மு. கருப்பையா
மு. கருப்பையா (பி: 1941) மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். மலேசியத் தமிழ்க் கவியுலகில் நன்கு அறியப்பட்டவர். இவரின் புனைபெயர் காரைக்கிழார் என்பதாகும்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
இவர் 1958 முதல் எழுத்துத்துறையிலும், கவிதைத் துறையிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். நூற்றுக்கணக்கான கவிதைகளை யாத்துள்ள இவரின் ஆக்கங்கள் மலேசிய தேசிய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. 2000-ஆம் ஆண்டு, கோலாலம்பூரில் ' உலகத் தமிழ் கவிதை மாநாடு' இவரது தலைமையில் நடந்தேறியது. இவர், கோலாலம்பூரின் 'முச்சங்கத்தின்' தலைவராக இருந்து சேவையாற்றி வருகிறார்.
நூல்கள்[தொகு]
- 'அலை ஓசை' முழு நீளக் காவியம், 1975
- 'கணை' கவிதை நூல்
- 'பயணம்' நாவல்
மேலும் சில நூல்களை இவர் வெளியிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
கவியரங்குகள்[தொகு]
மலேசியாவில் பரந்துபட்ட ரீதியில் இவர் பல கவியரங்குகளை நடத்தியும் பாடியும் உள்ளார். மேலும், இசைப்பாடல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்.