மு. இளங்கோவன்
Appearance
(முனைவர் மு. இளங்கோவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மு. இளங்கோவன் | |
---|---|
![]() முனைவர் மு. இளங்கோவன் | |
பிறப்பு | 20 சூன் 1967 இடைக்கட்டு, திருச்சினாப்பள்ளி மாவட்டம், மதராசு மாநிலம் (தற்போது அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
அறியப்படுவது | தமிழ் ஆய்வாளர், எழுத்தாளர் |
பெற்றோர் | சி. முருகேசனார், மு. அசோதை அம்மாள் |
மு. இளங்கோவன் (Mu. Elangovan; பிறப்பு: 20 சூன் 1967) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆய்வாளர் ஆவார்.
தொடக்க வாழ்க்கை
[தொகு]இன்றைய அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் 20 சூன் 1967 அன்று மு. அசோதை அம்மாள் - சி. முருகேசன் இணையருக்கு மகனாகப் பிறந்தார் இளங்கோவன்.
கல்வி
[தொகு]- தொடக்கக் கல்வி - அரசினர் தொடக்கப்பள்ளி, உள்கோட்டை (1972-1976)
- உயர்நிலைக் கல்வி - அரசினர் உயர்நிலைப் பள்ளி, உள்கோட்டை (1976 -1982)
- மேல்நிலைக் கல்வி - அரசினர் மேல்நிலைப் பள்ளி, மீன்சுருட்டி (1982-1984)
- மூன்றாண்டுகள் விவசாயப் பணிகளால் கல்வியில் இடைவெளி.
- இளங்கலை, முதுகலைப் பட்டம் - திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரி (1987-1992)
- ஆய்வியல் நிறைஞர் பட்டம் (தலைப்பு:மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்) - புதுவைப் பல்கலைக்கழகம் (1992-1993)
- முனைவர் பட்டம் (தலைப்பு: பாரதிதாசன் பரம்பரை) - பாரதிதாசன் பல்கலைக்கழகம் (1993 - 1996)
பணிகள்
[தொகு]- மாணவப் பருவத்தில் மாணவராற்றுப்படை (1990), பனசைக்குயில் கூவுகிறது (1991), அச்சக ஆற்றுப்படை (1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள் முதலான நூல்களை வெளியிட்டார்.
- 1997-இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆவணம்" எனும் திட்டப்பணியில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார்.
- 1998-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசை மேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் எனும் நூலெழுத அவரின் உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்து களஞ்சியத்தின் நான்காம் தொகுதி வெளிவர உதவினார்.
- மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவர்களின் அறநிலைக்கு உரிமையான கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் ஜூன் 16, 1999 முதல் ஆகஸ்ட் 17, 2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
- இந்திய அரசின் நடுவண் தேர்வாணையத்தால் (UPSC) தேர்ந்தெடுக்கப் பெற்று ஆகஸ்ட் 18, 2005 முதல் புதுவையில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
- கவிதைத் துறையில் ஆர்வம் கொண்ட இவர் தமிழகத்தில் வழங்கும் நாட்டுப்புறப்பாடல்களைப் பாடவும், ஆய்வு செய்யவும் திறன் பெற்றுள்ளார். மேலும் கேரள, ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.[மேற்கோள் தேவை]
- திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் வழியாக இவர்தம் நாட்டுப்புறப்பாடல்கள் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக ஒலிபரப்பப் பட்டுள்ளன.
- இவரின் பிறந்த ஊரில் வயல்வெளிப் பதிப்பகமும், பாரதிதாசன் உயராய்வு மையமும், புலவர் ந. சுந்தரேசனார் ஆய்வு நூலகமும் இவர் மேற்பார்வையில் இயங்குகின்றன.
விருதுகள்
[தொகு]மு. இளங்கோவன் படிக்கும் காலத்தில் தமிழக அளவில் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் பல கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்கள். சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.
- செயங்கொண்டம் தமிழோசை நற்பணிமன்றம் நடத்திய “தாய்மொழிவழிக் கல்வி’ எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் முதல்பரிசாகத் தங்கப்பதக்கம் பெற்றுப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களினால் தங்கப்பதக்கம் சூட்டப்பெற்றவர்.[மேற்கோள் தேவை]
- நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய கட்டுரைப்போட்டியில் "மூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள்" எனும் தலைப்பிலும், "பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு" எனும் தலைப்பிலும் இருமுறை ஆய்வுக்கட்டுரை எழுதி இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார்.[மேற்கோள் தேவை]
- இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசை தமிழக முதல்வர் கருணாநிதி 2010 மார்ச் 28 இல் வழங்கினார்[1].
- தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வழங்கும் விருதான தூய தமிழ் ஊடக விருது காட்சி ஊடகப் பிரிவில் இவரது இணையம் (வலையொளி) எனும் ஊடகத்திற்கு வழங்கப்பெற்றது.[2] [3]
- எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையில் உருவான தமிழ் விக்கி - பெரியசாமித் தூரன் விருது 2023 இல் பெற்றவர்.
எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்
[தொகு]- இணைய ஆற்றுப்படை(2024)
- இசைத்தமிழ்க் கலைஞர்கள் - நோக்கீட்டு நூல்(2022)
- தொல்லிசையும் கல்லிசையும்(2019)
- மணல்மேட்டு மழலைகள்
- இலக்கியம் அன்றும் இன்றும்
- வாய்மொழிப்பாடல்கள்
- பழையன புகுதலும்
- அரங்கேறும் சிலம்புகள்
- பாரதிதாசன் பரம்பரை
- பொன்னி பாரதிதாசன் பரம்பரை
- பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.)
- நாட்டுப்புறவியல் (வயல்வெளிப் பதிப்பகம்,2006)
- அயலகத் தமிழறிஞர்கள் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
- இணையம் கற்போம் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
- பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு
- செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்
- கட்டுரைக் களஞ்சியம்
- அச்சக ஆற்றுப்படை
- மாணவராற்றுப்படை
- பனசைக் குயில் கூவுகிறது
- விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்(ப.ஆ)
- மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்