முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி52

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி52 (PSLV-C52) [1] என்பது இந்திய முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV) திட்டத்தின் 54வது பணியாகும். முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV)-C52 ஆனது 14 பிப்ரவரி 2022 அன்று 05:59 (IST) மணிக்கு ரிசாட்-1A(ஈஓஎஸ்-04), இன்ஸ்பைர்சாட், ஐஎன்எஸ்-2டிடி ஆகியவற்றை அதன் முக்கிய தாங்குசுமையாகக் கொண்டு ஏவப்பட்டது. [2]

விவரங்கள்[தொகு]

முனைய துணைக்கோள் ஏவுகலம்-C52 இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகலமானது முதன்மை தாங்குசுமையாக, ரிசாட்-1எ ஐயும் மற்ற 2 செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்றது. இவை இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகத்திலிருந்து இன்ஸ்பைர்சாட் ஆகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திடமிருந்து ஐஎன்எஸ்-2டிடி தொழில்நுட்ப விளக்கதாரராகவும் இருக்கும். [3]

ஏவுதல் கால அட்டவணை[தொகு]

பிஎஸ்எல்வி-சி52 14 பிப்ரவரி 2022 அன்று இந்திய சீர் நேரம் 5:59 மணிக்கு ஏவப்பட்டது.

பணி கண்ணோட்டம[தொகு]

பிஎஸ்எல்வி-சி52 ஏவுகலன் நான்கு நிலைகளைக் கொண்டது; ஒவ்வொன்றும் தன்னிச்சையாக, அதன் சொந்த உந்துவிசை அமைப்புடன், அதன் மூலம் சுதந்திரமாக செயல்படும் திறன் கொண்டது. முதல் மற்றும் மூன்றாவது நிலைகள் கூட்டு திட உந்துசக்திகளைப் பயன்படுத்துகின்றன, இரண்டாவது மற்றும் நான்காவது நிலை பூமியில் சேமிக்கக்கூடிய திரவ உந்துசக்தியைப் பயன்படுத்துகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "PSLV". Space.skyrocket.de. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
  2. U. Tejonmayam (Feb 13, 2022). "isro: Countdown starts for Isro's PSLV-C52/EOS-04 launch | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  3. Livemint (2022-02-13). "ISRO to launch PSLV-C52 carrying three satellites tomorrow. Check timings". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.