முதலாம் நந்திவர்மன்
Jump to navigation
Jump to search
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
இடைக்காலப் பல்லவர்கள் | |
விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
கந்தவர்மன் I | வீரவர்மன் |
கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
விட்ணுகோபன் II | குமாரவிட்ணு II |
கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
புத்தவர்மன் | நந்திவர்மன் I |
விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
சிம்மவர்மன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | கிபி 630 - 668 |
மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | கிபி 732 - 769 |
தந்திவர்மன் | கிபி 775 - 825 |
நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | கிபி 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | கிபி 850 - 882 |
அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
தொகு |
முதலாம் நந்திவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
காலம்[தொகு]
இவனது தந்தையான மூன்றாம் கந்தவர்மன் காலம் கி.பி. 460-475 என்பதாலும், விட்ணுகோபன் ஈறான அரசர் பலர் இறந்தபின் பிறந்தவன்: சிவபிரான் அருளால் வன்மை மிக்க நாக அரசனை நடனம் செய்வித்தான் என்று ஐந்தாம் நூற்றாண்டு பட்டயம் கூறுவதாலும் இவனது காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் அமைந்தது எனக் கொள்ளலாம்.[1]
நாக அரசன்[தொகு]
தென்னிந்தியாவில் சூட்டுநாகர், கதம்பர், சாளுக்கியர் ஆகியவர்களே தங்களை நாகர்கள் எனக்கூறினர்.[2] இவர்களில் சூட்டுநாகர் இந்த நந்திவர்மன் காலத்தில் மறைந்துவிட்டனர். இரவிவர்மனுக்குப் பின் வந்த கதம்பர் போர் செய்ததாக குறிப்புகள் இல்லை. அதனால் அக்காலத்தில் அதிகம் போரிடுவர்களாக அறியப்படும் சாளுக்கியர்களில் ஜெயசிம்மன் அல்லது இரணதீரனே அந்த நாக அரசனாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.