உள்ளடக்கத்துக்குச் செல்

மு. இளங்கோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. இளங்கோவன்
அக்டோபர் 2008-இல் இளங்கோவன்
பிறப்பு20 சூன் 1967 (1967-06-20) (அகவை 58)
இடைக்கட்டு, திருச்சினாப்பள்ளி மாவட்டம்,
மதராசு மாநிலம்
(தற்போது அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா
அறியப்படுவதுதமிழ் ஆய்வாளர், எழுத்தாளர்
பெற்றோர்
  • மு. அசோதை அம்மாள்
  • சி. முருகேசன்

மு. இளங்கோவன் என அறியப்படும் முருகேசன் இளங்கோவன் (Mu. Elangovan; பிறப்பு: 20 சூன் 1967) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆய்வாளர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பிறப்பு

[தொகு]

இன்றைய அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் 20 சூன் 1967 அன்று மு. அசோதை அம்மாள் - சி. முருகேசன் இணையருக்கு மகனாகப் பிறந்தார் இளங்கோவன்.

கல்வி

[தொகு]

உள்கோட்டையில் உள்ள அரசினர் தொடக்கப்பள்ளி (1972-1976), அரசினர் உயர்நிலைப் பள்ளி (1976 -1982) ஆகியவற்றில் பயின்றார். பின் 1982-84 காலகட்டத்தில் மீன்சுருட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இதைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் விவசாயப் பணிகளால் கல்வியை இடைநிறுத்தினார்.

புலவர் ந. சுந்தரேசனார் எனும் தமிழாசிரியரின் நெறிப்படுத்தலில் திருப்பனந்தாள் காசிமடத்துக்கு உட்பட்ட செந்தமிழ்க் கல்லூரியில் 1987 முதல் 1992 வரை இளங்கலை, முதுகலை பட்டங்களை முதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேறிப் பெற்றார். பின்பு புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க. ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல் துறையில் “மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்" எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர் (1992-1993). பின்பு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிதியுதவியுடன் “பாரதிதாசன் பரம்பரை’" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை (1993 - 1996) நிறைவு செய்தார். இந்த ஆய்வில் தமிழ்க்கவிதை வரலாற்றில் பல கவிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் பதிவு செய்தார். இதே காலகட்டத்தில் மாணவராற்றுப்படை (1990), பனசைக்குயில் கூவுகிறது (1991), அச்சக ஆற்றுப்படை (1993), விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள் (1995) முதலான நூல்களை வெளியிட்டார்.

பணிகள்

[தொகு]

1997-இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆவணம்" எனும் திட்டப்பணியில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார். வீ. ப. கா. சுந்தரம் இயற்றிய தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதிக்கான பணி உதவியாளராக 1998-99 காலகட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயலாற்றினார். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்கு உரிமையான கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக (16 சூன் 1999 - 17 ஆகத்து 2005) பணியாற்றினார். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) தேர்ந்தெடுக்கப் பெற்று 18 ஆகத்து 2005 முதல் புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

கவிதையில் ஆர்வம் கொண்ட இளங்கோவன், தமிழக நாட்டார் பாடல்களைப் பாடியும், ஆய்வு செய்தும் வருகிறார். கேரள, ஈழத்து நாட்டார் பாடல்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.[மேற்கோள் தேவை] திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் வழியே இவரின் நாட்டார் பாடல்கள் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக ஒலிபரப்பப் பட்டுள்ளன.

இளங்கோவனின் மேற்பார்வையில் வயல்வெளிப் பதிப்பகம் (இடைக்கட்டு), பாரதிதாசன் உயராய்வு மையம், புலவர் ந. சுந்தரேசனார் ஆய்வு நூலகம் இயங்குகின்றன.

நூல்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு வகை குறிப்பு பதிப்பகம்
1990 மாணவராற்றுப்படை வயல்வெளிப் பதிப்பகம்
1991 பனசைக்குயில் கூவுகிறது
1992 அச்சக ஆற்றுப்படை
1994 மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் வரலாற்றுவரைவியல்
1995 விடுதலைப் போராட்ட வீரர்

வெ. துரையனார் அடிகள்

வாழ்க்கை வரலாறு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற

தென்னாபிரிக்கத் தமிழர் வெ. துரையனார் குறித்த வரலாறு

1996 பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு
1997 இலக்கியம் அன்றும் இன்றும்
மணல்மேட்டு மழலைகள்
2000 தமிழிசைக் கலைக்களஞ்சியம்

(நான்காம் தொகுதி)

கலைக்களஞ்சியம் முதன்மைத் தொகுப்பாசிரியர் - வீ. ப. கா. சுந்தரம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
2001 வாய்மொழிப் பாடல்கள் வயல்வெளிப் பதிப்பகம்
பாரதிதாசன் பரம்பரை
2002 பழையன புகுதலும்
அரங்கேறும் சிலம்புகள்
2003 பொன்னி பாரதிதாசன் பரம்பரை [?]
2004 பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.)
2006 நாட்டுப்புறவியல்
2009 அயலகத் தமிழறிஞர்கள்
2009 (?)

/2016

இணையம் கற்போம்
2013 கட்டுரைக் களஞ்சியம்
செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்
2019 தொல்லிசையும் கல்லிசையும்
2022 இசைத்தமிழ்க் கலைஞர்கள் - நோக்கீட்டு நூல்
2024 இணைய ஆற்றுப்படை

விருதுகள்

[தொகு]

தன் கல்விக் காலத்தில் தமிழ்நாட்டு அளவிலும் கல்லூரி, பல்கலைக்கழக அளவிலும் பல கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றார் இளங்கோவன். இவை தவிர்த்த குறிப்பிடத்தக்க விருதுகள்:

ஆண்டு விருது வழங்கியவர் / அமைப்பு குறிப்பு
> 1995 தங்கப் பதக்கம்

(முதல் பரிசு)

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

/ செயங்கொண்டம் தமிழோசை நற்பணிமன்றம்

“தாய்மொழிவழிக் கல்வி" எனும் தலைப்பிலான

ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் [மேற்கோள் தேவை]

? தங்கப்பதக்கம்

(இரண்டு)

நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் "மூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள்"

மற்றும் "பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு" எனும் ஆய்வுக்கட்டுரைகளுக்காக.[மேற்கோள் தேவை]

2010 செம்மொழி இளம் அறிஞர் விருது தமிழ்நாட்டு முதலமைச்சர்

"கலைஞர்" மு. கருணாநிதி

/ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்[1]

மார்ச்சு 28 அன்று வழங்கப்பட்டது ;

ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களுடன்

2021 தூய தமிழ் ஊடக விருது

(காட்சி ஊடகப் பிரிவு)

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்

அகரமுதலித் திட்ட இயக்ககம்

இணையம் வலையொளி அலைவரிசைக்காக.[2][3][மேற்கோள் தேவை]
2023 தமிழ் விக்கி பெரியசாமித் தூரன் விருது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (ஜெயமோகன்)

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._இளங்கோவன்&oldid=4393152" இலிருந்து மீள்விக்கப்பட்டது