யாதவர் கல்லூரி
குறிக்கோளுரை | அறிவே செல்வம் |
---|---|
வகை | தன்னாட்சிபெற்ற கலை, அறிவியல் கல்லூரி |
உருவாக்கம் | 1969 |
நிதிக் கொடை | யாதவர் கல்விநிதி |
முதல்வர் | எசு. தனசேகரன் (பொறுப்பு) |
கல்வி பணியாளர் | 11 |
நிருவாகப் பணியாளர் | 246 |
மாணவர்கள் | 2912 |
அமைவிடம் | , , |
வளாகம் | கோவிந்தராஜன் |
இணையதளம் | www.yadavacollege.org |
யாதவர் கல்லூரி (Yadava College ) என்பது தமிழ் நாட்டில் மதுரையில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற இருபாலர் பயிலும் அரசுதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும்.
அறிவியல் பிரிவு பாடங்கள்[தொகு]
- இயற்பியல்,
- கணிதம்,
- வேதியியல்,
- விலங்கியல்,
- கணினியியல்,
- தகவல் தொழினுட்பம்.
கலைப் பிரிவு பாடங்கள்[தொகு]
- தமிழ்,
- வரலாறு,
- வணிகவியல்.
வரலாறு[தொகு]
பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கல்வியறிவை வளர்க்க, 1969ஆம் யாதவ சமூக மக்களால் யாதவர் கல்லூரி தொடங்கப்பட்டது. 1970ஆம் ஆண்டில் இக்கல்லூரிக்கு தமிழக அரசின் உதவி கிடைத்தது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டுவந்த கல்லூரி 2008ஆம் ஆண்டுமுதல் தன்னாட்சி அதிகாரம் பெற்று பல துறைகளில் பட்டப் படிப்புகளை வழங்கிவருகிறது
அமைவிடம்[தொகு]
இந்தியாவின் தமிழகத்தில், மதுரை மேற்குப் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த திருப்பாலை கிராமத்தில், நத்தம் சாலையில், ஊமச்சிகுளம் அருகே அமைந்துள்ளது.
முதல்வர்கள்[தொகு]
- தி. அ. சொக்கலிங்கம் (1969 முதல் 1978 வரை)
- மு. தமிழ்க்குடிமகன் (1978 முதல் 1989 வரை)
- க. திருவாசகம்
- எசு. தனசேகரன்
- வி.சம்பத்
- பி.அழகேசன்
முன்னாள் மாணவர்கள்[தொகு]
- க. திருவாசகம், சென்னை பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்.