முள்ளியவளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முள்ளியவளை | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - முல்லைத்தீவு |
அமைவிடம் | 9°13′09″N 80°45′52″E / 9.219215°N 80.764395°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
வரலாறு[தொகு]
முள்ளியவளை இலங்கையின் வடகீழ்பால் இலங்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு புராதன ஊராகும். வன்னியரசர்கள், யாழப்பாண அரசர்கள் காலம் தொட்டு இருந்துவரும் ஒரு நீண்ட வரலாறுடைய இடமான இவ்வூர் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ளது.இங்கு கலையும் பண்பாடும் கல்வியும் பாங்கோடு வளர்ந்துவருவது அவதானிக்கத்தக்கது.
இங்கு வாழும் மக்கள் குறிப்பாக அன்றி பல்வகைப்பட்ட தொழில்களை ஆற்றி வருகின்றனர். அண்மைக்காலமாக கல்வியில் குறித்த முன்னேற்றம் கண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு இங்கு உள்ள முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி முக்கிய பங்கு ஆற்றுவது மறக்க முடியாத உண்மையாகும்.
முள்ளியவளை பற்றி யாழ்ப்பாணவைபவ கௌமுதியில் "முள்ளியவளை அக்காலத்தில் 'வலடிடி' , 'வற்கம','மேற்பற்று' என பிரிக்கப்பட்டிருந்தததுடன்,வன்னி பிரிவுகளில் அதி விஷேசமானதும் செழிப்பான இராச்சியமுமாகும்" என குறிப்பிடப்படுகிறது.
ஆலயங்கள்[தொகு]
- காட்டா விநாயகர் கோயில்
- கல்யாண வேலவர் கோயில்
- முள்ளியவளை சந்தி அம்மன் கோயில்
- வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்
- ஐயனார் கோயில்
- வைரவர் கோயில்
பாடசாலைகள்[தொகு]
- முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி
- முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம்
- முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்
- முள்ளியவளை றோ.க.த.க பாடசாலை
தேவாலயங்கள்[தொகு]
- திரேசா தேவாலயம்
இங்கு பிறந்தோர்[தொகு]
இசைத்தமிழ் கலைஞர்கள்[தொகு]
நாடகத்தமிழ் கலைஞர்கள்[தொகு]
இயற்றமிழ் கலைஞர்கள்[தொகு]
- சி. ச. அரியகுட்டிப்பிள்ளை
- முல்லைமணி கலாநிதி வே. சுப்பிரமணியம்
- சிவனேசன் வே. கந்தையா
- அரியான் பொய்கை கை. செல்லத்துரை
- கோ. குட்டித்தம்பி
- த. கைலாயபிள்ளை
- அ. பாலமனோகரன்
- முல்லையூரான் மு. சிவராசா
- கணுக்கேணியூர் ஐங்கரலிங்கன்
- இளைய அப்துல்லாஹ்
கல்வியாளர்கள்[தொகு]
- பேராசிரியர் நா. சுப்பிரமணிய ஐயர்
- பேராசிரியர் ம. இரகுநாதன்
- கலாநிதி வே. சுப்பிரமணியம் (முல்லைமணி)