மேலுமலைக் கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலுமலைக் கணவாய்
மேலுமலைக் கணவாய்
மேலுமலைக் கணவாய்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி மாவட்டம்

மேலுமலைக் கணவாய் என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் அமைந்த ஒரு கணவாய் ஆகும். இது கிருட்டிணகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] இது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம் மேலுமலை என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது.

இதுவே ஒசூரை கிருட்டிணகிரியுடன் இணைக்கிறது.

இதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை 7 செல்வதால் தமிழகத்தின் முதன்மையான வணிக வழித்தடமாக உள்ளது. தமிழகத்திலிருந்து சாலை வழியாக ஒசூர், பெங்களூர் ஆகியவற்றை அடையும் பெருமளவிலான பொருட்கள் இக்கணவாய் வழியாகவே செல்லுகின்றன. இக்கணவாய் பகுதி காடுகள் அடர்ந்த பகுதியாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலுமலைக்_கணவாய்&oldid=3777184" இருந்து மீள்விக்கப்பட்டது