மேகலிங்க சாஸ்தா திருக்கோவில், திருநெல்வேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகலிங்க சாஸ்தா திருக்கோவில் மற்றும் அடுக்கு சுடலை மாடன் திருக்கோவில் சிந்துபூந்துறை, திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. பூரணா தேவி மற்றும் புஷ்கலா தேவியருடன் சுயம்பு லிங்கமான மேகலிங்க சாஸ்தா காட்சி தருகிரார். இக்கோவிலுடன் இணைந்த அடுக்கு சுடலை மாடன் கோவில் மற்றும் பேச்சியம்மன், அய்யனார் போன்ற இதர பரிவார மூர்த்திகளும் கோவில் நிர்வாகத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1996 ம் ஆண்டு மேகலிங்க சாஸ்தா மற்றும் இதர தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.