மு. அரங்கநாதன் (குன்னூர்)
தோற்றம்
மு. அரங்கநாதன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப்பேரவை | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | கே. அரங்கசாமி |
| பின்னவர் | எம். சிவக்குமார்[1] |
| தொகுதி | குன்னூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஏப்பிரல் 18, 1933 |
| இறப்பு | 10 நவம்பர் 2014 (அகவை 81) |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| வாழிடம் | மாரியம்மன் கோவில் தெரு, குன்னூர், நீலகிரி மாவட்டம் |
| தொழில் | வணிகர் |
மு அரங்கநாதன் (M. Ranganathan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் பிறந்தார். குன்னூர் நகரப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை முடித்துள்ள அரங்கநாதன், வணிகர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 1980 | குன்னூர் | திமுக | 34,424 | 56.07 |