முத்துப்பேட்டை தர்கா
முத்துப்பேட்டை தர்கா என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை நகரில் உள்ள தர்கா ஆகும். இங்கு ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் இசுலாமிய சூபி ஞானி அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வரலாறு[தொகு]
இந்த தர்கா இந்திய துணைக்கண்டத்தின் சுமார் ஆயிரம் வருடங்கள் மிகப்பழமையான தர்கா ஆகும். இது இஸ்லாமிய கட்டுமான முறைகளின்படி கட்டப்பட்டதாகும். சமூக சம உரிமை, பாகுபாடின்மை இன்றி முத்துப்பேட்டை தர்காவிற்கு அனைத்து சமுதாய மக்களும் வருகை தருகின்றனர். இது ஜம்பவனோடை தர்கா எனவும் அழைக்கப்படுகிறது.[1]
கந்தூரி விழா[தொகு]
மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா உள்ளது. இங்கு கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Tourist Guide to Tamil Nadu. Sura Books. பக். 76. ISBN 81-7478-177-3, ISBN 978-81-7478-177-2.
- ↑ முத்துப்பேட்டை தர்கா[தொடர்பிழந்த இணைப்பு] தினகரன், 3 ஏப்ரல் 2015.