மோகனூர் தொடருந்து நிலையம்
(மோகனூர் தொடர்வண்டி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மோகனூர் | |
---|---|
தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | மோகனூர் இரயில் நிலையம் சாலை, மோகனூர், தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 11°04′08.2″N 78°08′23.9″E / 11.068944°N 78.139972°E |
ஏற்றம் | 123 மீட்டர்கள் (404 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | சேலம்-கரூர் வழித்தடம் |
நடைமேடை | 3 |
இருப்புப் பாதைகள் | 3 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | MONR |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே |
இரயில்வே கோட்டம் | சேலம் |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | மே 2013 |
மின்சாரமயம் | ஆம் |
அமைவிடம் | |
மோகனூர் தொடருந்து நிலையம் (Mohanur Junction railway station, நிலையக் குறியீடு:MONR)[1] ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தில், மோகனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[2] இது கரூர் - சேலம் சந்திப்புக்கு இடையில் புதியதாக 2013 மே மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. இது இந்திய இரயில்வே துறையின், தென்னக இரயில்வே மண்டலத்தில், சேலம் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
முக்கிய தொடருந்துகள்[தொகு]
- சென்னை சென்ட்ரல் - பாலக்காடு (பழனி விரைவுத் தொடருந்து)
- சேலம் - கரூர் பயணிகள் தொடருந்து
- சேலம் - திருச்சிராப்பள்ளி பயணிகள் தொடருந்து
பேருந்து வசதிகள்[தொகு]
பாலக்காடு விரைவுத் தொடருந்து வருகையின் போது பேருந்து நிலையத்திலிருந்து, தொடருந்து நிலையம் வரையும் மற்றும் தொடருந்து நிலையத்திலிருந்து, பேருந்து நிலையம் வரை, பேருந்து வசதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மோகனூர் தொடருந்து நிலையம்".
- ↑ "மோகனூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்". தினமணி (6 மார்ச், 2014)