முதலாம் இராசமல்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் இராசமல்லன் (816–843) என்பவன் மேற்குக் கங்க மரபைச் சேர்நத மன்னனாவான்

கங்க நாட்டின் நிலை[தொகு]

இவனுக்கு முன்னிருந்த இரண்டாம் சிவமாறன் சிறைப்பட்டிருந்த காலத்திலேயே கங்கநாடு இராட்டிரக்கூட மன்னர்களால் பிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கங்கர்களுக்கு ஆதரவாக இருந்த நுளம்பர்கள் விலகி, இராட்டிரகூடர்களின் ஆதரவுடன் மேலும் சில கங்க நாட்டு பகுதிகளைப் பெற்று தங்கள் நுளம்பப்பாடியுடன் இணைத்துக் கொண்டனர்.

நுளம்பர்களுடன் உறவு[தொகு]

நுளம்பர்களுடன் நல்லுறவை விரும்பிய இராசமல்லன் நுளம்பாதிராசனின் தங்கையை மணந்தான். தன் மகள் ஜெயபீயை போலால்சோர நுளம்பனுக்கு மணம் முடித்தான்.

உசாத்துணை[தொகு]

தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டிணன். பக்.181

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_இராசமல்லன்&oldid=2488195" இலிருந்து மீள்விக்கப்பட்டது