மூன்றாம் கிளியோபாட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் கிளியோபாட்ரா
மூன்றாம் கிளியோபாட்ரா
பண்டைய எகிப்தின் பெண் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்கிமு 142—131[1]
முன்னையவர்எட்டாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ரா
பின்னையவர்இரண்டாம் கிளியோபாட்ரா
இணை ஆட்சியாளர்கள்எட்டாம் தாலமி
இரண்டாம் கிளியோபாட்ரா
ஆட்சிக்காலம்கிமு 127–101
முன்னையவர்இரண்டாம் கிளியோபாட்ரா
பின்னையவர்பத்தாம் தாலமி மற்றும் மூன்றாம் பெரெனிஸ்
இணை-ஆட்சியாளர்கள்எட்டாம் தாலமி (கிமு 127–116)
இரண்டாம் கிளியோபாட்ரா (கிமு 124–116)
ஒன்பதாம் தாலமி (கிமு 116–107)
பத்தாம் தாலமி (கிமு 107–101)
பிறப்புகிமு 160 – 155
இறப்புகிமு 101
துணைவர்எட்டாம் தாலமி (சித்தப்பா-வளர்ப்புத் தந்தை
குழந்தைகளின்
பெயர்கள்
ஒன்பதாம் தாலமி
பத்தாம் தாலமி
நான்காம் கிளியோபாட்ரா
சிரியாவின் கிளியோபாட்ரா செலினா
டிரிஃபேனா
அரசமரபுதாலமி
தந்தைஆறாம் தாலமி
தாய்இரண்டாம் கிளியோபாட்ரா

மூன்றாம் கிளியோபாட்ரா (Cleopatra III கிமு 160/155 – 101) பண்டைய பிற்கால எகிப்திய அரசிகளில் ஒருவர்.[2] எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தைச் சேர்ந்த பெண் அரசி ஆவார்.

இவர் முதலில் தனது தாய் இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் தனது கணவன் எட்டாம் தாலமியுடன் சேர்ந்து (கிமு 142- 131) வரையிலும் பின்னர் மீண்டும் (கிமு 127 - 116) காலகட்டத்திலும் இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டார். பின்னர் மூன்றாம் கிளியோபாட்ரா தனது மகன்களான ஒன்பதாம் தாலமி மற்றும் பத்தாம் தாலமியுடன் சேர்ந்து (கிமு 116 - 101) காலகட்டத்தில் எகிப்தின் இணை ஆட்சியாளராக ஆட்சி செய்தார்.

கிமு 107-இல் மூன்றாம் கிளியோபாட்ரா, ஒன்பதாம் தாலமியை அலெக்சாந்திரியா நகரத்திலிருந்து துரத்தி விட்டு, தனது மகன் பத்தாம் தாலமியை இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆண்டார். ஆறு ஆண்டுகள் கழித்து கிமு 101-இல் பத்தாம் தாலமி, மூன்றாம் கிளியோபாட்ராவைக் கொலை செய்து விட்டு, பத்தாம் தாலமியின் மனைவியும், மூன்றாம் கிளியோபாட்ராவின் பேத்தியுமான மூன்றாம் பெரெனிசை இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆட்சி செய்தார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_கிளியோபாட்ரா&oldid=3494912" இலிருந்து மீள்விக்கப்பட்டது