மொல்லம்பட்டி

ஆள்கூறுகள்: 10°30′00″N 77°32′09″E / 10.499901°N 77.535710°E / 10.499901; 77.535710
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொல்லம்பட்டி
—  வருவாய் கிராமம்  —
மொல்லம்பட்டி
இருப்பிடம்: மொல்லம்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°30′00″N 77°32′09″E / 10.499901°N 77.535710°E / 10.499901; 77.535710
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

755 (2011)

148/km2 (383/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.1177 சதுர கிலோமீட்டர்கள் (1.9760 sq mi)
குறியீடுகள்

மொல்லம்பட்டி (MOLLAMPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம் (ஊர்). [4][5] பழனி வருவாய் வட்டத்தின் இருபத்திமூன்றாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:23) ஆகும்.[6]

அமைவிடம்[தொகு]

பழனியிலிருந்து தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மொல்லம்பட்டி பிரிவிலிருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 521 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொல்லம்பட்டி கிராமத்தில் 202 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 775 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 51.48 %. இதில் 399 பேர் ஆண்கள்; 376 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 1 மட்டும் உள்ளது.[8]

முக்கிய பயிர்[தொகு]

அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகின்றன.

நிருவாக அமைப்பு[தொகு]

கிராமத்தின் தகவல்கள்[தொகு]

வருவாய் கிராமத்தின் புறம்போக்கு நிலம் :

  • குக்கிராமங்களின் எண்ணிக்கை :

இந்த கிராமத்தில் மக்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள் ஆகவே உள்ளனர் எனினும் 0.5001% கிருஸ்துவத்தை தழுவியுள்ளனர். அவர்கள் அனைவரும் பிற்கால குடியேரிகளே. இந்த கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என்றால் படபத்ரகாளியம்மன் கோவில், பெருமாள் கோவில், சூலை கருப்பராயன் கோவில், வீரமாத்தி அம்மன் கோவில், முதலியன. இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம், வீடு கட்டுதல் ஆகும். எனினும் ஒரு காலத்தில் மண்பாண்டத் தொழில் செழித்து இருந்து, பின்னர் காலம் மாற மாற எல்லாம் மறைந்து விட்டது. பச்சை கீரைகள் இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று. இன்றும் இவ்வூர் மக்கள் நிறைய பேர் காலை 05.45 மணிக்கு வரும் ஒரே ஒரு சிற்றுந்து பிடித்து பழனி முழுவதும் வாணிபம் செய்கின்றனர்.

மாத அமாவாசை தினத்தில் படபத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் முக்கிய வீதிகளில் நடைபெறும் அதில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். படபத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள இரு காவல் குதிரைகள் மிகவும் சிறப்பாகும்.

இவ்வூரில் வடக்கே கோயிலுக்கு எதிரில் இரண்டு சுமை தாங்கி கற்கள் உள்ளன. இவ்வூரில் தெற்கே களிக்கநாயக்கன் பட்டி எல்லையில் கொட்டாம்பாறை என ஒரு இடி விழுந்த பாறை உள்ளது. அதில் என்றுமே நீர் வற்றியதாக இருந்தது இல்லை. இவ்வூருக்கு கிழக்கு எல்லையில் ஐந்து காற்றாலைகள் உள்ளன. இவை தனியார் நிறுவிய காற்றாலைகள் ஆகும்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-20.
  6. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  7. http://wikimapia.org/#lang=ta&lat=10.499901 &lon=77.535710 &z=16&m=w
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொல்லம்பட்டி&oldid=3657342" இலிருந்து மீள்விக்கப்பட்டது