முதலாம் விசய மாணிக்கியா
| முதலாம் விசய மாணிக்கியா | |
|---|---|
| திரிபுராவின் மகாராஜா | |
| ஆட்சிக்காலம் | 1488 |
| முன்னையவர் | பிரதாப் மாணிக்கியா |
| பின்னையவர் | முகுத் மாணிக்கியா |
| Consort | தைத்யநாராயாணனின் மகள் |
| மரபு | மாணிக்கிய வம்சம் |
| தந்தை | பிரதாப் மாணிக்கியா |
| தாய் | தைத்யநாராயாணனின் சகோதரி |
முதலாம் விசய மாணிக்கியா (Vijaya Manikya I) (இறப்பு சுமார் 1488 பொ.ச.) 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிலகாலம் திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்ச அரசனாவார்.
இவருக்கு சிறுவயதாக இருக்கும்போது இவரின் தந்தையாக இருந்திருக்கக்கூடிய இவரது முன்னோடி பிரதாப் மாணிக்கியாவின் படுகொலைக்குப் பின்னர் பதவிக்கு வந்தார்.[1] பொ.ச.1488 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு செப்புத் தகடு இவரது பெயருடன் பொறிக்கப்பட்டுள்ள போதிலும், இவரது ஆட்சிக்கான காலக்கெடுவை வழங்குகிறது என்றாலும், இவரது ஆட்சி திரிபுராவின் அரச வரலாற்றைக் கூறும் "ராஜ்மாலா" வில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளது.[2] 'ராஜ்மாலா' இவரை அதே பெயரில் உள்ள இவரது மிகவும் பிரபலமான உறவினரான இரண்டாம் விசய மாணிக்கியாவுடன் குழப்பி, இவரது வாழ்க்கையின் சில விவரங்களை பிந்தையவருடன் முரண்பட்டதாகக் காட்டுகிறது.[3]
இவர் தனது ஆட்சியை தனது தாய்வழி மாமாவும், இராச்சியத்தின் உண்மையான சக்தியாக இருந்த இராணுவத் தலைவருமான தைத்யநாராயணனின் கட்டுப்பாட்டில் கழித்ததாகத் தெரிகிறது. பிந்தையவர் தனது மகளையும் இவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.[3][4] இருப்பினும், இவர் சிறிது காலம் மட்டுமே ஆட்சி செய்து இளமையிலேயே இறந்தார். அடுத்த ஆண்டு பிரதாப்பின் தம்பி முகுத் மாணிக்கியாவின் பெயரைக் கொண்ட நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளன.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Roychoudhury, Nalini Ranjan (1983). Tripura through the ages: a short history of Tripura from the earliest times to 1947 A.D. Sterling. p. 16.
- ↑ Sur, Hirendra Kumar (1986). British Relations with the State of Tripura, 1760-1947. Saraswati Book Depot. p. 221.
- ↑ 3.0 3.1 Sircar, D.C. (1975). The Tripura Tradition Tested by Coins and Inscriptions. Numismatic Society of India, P.O. Hindu University. p. 109.
- ↑ (Roychoudhury 1983, ப. 106)