in the manner described in the Bible, surprisingly most scholars agree that the narrative has a historical core, and that some of the highland settlers came, one way or another, from Egypt..".
- ↑ Redmount 2001, ப. 61: "A few authorities have concluded that the core events of the Exodus saga are entirely literary fabrications. But most biblical scholars still subscribe to some variation of the Documentary Hypothesis, and support the basic historicity of the biblical narrative."
- ↑ Dever, William (2001). What Did the Biblical Writers Know, and When Did They Know It?. Eerdmans. pp. 98–99. ISBN 3-927120-37-5.
After a century of exhaustive investigation, all respectable archaeologists have given up hope of recovering any context that would make Abraham, Isaac, or Jacob credible "historical figures" [...] archaeological investigation of Moses and the Exodus has similarly been discarded as a fruitless pursuit.
- ↑ Finkelstein, Israel; Naaman, Nadav, eds. (1994). From Nomadism to Monarchy: Archaeological and Historical Aspects of Early Israel. Israel Exploration Society. ISBN 978-1-880317-20-4.
- ↑ Compare: Shaw, Ian; Robert Jameson (2002). Ian Shaw (ed.). A Dictionary of Archaeology (New ed.). Wiley Blackwell. p. 313. ISBN 978-0-631-23583-5. Archived from the original on April 9, 2023. Retrieved November 1, 2020.
The Biblical account of the origins of the people of Israel (principally recounted in Numbers, Joshua and Judges) often conflicts with non-Biblical textual sources and with the archaeological evidence for the settlement of Canaan in the late Bronze Age and early Iron Age. [...] Israel is first textually attested as a political entity in Egyptian texts of the late 13th century BCE and the Egyptologist Donald Redford argues that the Israelites must have been emerging as a distinct group within the Canaanite culture during the century or so prior to this. It has been suggested that the early Israelites were an oppressed rural group of Canaanites who rebelled against the more urbanized coastal Canaanites (Gottwald 1979). Alternatively, it has been argued that the Israelites were survivors of the decline in the fortunes of Canaan who established themselves in the highlands at the end of the late Bronze Age (Ahlstrom 1986: 27). Redford, however, makes a good case for equating the very earliest Israelites with a semi-nomadic people in the highlands of central Palestine whom the Egyptians called Shasu (Redford 1992:2689–80; although see Stager 1985 for strong arguments against the identification with the Shasu). These Shasu were a persistent thorn in the side of the Ramessid pharaohs' empire in Syria-Palestine, well-attested in Egyptian texts, but their pastoral lifestyle has left scant traces in the archaeological record. By the end of the 13th century BCE, however, the Shasu/Israelites were beginning to establish small settlements in the uplands, the architecture of which closely resembles contemporary Canaanite villages.
- ↑ Killebrew, Ann E. (2005). Biblical Peoples and Ethnicity: An Archeological Study of Egyptians, Canaanites, Philistines, and Early Israel, 1300–1100 B.C.E. Atlanta: Society of Biblical Literature. p. 176. ISBN 978-1-58983-097-4. Archived from the original on January 17, 2023. Retrieved August 12, 2012.
Much has been made of the scarcity of pig bones at highland sites. Since small quantities of pig bones do appear in Late Bronze Age assemblages, some archaeologists have interpreted this to indicate that the ethnic identity of the highland inhabitants was distinct from Late Bronze Age indigenous peoples (see Finkelstein 1997, 227–230). Brian Hesse and Paula Wapnish (1997) advise caution, however, since the lack of pig bones at Iron I highland settlements could be a result of other factors that have little to do with ethnicity.
- ↑ Thomas, Zachary (April 22, 2016). "Debating the United Monarchy: Let's See How Far We've Come". Biblical Theology Bulletin 46 (2): 59–69. doi:10.1177/0146107916639208. பன்னாட்டுத் தர தொடர் எண்:0146-1079. http://dx.doi.org/10.1177/0146107916639208.
- ↑ Lipschits, Oded (2014). "The history of Israel in the biblical period". In Berlin, Adele; Brettler, Marc Zvi (eds.). The Jewish Study Bible (in ஆங்கிலம்) (2nd ed.). Oxford University Press. pp. 2107–2119. ISBN 978-0-19-997846-5. Archived from the original on April 9, 2023. Retrieved August 19, 2022.
As this essay will show, however, the premonarchic period long ago became a literary description of the mythological roots, the early beginnings of the nation and the way to describe the right of Israel on its land. The archeological evidence also does not support the existence of a united monarchy under David and Solomon as described in the Bible, so the rubric of "united monarchy" is best abandoned, although it remains useful for discussing how the Bible views the Israelite past. [...] Although the kingdom of Judah is mentioned in some ancient inscriptions, they never suggest that it was part of a unit comprised of Israel and Judah. There are no extrabiblical indications of a united monarchy called "Israel."
- ↑ Wright, Jacob L. (July 2014). "David, King of Judah (Not Israel)". The Bible and Interpretation. Archived from the original on March 1, 2021. Retrieved May 15, 2021.
- ↑ Grabbe, Lester L. (April 28, 2007). Ahab Agonistes: The Rise and Fall of the Omri Dynasty. Bloomsbury. ISBN 978-0-567-25171-8. Retrieved August 19, 2022.
The Tel Dan inscription generated a good deal of debate and a flurry of articles when it first appeared, but it is now widely regarded (a) as genuine and (b) as referring to the Davidic dynasty and the Aramaic kingdom of Damascus.
- ↑ Cline, Eric H. (September 28, 2009). Biblical Archaeology: A Very Short Introduction. Oxford University Press. ISBN 978-0-19-971162-8. Retrieved August 19, 2022.
Today, after much further discussion in academic journals, it is accepted by most archaeologists that the inscription is not only genuine but that the reference is indeed to the House of David, thus representing the first allusion found anywhere outside the Bible to the biblical David.
- ↑ Mykytiuk, Lawrence J. (January 1, 2004). Identifying Biblical Persons in Northwest Semitic Inscriptions of 1200-539 B.C.E. Society of Biblical Lit. ISBN 978-1-58983-062-2.
Some unfounded accusations of forgery have had little or no effect on the scholarly acceptance of this inscription as genuine.
- ↑ "Who Was the First King of Israel?". Shop Israel (in ஆங்கிலம்). Retrieved February 5, 2025.
- ↑ Finkelstein & Silberman 2002, ப. 146-147, Put simply, while Judah was still economically marginal and backward, Israel was booming. ... In the next chapter we will see how the northern kingdom suddenly appeared on the ancient Near Eastern stage as a major regional power.
- ↑ Finkelstein, Israel. The forgotten kingdom : the archaeology and history of Northern Israel. p. 74. ISBN 978-1-58983-910-6. கணினி நூலகம் 949151323.
- ↑ Finkelstein, Israel (2013). The Forgotten Kingdom: the archaeology and history of Northern Israel. pp. 65–66, 73, 78, 87–94. ISBN 978-1-58983-911-3. கணினி நூலகம் 880456140.
- ↑ Finkelstein, Israel (November 1, 2011). "Observations on the Layout of Iron Age Samaria". Tel Aviv 38 (2): 194–207. doi:10.1179/033443511x13099584885303. பன்னாட்டுத் தர தொடர் எண்:0334-4355. https://doi.org/10.1179/033443511x13099584885303.
- ↑ Ben-Sasson, Haim Hillel, ed. (1976). A History of the Jewish People. Harvard University Press. p. 142. ISBN 978-0-674-39731-6.
Sargon's heir, Sennacherib (705–681), could not deal with Hezekiah's revolt until he gained control of Babylon in 702 BCE.
- ↑ Kelle 2005, ப. 9.
- ↑ Brettler 2010, ப. 161–162.
- ↑ Radine 2010, ப. 71–72.
- ↑ Rogerson 2003a, ப. 690.
- ↑ O'Brien 2002, ப. 14.
- ↑ Gelston 2003c, ப. 715.
- ↑ Rogerson 2003b, ப. 154.
- ↑ Campbell & O'Brien 2000, ப. 2 and fn.6.
- ↑ Gelston 2003a, ப. 710.
- 1 2 3 4 5 6 Bickerman, E. J. (January 1, 2007), "Nebuchadnezzar And Jerusalem", Studies in Jewish and Christian History (2 vols), Brill, pp. 961–974, doi:10.1163/ej.9789004152946.i-1242.280, ISBN 978-90-474-2072-9, retrieved July 1, 2024
- ↑ Galil, Gershon (1991). "The Babylonian Calendar and the Chronology of the Last Kings of Judah". Biblica 72 (3): 367–378. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-0887. https://www.jstor.org/stable/42611193. "All the scholars, without exception, establish the date of the surrender of Jehoiachin, king of Judah, as the second day of Adar, the seventh year of Nebuchadnezzar II, king of Babylon (March 16, 597 BC), following the Babylonian chronicle ... This unique date is undoubtedly the most precise in Israelite history during the biblical period.".
- ↑ "British Museum – Cuneiform tablet with part of the Babylonian Chronicle (605–594 BCE)". Archived from the original on October 30, 2014. Retrieved October 30, 2014.
- ↑ "ABC 5 (Jerusalem Chronicle) – Livius". www.livius.org. Archived from the original on May 5, 2019. Retrieved March 26, 2020.
- ↑ Shalom, N.; Vaknin, Y.; Shaar, R.; Ben-Yosef, E.; Lipschits, O.; Shalev, Y.; Gadot, Y.; Boaretto, E. (2023). "Destruction by fire: Reconstructing the evidence of the 586 BCE Babylonian destruction in a monumental building in Jerusalem". Journal of Archaeological Science 157. doi:10.1016/j.jas.2023.105823. Bibcode: 2023JArSc.157j5823S. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0305440323001036.
- 1 2 3 4 Bedford, Peter Ross (2001), "Introduction", Temple Restoration in Early Achaemenid Judah, Brill, pp. 1–39, doi:10.1163/9789004498051_004, ISBN 978-90-04-49805-1, retrieved July 1, 2024
- 1 2 Bedford, Peter Ross (January 1, 2001), "Living Without the Jerusalem Temple—In Judah and Babylonia", Temple Restoration in Early Achaemenid Judah, Brill, p. 42, doi:10.1163/9789004498051_005, ISBN 978-90-04-49805-1, retrieved July 1, 2024
- 1 2 "Second Temple Period (538 BCE. to 70 CE) Persian Rule". Biu.ac.il. Retrieved March 15, 2014.
- ↑ Harper's Bible Dictionary, ed. by Achtemeier, etc., Harper & Row, San Francisco, 1985, p. 103
- ↑ Yehud being the Aramaic equivalent of the Hebrew Yehuda, or "Judah", and "medinata" the word for province
- ↑ Grabbe, Lester L. (2004). A History of the Jews and Judaism in the Second Temple Period: Yehud – A History of the Persian Province of Judah. Vol. 1. T&T Clark. p. 355. ISBN 978-0-567-08998-4.
- ↑ Lipschits, Oded (March 18, 2024), "Between Archaeology and Text: A Reevaluation of the Development Process of Jerusalem in the Persian Period", Judah in the Biblical Period, De Gruyter, p. 374, doi:10.1515/9783110487442-020, ISBN 978-3-11-048744-2, retrieved July 1, 2024
- ↑ Finkelstein, Israel; Silberman, Neil Asher (2001). The Bible unearthed: archaeology's new vision of ancient Israel and the origin of its stories (1st Touchstone ed.). New York: Simon & Schuster. ISBN 0-684-86912-8.
- ↑ Frei 2001, ப. 6.
- ↑ Romer 2008, ப. 2 and fn.3.
- ↑ Jerusalem Bible (1966), Haggai, Zechariah, Malachi in Introduction to the Prophets, London: Darton, Longman & Todd, pp. 1138–1140
- ↑ Atkinson, Kenneth (2016). A History of the Hasmonean State: Josephus and Beyond. T&T Clark Jewish and Christian texts series. London; New York: T&T Clark. pp. 2, 23–28. ISBN 978-0-567-66902-5. கணினி நூலகம் 949219870.
- ↑ See:
- William David Davies. The Hellenistic Age. Volume 2 of Cambridge History of Judaism. Cambridge University Press, 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-21929-7. pp. 292–312.
- Jeff S. Anderson. The Internal Diversification of Second Temple Judaism: An Introduction to the Second Temple Period. University Press of America, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7618-2327-8. pp. 37–38.
- Howard N. Lupovitch. Jews and Judaism in World History. Taylor & Francis. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-46205-1. pp. 26–30.
- ↑ Charlesworth, James H. (2008). The Historical Jesus: An Essential Guide. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4267-2475-6
- ↑ Josephus, Antiquities of the Jews, livre XVIII, § V, 4, (132).
- ↑ Jensen, M. H. (2014). The Political History in Galilee from the First Century BCE to the end of the Second Century CE. Galilee in the late Second Temple and Mishnaic periods. Volume 1. Life, culture and society, pp. 69-70. "According to Jewish War, Vespasian laid siege to and conquered all the major strongholds of Galilee [...] Since the entire campaign was short and lasted only for some months in the spring and summer of 67, there is no reason to believe that Galilee was entirely devastated when the Romans set their course south. However, the places that were conquered, were in a typical Roman fashion levelled more or less to the ground and many people sold of as slaves.
- ↑ Weksler-Bdolah, Shlomit (2019). Aelia Capitolina – Jerusalem in the Roman period: in light of archaeological research. Brill. p. 3. ISBN 978-90-04-41707-6. கணினி நூலகம் 1170143447.
The historical description is consistent with the archeological finds. Collapses of massive stones from the walls of the Temple Mount were exposed lying over the Herodian street running along the Western Wall of the Temple Mount. The residential buildings of the Ophel and the Upper City were destroyed by great fire. The large urban drainage channel and the Pool of Siloam in the Lower City silted up and ceased to function, and in many places the city walls collapsed. [...] Following the destruction of Jerusalem by the Romans in 70 CE, a new era began in the city's history. The Herodian city was destroyed and a military camp of the Tenth Roman Legion established on part of the ruins.
- ↑ Reich, Ronny (2009). "The Sack of Jerusalem in 70 CE: Flavius Josephus' Description and the Archaeological Record". Cathedra: For the History of Eretz Israel and Its Yishuv (131): 25–42. பன்னாட்டுத் தர தொடர் எண்:0334-4657.
- ↑ Huitink, Luuk. "Between Triumph and Tragedy: Josephus, Bellum Judaicum 7.121–157." Reading Greek, Hellenistic and Roman spolia. Objects, appropriation and cultural change, Euhormos: Greco-Roman Studies in Anchoring Innovation. Leiden: Brill (2023). pp. 215–216, 234
- ↑ Overman, J. Andrew; Overman, J. Andrew (September 2, 2003). "The First Revolt and Flavian politics". The First Jewish Revolt. Routledge. doi:10.4324/9780203167441. ISBN 978-1-134-51832-6.
- ↑ Herr, Moshe David (1984). Shtern, Menahem (ed.). The History of Eretz Israel: The Roman Byzantine period: the Roman period from the conquest to the Ben Kozba War (63 B.C.E-135 C.E.). Jerusalem: Yad Izhak Ben-Zvi. p. 288.
- ↑ Maclean Rogers, Guy (2021). For the Freedom of Zion: The Great Revolt of Jews against Romans, 66–74 CE. New Haven and London: Yale University Press. pp. 3–5. ISBN 978-0-300-26256-8. கணினி நூலகம் 1294393934.
- ↑ Neusner, Jacob (November 28, 2017), Hinnells, John (ed.), "Judaism in a Time of Crisis: Four Responses to the Destruction of the Second Temple", Neusner on Judaism, Routledge, pp. 399–413, doi:10.4324/9781351152761-20, ISBN 978-1-351-15276-1, retrieved May 22, 2022
- 1 2 Karesh, Sara E. (2006). Encyclopedia of Judaism. Facts On File. ISBN 978-1-78785-171-9. கணினி நூலகம் 1162305378.
Until the modern period, the destruction of the Temple was the most cataclysmic moment in the history of the Jewish people. Without the Temple, the Sadducees no longer had any claim to authority, and they faded away. The sage Yochanan ben Zakkai, with permission from Rome, set up the outpost of Yavneh to continue develop of Pharisaic, or rabbinic, Judaism.
- 1 2 Stemberger, Guenter (2003), Neusner, Jacob; Avery-Peck, Alan J. (eds.), "The Formation of Rabbinic Judaism, 70–640 CE", The Blackwell Companion to Judaism (in ஆங்கிலம்) (1 ed.), Wiley, pp. 78–79, doi:10.1002/9780470758014.ch5, ISBN 978-1-57718-058-6, retrieved July 2, 2024
- ↑ Katz, Steven T., ed. (2006). The Cambridge History of Judaism: Volume 4: The Late Roman-Rabbinic Period. Vol. 4. Cambridge University Press. p. 268. doi:10.1017/chol9780521772488. ISBN 978-0-521-77248-8.
Under the leadership of R. Yohanan ben Zakkai and his circle at Yavneh, Judaism sought to reconstitute itself and find a new equilibrium in the face of the disaster of 70.
- ↑ Neusner, Jacob (September 26, 2016). "The Formation of Rabbinic Judaism: Yavneh (Jamnia) from A.D. 70 to 100". In Haase, Wolfgang (ed.). Religion (Judentum: Palästinisches Judentum [Forts.]) (in ஜெர்மன்). De Gruyter. pp. 3–42. doi:10.1515/9783110839043-002. ISBN 978-3-11-083904-3.
- ↑ Cohen, Shaye J. D. (1984). "The Significance of Yavneh: Pharisees, Rabbis, and the End of Jewish Sectarianism". Hebrew Union College Annual 55: 29. பன்னாட்டுத் தர தொடர் எண்:0360-9049. https://www.jstor.org/stable/23507609. "The goal was not the triumph over other sects but the elimination of the need for sectarianism itself. [...] The destruction of the temple provided the impetus for this process: it warned the Jews of the dangers of internal divisiveness and it removed one of the major focal points of Jewish sectarianism.".
- ↑ Magness, Jodi (2011). "Sectarianism before and after 70 CE". In Schwartz, Daniel R.; Weiss, Zeev (eds.). Was 70 CE a Watershed in Jewish History?: On Jews and Judaism before and after the Destruction of the Second Temple. Brill. ISBN 978-90-04-21744-7.
- ↑ Erich S. Gruen, Diaspora: Jews Amidst Greeks and Romans Harvard University Press, 2009 pp. 3–4, 233–234: 'Compulsory dislocation, .…cannot have accounted for more than a fraction of the diaspora. … The vast bulk of Jews who dwelled abroad in the Second Temple Period did so voluntarily.' (2)' .Diaspora did not await the fall of Jerusalem to Roman power and destructiveness. The scattering of Jews had begun long before-occasionally through forced expulsion, much more frequently through voluntary migration.'
- 1 2 3 Goodman, Martin (2018). A History of Judaism. Princeton Oxford: Princeton University Press. pp. 21, 232. ISBN 978-0-691-18127-1.
- ↑ Baker, Luke (February 3, 2017). "Ancient tablets reveal life of Jews in Nebuchadnezzar's Babylon". Reuters. https://www.reuters.com/article/us-israel-archaeology-babylon-idUSKBN0L71EK20150203.
- ↑ Zadok R. Judeans in Babylonia–Updating the Dossier. in U. Gabbay and Sh. Secunda. (eds.). Encounters by the Rivers of Babylon: Scholarly Conversations between Jews, Iranians and Babylonians in Antiquity, Texts and Studies in Ancient Judaism 160. Tübingen: MohrSiebeck. pp. 109–110.
- ↑ Josephus Flavius, Against Appion. 4.II
- ↑ Smallwood, E. Mary (1984). "The Diaspora in the Roman period before AD 70". In William David Davies; Louis Finkelstein; William Horbury (eds.). The Cambridge History of Judaism: The early Roman period, Volume 3. Cambridge University Press. ISBN 978-0-521-24377-3.
- 1 2 3 4 5 מרדכי וורמברנד ובצלאל ס רותת "עם ישראל – תולדות 4000 שנה – מימי האבות ועד חוזה השלום", ע"מ 95. (Translation: Mordechai Vermebrand and Betzalel S. Ruth – "The People of Israel – the history of 4000 years – from the days of the Forefathers to the Peace Treaty", 1981, p. 95)
- 1 2 3 Kerkeslager, Allen; Setzer, Claudia; Trebilco, Paul; Goodblatt, David (2006), Katz, Steven T. (ed.), "The Diaspora from 66 to c. 235 ce", The Cambridge History of Judaism: Volume 4: The Late Roman-Rabbinic Period, The Cambridge History of Judaism, vol. 4, Cambridge: Cambridge University Press, pp. 62–63, doi:10.1017/chol9780521772488.004, ISBN 978-0-521-77248-8, retrieved September 10, 2024
- 1 2 Zeev, Miriam Pucci Ben (June 22, 2006), Katz, Steven T. (ed.), "The uprisings in the Jewish Diaspora, 116–117", The Cambridge History of Judaism (1 ed.), Cambridge University Press, p. 98, doi:10.1017/chol9780521772488.005, ISBN 978-1-139-05513-0, retrieved September 8, 2024
- 1 2 Zeev, Miriam Pucci Ben (June 22, 2006), Katz, Steven T. (ed.), "The uprisings in the Jewish Diaspora, 116–117", The Cambridge History of Judaism (1 ed.), Cambridge University Press, pp. 93–106, doi:10.1017/chol9780521772488.005, ISBN 978-1-139-05513-0, retrieved September 8, 2024
- ↑ Smallwood, E. Mary (1976). The Jews under Roman Rule from Pompey to Diocletian. SBL Press. pp. 394–397. ISBN 978-90-04-50204-8.
- ↑ Horbury, William (2014). Jewish War under Trajan and Hadrian. Cambridge University Press. p. 276. ISBN 978-1-139-04905-4.
- ↑ Barclay, John M. G. (1998). Jews in the Mediterranean Diaspora: from Alexander to Trajan (323 BCE–117 CE). Edinburgh: T&T Clark. p. 241. ISBN 978-0-567-08651-8.
- 1 2 3 4 Eck, Werner (July 30, 2015), "Bar Kokhba", Oxford Classical Dictionary, doi:10.1093/acrefore/9780199381135.013.1056, ISBN 978-0-19-938113-5, retrieved July 2, 2024
- 1 2 Eck, Werner (1999). "The Bar Kokhba Revolt: The Roman Point of View". The Journal of Roman Studies 89: 76, 80. doi:10.2307/300735. பன்னாட்டுத் தர தொடர் எண்:1753-528X. https://www.cambridge.org/core/journals/journal-of-roman-studies/article/abs/bar-kokhba-revolt-the-roman-point-of-view/27E95F52A627562F93178F17A51D5FD4.
- 1 2 Raviv, Dvir; David, Chaim Ben (2021). "Cassius Dio's figures for the demographic consequences of the Bar Kokhba War: Exaggeration or reliable account?" (in en). Journal of Roman Archaeology 34 (2): 585–607. doi:10.1017/S1047759421000271. பன்னாட்டுத் தர தொடர் எண்:1047-7594.
- ↑ Jones, A. H. M. (1971). The Cities of the Eastern Roman Provinces (2nd ed.). Oxford. p. 277.
This provoked the last Jewish war, which seems from our meager accounts [...] to have resulted in the desolation of Judaea and the practical extermination of its Jewish population.
- ↑ Mor 2016, ப. 483–484: "Land confiscation in Judaea was part of the suppression of the revolt policy of the Romans and punishment for the rebels. But the very claim that the sikarikon laws were annulled for settlement purposes seems to indicate that Jews continued to reside in Judaea even after the Second Revolt. There is no doubt that this area suffered the severest damage from the suppression of the revolt. Settlements in Judaea, such as Herodion and Bethar, had already been destroyed during the course of the revolt, and Jews were expelled from the districts of Gophna, Herodion, and Aqraba. However, it should not be claimed that the region of Judaea was completely destroyed. Jews continued to live in areas such as Lod (Lydda), south of the Hebron Mountain, and the coastal regions. In other areas of the Land of Israel that did not have any direct connection with the Second Revolt, no settlement changes can be identified as resulting from it."
- ↑ Hanan Eshel, 'The Bar Kochba revolt, 132-135,' in William David Davies, Louis Finkelstein, Steven T. Katz (eds.) The Cambridge History of Judaism: Volume 4, The Late Roman-Rabbinic Period, pp. 105-127, p. 105.
- ↑ Eshel, Hanan (2006). "4: The Bar Kochba Revolt, 132 – 135". In T. Katz, Steven (ed.). The Cambridge History of Judaism. Vol. 4. The Late Roman-Rabbinic Period. Cambridge. pp. 105–127. ISBN 978-0-521-77248-8. கணினி நூலகம் 7672733.
- ↑ H.H. Ben-Sasson, A History of the Jewish People, Harvard University Press, 1976, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-39731-2, page 334: "In an effort to wipe out all memory of the bond between the Jews and the land, Hadrian changed the name of the province from Judaea to Syria-Palestina, a name that became common in non-Jewish literature."
- ↑ Ariel Lewin. The archaeology of Ancient Judea and Palestine. Getty Publications, 2005 p. 33. "It seems clear that by choosing a seemingly neutral name – one juxtaposing that of a neighboring province with the revived name of an ancient geographical entity (Palestine), already known from the writings of Herodotus – Hadrian was intending to suppress any connection between the Jewish people and that land." பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89236-800-4
- ↑ M. Avi-Yonah, The Jews under Roman and Byzantine Rule, Jerusalem 1984 p. 143
- ↑ Grabbe, Lester L. (2010). An Introduction to Second Temple Judaism: History And Religion Of The Jews In The Time Of Nehemiah, The Maccabees, Hillel, And Jesus. Edinburgh: T&T Clark. p. 78. ISBN 978-0-567-55248-8.
It was the total defeat and the massive destruction of the 132–35 war which put paid to any hopes of a revived Jewish state for another 1800 years.
- ↑ Jacobs, Joseph "Zohar". Jewish Encyclopedia.
- ↑ Bernard Lazare and Robert Wistrich, Antisemitism: Its History and Causes, University of Nebraska Press, 1995, I, pp. 46–47.
- ↑ Ammianus Marcellinus, Res Gestae, 23.1.2–3.
- ↑ See "Julian and the Jews 361–363 CE" பரணிடப்பட்டது மே 20, 2012 at the வந்தவழி இயந்திரம் (Fordham University, The Jesuit University of New York) and "Julian the Apostate and the Holy Temple".
- ↑ Falk, Avner (1996). A Psychoanalytic History of the Jews. Fairleigh Dickinson Univ Press. p. 343. ISBN 978-0-8386-3660-2. Retrieved August 3, 2022.
- ↑ Avraham Yaari, Igrot Eretz Yisrael (Tel Aviv, 1943), p. 46.
- ↑ Andrew S. Jacobs (2004). Remains of the Jews: The Holy Land and Christian Empire in Late Antiquity. Stanford University Press. p. 157. ISBN 978-0-8047-4705-9. Retrieved April 19, 2018.
- ↑ Edward Lipiński (2004). Itineraria Phoenicia. Peeters. pp. 542–543. ISBN 978-90-429-1344-8. Archived from the original on April 9, 2023. Retrieved March 11, 2014.
- 1 2 Solomon Gryazel, History of the Jews: From the destruction of Judah in 586 BCE to the present Arab Israeli conflict, p. 137.
- ↑ Codex Judaica, pp. 161–174, Kantor, Zichron Press, NY 2005.
- ↑ [מרדכי וורמברנד ובצלאל ס. רותת "עם ישראל – תולדות 4000 שנה – מימי האבות ועד חוזה השלום", ע"מ 97. (Translation: Mordechai Vermebrand and Betzalel S. Ruth The People of Israel: The History of 4,000 Years, from the Days of the Forefathers to the Peace Treaty, 1981, p. 97)
- ↑ Wendy Mayer and Pauline Allen, John Chrysostom: The Early Church Fathers (London, 2000), pp. 113, 146.
- ↑ Cod., I., v. 12
- ↑ Procopius, Historia Arcana, 28
- ↑ Nov., cxlvi., February 8, 553
- ↑ Procopius, De Aedificiis, vi. 2
- ↑ G. Ostrogorsky, History of the Byzantine State
- ↑ The Oxford History of Byzantium, C. Mango (Ed) (2002)
- ↑ Nathan Katz, Who Are the Jews of India?, பரணிடப்பட்டது ஏப்ரல் 9, 2023 at the வந்தவழி இயந்திரம் University of California Press, 2000 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-92072-9 pp. 13–14, 17–18
- ↑ "Exploring a Forgotten Jewish Land – Archaeology Magazine". www.archaeology.org. Retrieved November 9, 2023.
- ↑ Ehrlich, Mark. Encyclopedia of the Jewish Diaspora: Origins, Experiences, and Culture, Volume 1. ABC-CLIO, 2009, p. 152.(பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85109-873-6)
- 1 2 வார்ப்புரு:Cite EJ
- 1 2 3 4 5 Joseph E. Katz (2001). "Continuous Jewish Presence in the Holy Land". EretzYisroel.Org. Archived from the original on January 25, 2021. Retrieved August 12, 2012.
- ↑ Moshe Gil, A History of Palestine: 634–1099 pp. 170, 220–221.
- ↑ Marina Rustow, Baghdad in the West: Migration and the Making of Medieval Jewish Traditions பரணிடப்பட்டது சூலை 11, 2020 at the வந்தவழி இயந்திரம்
- 1 2 Sephardim பரணிடப்பட்டது செப்டெம்பர் 7, 2012 at the வந்தவழி இயந்திரம் by Rebecca Weiner.
- ↑ Ahmed, M.I. Muslim-Jewish Harmony: A Politically-Contingent Reality. Religions 2022, 13, 535. எஆசு:10.3390/rel13060535
- ↑ Lewis, Bernard W (1984). The Jews of Islam
- 1 2 3 Malamat, Abraham (1976). A History of the Jewish People. Harvard University Press. p. 413. ISBN 978-0-674-39731-6.
- ↑ Malamat, Abraham (1976). A History of the Jewish People. Harvard University Press. p. 416. ISBN 978-0-674-39731-6.
- ↑ David Nirenberg (2002). Gerd Althoff (ed.). Medieval Concepts of the Past: Ritual, Memory, Historiography. Johannes Fried. Cambridge University Press. pp. 279–. ISBN 978-0-521-78066-7.
- ↑ Malamat, Abraham (1976). A History of the Jewish People. Harvard University Press. p. 419. ISBN 978-0-674-39731-6.
- ↑ Malamat, Abraham (1976). A History of the Jewish People. Harvard University Press. pp. 414–. ISBN 978-0-674-39731-6.
- ↑ Sefer HaCharedim Mitzvat Tshuva Chapter 3
- ↑ "Jewish Zionist Education". Jafi.org.il. May 15, 2005. Archived from the original on October 13, 2008. Retrieved August 13, 2012.
- ↑ "Hadrat Melech" (PDF). Archived from the original (PDF) on May 2, 2014. Retrieved April 5, 2010.
- ↑ Benjamin J. Segal. "Section III: The Biblical Age: Chapter Seventeen: Awaiting the Messiah". Returning, the Land of Israel as a Focus in Jewish History. JewishHistory.com. Archived from the original on February 27, 2012. Retrieved August 12, 2012.
- ↑
- ↑ Maurice Roumani, The Case of the Jews from Arab Countries: A Neglected Issue, 1977, pp. 26–27.
- ↑ "Granada". Jewish Encyclopedia. (1906).
- ↑ Mitchell Bard (2012). "The Treatment of Jews in Arab/Islamic Countries". Jewish Virtual Library. Archived from the original on October 7, 2012. Retrieved August 12, 2012.
- ↑ The Forgotten Refugees பரணிடப்பட்டது செப்டெம்பர் 28, 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Rebecca Weiner. "Sephardim". Jewish Virtual Library. Archived from the original on September 7, 2012. Retrieved August 12, 2012.
- ↑ Kraemer, Joel L., "Moses Maimonides: An Intellectual Portrait," The Cambridge Companion to Maimonides, pp. 16–17 (2005)
- ↑ adkim (2014-02-28). "The Biblioteca Palatina and the National Library of Israel". Printed_Matter (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-15.
- ↑ Carroll, James. Constantine's Sword (Houghton Mifflin, 2001) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-395-77927-9 p. 26
- ↑ Wade, Nicholas (May 14, 2002). "In DNA, New Clues to Jewish Roots". The New York Times. Archived from the original on January 26, 2021. Retrieved June 16, 2013.
- 1 2 Norman F. Cantor, The Last Knight: The Twilight of the Middle Ages and the Birth of the Modern Era, Free Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7432-2688-2, pp. 28–29
- ↑ Isenmann, Ebenhard (1999). Bonney, Richard (ed.). The Rise of the Fiscal State in Europe c. 1200–1815. Clarendon Press. p. 259. ISBN 978-0-19-154220-6.
- ↑ Malamat, Abraham (1976). A History of the Jewish People. Harvard University Press. p. 412. ISBN 978-0-674-39731-6.
- ↑ "England" பரணிடப்பட்டது சூலை 30, 2020 at the வந்தவழி இயந்திரம், Jewish Encyclopedia (1906)
- ↑ Mundill, Robin R. (2002). England's Jewish Solution: Experiment and Expulsion, 1262–1290. Cambridge University Press. ISBN 978-0-521-52026-3.
- ↑ "Print of Jews forced to listen to a Christian sermon – Collections Search – United States Holocaust Memorial Museum". collections.ushmm.org. Archived from the original on November 29, 2022. Retrieved March 6, 2023.
- ↑ The Jewish-Christian Encounter in Medieval Preaching, Routledge 2015, edited by Jonathan Adams and Jussi Hanska chapter 13, see page 297
- ↑ European Jewry in the Age of Mercantilism, 1550–1750 by Jonathan Israel, chapter 1 Exodus from the West (page 25)
- ↑ The Jews of Spain by Jane Gerber, Free Press 1994 pp 138 – 144 / Secrecy and Deceit: The Religion of the Crypto-Jews by David Martin Gitlitz, University of New Mexico 2002, pp 75 – 81
- ↑ The Jews of Spain by Jane Gerber, Free Press 1994 pp 142 – 144
- ↑ "Reframing Jewish History". May 2005. Archived from the original on September 30, 2020. Retrieved May 24, 2011.
- 1 2 Fry, Helen P. (2002). "Port Jews: Jewish Communities in Cosmopolitan Maritime Trading Centres, 1550–1950". European Judaism (Frank Cass Publishers) 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7146-8286-0. https://www.questia.com/googleScholar.qst?docId=5002650793. பார்த்த நாள்: September 1, 2017. "Port Jews were a social type, usually those who were involved in seafaring and maritime trade, who (like Court Jews) could be seen as the earliest modern Jews. Often arriving as refugees from the Inquisition, they were permitted to settle as merchants and allowed to trade openly in places such as Amsterdam, London, Trieste and Hamburg. 'Their Diaspora connections and accumulated expertise lay in exactly the areas of overseas expansion that were then of interest to mercantilist governments.'".
- ↑ Dubin, The port Jews of Habsburg Trieste: absolutist politics and enlightenment culture, Stanford University Press, 1999, p. 47
- ↑ Encyclopedia of Jewish Food, Gil Marks, HMH, November 17, 2010
- ↑ Charles Issawi & Dmitri Gondicas; Ottoman Greeks in the Age of Nationalism, Princeton, (1999)
வெளி இணைப்புகள்
[தொகு]- The Jewish History Resource Center. Project of the Dinur Center for Research in Jewish History, The Hebrew University of Jerusalem.
- The State of Israel The Jewish History Resource Center, Project of the Dinur Center for Research in Jewish History, The Hebrew University of Jerusalem
- Jewish History and Culture Encyclopaedia பரணிடப்பட்டது திசம்பர் 24, 2008 at the வந்தவழி இயந்திரம் Official Site of the 22-volume Encyclopaedia Judaica
